எதிர்நீச்சல் ஈஸ்வரியின் மகன் இவர் தான்... இவருக்காக தான் பல கஷ்டங்களையும் கடந்து வந்திருக்கிறார்
சென்னை: தீபாவளி பண்டிகையை பிரபலங்கள் பலரும் கொண்டாடிக் கொண்டிருக்கும்போது எதிர்நீச்சல் சீரியலில் ஈஸ்வரியாக நடிக்கும் கனிஹாவும் தன்னுடைய குடும்பத்தோடு கொண்டாடி மகிழ்ந்து இருக்கிறார்.
தன்னுடைய ஒரே மகனின் புகைப்படத்தை முதல்முறையாக வெளியிட்ட கனிஹாவிற்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
கனிஹாவின் மகன் இவ்வளவு வளர்ந்து விட்டாரா என்று பலர் வியப்பில் ஆழ்ந்து இருக்கின்றார்கள்.

சீரியலில் அறிமுகம்
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் ஈஸ்வரி கேரக்டரில் நடித்து வரும் நடிகை கனிஹா, இதற்கு முன்பு பல திரைப்படங்களில் நடித்திருக்கிறார். முன்னணி நடிகர்களுடன் கதாநாயகியாக நடித்த கனிஹா திருமணத்திற்கு பிறகு ஒரு குழந்தை பிறந்த பிறகு சிறிது நாட்கள் நடிப்பிற்கு லீவ் விட்டிருந்தார். தற்போது மீண்டும் நடிப்பை தொடங்கலாம் என்று நினைத்து இருந்தவருக்கு ஒரு சில திரைப்படங்களில் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அதே நேரத்தில் இந்த எதிர்நீச்சல் சீரியலில் இவருக்கு நடிக்க வாய்ப்பு வந்ததும் கேரக்டரின முக்கியத்துவத்தை பார்த்து சீரியலில் நடிக்க ஓகே சொல்லிவிட்டாராம்.

எதிர்நீச்சல் ஈஸ்வரி
எதிர்நீச்சல் சீரியலில் மாரிமுத்துவின் மனைவியாக இந்த சீரியலில் நடித்துக் கொண்டிருக்கிறார். இதை பார்த்த ரசிகர்கள் பலர் அஜித்துக்கு ஜோடியாக நடித்த கனிஹா இப்படி இவ்வளவு வயசு வித்தியாசம் இருப்பவருக்கு ஜோடியாக நடிக்க தொடங்கி விட்டார் என்று தங்களது ஆதங்கத்தை கமெண்ட் களில் தெரிவித்து வந்தனர்.

க்யூட்டான குடும்ப புகைப்படம்
சீரியலில் பிசியாக நடித்துக் கொண்டிருந்தாலும் கனிஹா தன்னுடைய கணவர் மற்றும் குழந்தையோடு தீபாவளி பண்டிகையை சிறப்பாக கொண்டாடி இருக்கிறார். அந்த புகைப்படங்களை தன்னுடைய ரசிகர்களிடம் பகிர்ந்து வாழ்த்துக்களை கூறியிருக்கிறார். முதல் முறையாக கனிஹாவின் மகனைப் பார்த்த ரசிகர்கள் பலர் அவருக்கு இவ்வளவு பெரிய பையன் இருக்கிறாரா? என்று வியப்பில் ஆழ்ந்து இருந்தாலும், வாழ்த்துக்களை கூறி வருகிறார்கள். அடிக்கடி மாடர்ன் உடையில் போட்டோ சூட் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வரும் கனிஹா தற்போது புடவையில் கணவன் மற்றும் மகனோடு இருக்கும் புகைப்படங்களில் கியூட்டாக இருப்பதாக பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

