சிவகார்த்திகேயனிடம்.. அடுத்த தளபதி நீங்களா?ன்னு கேட்ட ரசிகர்கள்.. டக்னு வந்து விழுந்த பதிலை பாருங்க
சென்னை: அடுத்த தளபதி நீங்கள்தானா? என்று ரசிகர்கள் கேட்ட கேள்விக்கு சிவகார்த்திகேயன் தந்துள்ள பதில்தான் தற்போது இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது. இந்த பதிலை விஜய்யின் ரசிகர்களும் உற்று கவனித்து மனம் குளிர்ந்துபோய் உள்ளனர்.
மாஸ் ஹீரோவாக வலம் வந்துகொண்டிருப்பவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவர் சமீபத்தில் நடிகர் விஜய்யின் "கோட்" படத்தில் கேமியோ ரோல் ஒன்றில் நடித்திருந்தார்... அதில், வில்லனை சிவகார்த்திகேயனிடம் நடிகர் விஜய் ஒப்படைக்கும் காட்சியில், தன் கையில் இருந்த துப்பாக்கியையும் சிவகார்த்திகேயனிடம் கொடுப்பார்.
அப்போது சிவகார்த்திகேயன், "இதைவிட பெரிய வேலைக்கு போறீங்கனு நினைக்கிறேன். இனி இதை நான் பாத்துக்குறேன்" என்று பேசிய வசனம் சோஷியல் மீடியாவில் வைரலானது.. இதையடுத்து, இனி அடுத்த தளபதி என்று சிவகார்த்திகேயன் சூசகமாக சொல்வதாக பலர் தாறுமாறாக எழுதிவிட்டனர்..

சிவகார்த்திகேயன்: இந்நிலையில், நிகழ்ச்சி ஒன்றில் ரசிகர்களுடன் சிவகார்த்திகேயன் உரையாடிக்கொண்டிருந்தார். அப்போது, "அடுத்த தளபதி நீங்கள்தானா" என்று கூட்டத்திலிருந்து ரசிகர்கள் கூச்சலிட்டனர். அப்போது நடிகர் சிவகார்த்திகேயன், நடிகர் விஜய்யுடன் நடித்ததில் மகிழ்ச்சி. அந்த வாய்ப்பை கொடுத்த வெங்கட் பிரபுவுக்கு நன்றி.
இங்கு ஒரே தளபதிதான்.. ஒரே சூப்பர் ஸ்டார்தான்.. ஒரே தல தான். ஒரே உலக நாயகன் தான். அதனால், அவர்களின் அடுத்த இடத்தில் நான் என்ற பேச்சுக்கே இங்கு இடம் கிடையாது. அவர்கள் சினிமாவை எல்லாம் பார்த்துதான் நான் சினிமாவிற்கு வந்திருக்கிறேன்.
தவறான விஷயம்: அவர்களை போல நான் படங்கள் செய்து, ஹிட் கொடுத்து ஜெயிக்க வேண்டும் என்று நினைக்கலாம். ஆனால், அவர்களாகவே மாற வேண்டும் என்று நினைக்கக்கூடாது. அது சரியானதும் கிடையாது. அது மிகவும் தவறான விஷயம் என்று நான் நினைக்கிறேன்" என்றார். இப்போது சிவகார்த்திகேயன் அளித்த இந்த பதிலும் சோஷியல் மீடியாவில் வைரலாகி கொண்டிருக்கிறது.
இதனிடையே, சிவகார்த்திகேயன் - சாய்பல்லவி நடிப்பில் உருவாகியிருக்கும் "அமரன்" படம் விரைவில் திரைக்கு வரப்போவதால், இதற்கான புரோமோஷன் வேலைகள் தீவிரமாக நடந்து வருகிறது. இந்த படத்தில் பாலிவுட் நடிகர் புவன் அரோரா மற்றும் ராகுல் போஸ், லல்