மருத்துவர் கூறிய அதிர்ச்சி செய்தி
கனிஹா கர்ப்பமாக இருக்கும் நேரத்தில் எல்லா கர்ப்பிணிகளும் செய்கின்ற மாதிரிதான் இவரும் ஸ்கேன் எல்லாம் செய்திருந்தாராம். ஆனால் அப்போது கூட இவருக்கு தனது குழந்தையை பற்றி எந்த ஒரு எதிர்மறையான தகவல்களையும் தெரிவிக்கவில்லையாம்? ஆனால் குழந்தை பிறந்த பிறகு இவரிடம் குழந்தையை காட்டவே இல்லையாம். குழந்தை பிறந்து பல மணி நேரங்களுக்கு பிறகு மருத்துவர் வந்து திடீரென்று இவர் அருகில் ஒரு நோட்டு புத்தகத்தில் ஹார்ட் படத்தை வரைந்து இவரிடம் காட்டி உங்கள், குழந்தையின் ஹார்ட்டில் பிரச்சனை இருக்கிறது, இன்று இரவு வரை அவன் தாங்க மாட்டான் என்று கூறி இருந்தாராம். அப்போது கனிஹாவிற்கு என்ன சொல்வது என்றே தெரியாமல் வாழ்க்கை இருண்டது போல இருந்ததாம்.

மகனுக்கு குவியும் ஆசீர்வாதங்கள்
கனிஹாவின் மகன் பிறக்கும்போது பல்வேறு கஷ்டங்களை கனிஹா சந்தித்திருக்கிறார். இவருடைய டெலிவரி நேரத்தில் இவர் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத வகையில் அவருடைய பையனுக்கு இதயத்தில் ஆபரேஷன் செய்திருக்கின்றனர். பிறந்த பச்சிளம் குழந்தைக்கு பல்வேறு ஊசிகள், மருந்துகள் செலுத்தி பாதுகாக்கப்பட்டு வந்த குழந்தை இப்போது இவ்வளவு பெரிய பையனாக வளர்ந்து விட்டாலும் ,இவர் நலம் பெற்று ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்று ரசிகர்கள் பலர் கனிஹாவின் பையனுக்கு வாழ்த்துக்களையும், ஆசீர்வாதங்களையும் கூறி வருகிறார்கள்.
-
Sani Peyarchi: சனிப்பெயர்ச்சி மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளும் பெறப்போகும் பலன்கள்.. முழு விவரம் -
விவாகரத்து முடியாமல் 'டூயட்' பாடினால் 10 ஆண்டு சிறை? - விஜய்க்கு சிக்கலாகும் பிரிவு 69.. மாட்டுனாரு -
அது விக்கெட் இல்லமா.. வான்கடே மைதானத்தில் துள்ளிக் குதித்த சாக்ஷி.. அமைதிபடுத்தி கிண்டல் செய்த தோனி -
பர்மிஷன் கொடுக்க டிரம்ப் யாரு? இந்தியாவின் இறையாண்மை அமெரிக்காவின் கையில் அடகு? ஷாக் சம்பவம் -
"கோடீஸ்வரர்".. ராஜ்யசபா எம்பியாகும் தேமுதிகவின் எல்கே சுதீஷ் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? -
அர்ஜுன் டெண்டுல்கர் திருமணத்திற்கு கூட வரலையே.. சுப்மன் கில் - சாரா டெண்டுல்கர் பிரேக் அப்? -
எங்களுடைய நட்சத்திர பேச்சாளரை இழந்துள்ளோம்.. ஆளுநர் ஆர்.என்.ரவி டிரான்ஸ்பர் குறித்து திமுக -
ஏழைகளின் ஏவுகணை.. இஸ்ரேல், அமெரிக்காவை அதிரவைக்கும் ஈரானின் குட்டி ஜாம்பவான்.. கேம் சேஞ்சர் -
தமிழ்நாட்டின் ஹிட்லர்.. மனைவி, மகளை விரட்டிவிட்டு மகளிர் தின விழாவா! விஜய்யை சாடிய இயக்குநர் அமீர் -
கோவையில் புதிய வீடு கட்டிய உரிமையாளருக்கு அரசு ஊழியர் தந்த ட்விஸ்ட்.. மறக்க முடியாத சம்பவம் -
விண்ணிலிருந்து.. பாய்ந்து வந்த அஸ்திரம்! ஒரே நொடியில் ஈரானின் எதிர்காலமே மாறிவிட்டது.. என்ன நடந்தது? -
உங்களுக்கு பதவி வேணும்னா.. அப்போ நான் எதுக்கு.. பிரேமலதாவிடம் பொங்கிய சுதீஷ்.. என்ன நடந்தது?












Click it and Unblock the Notifications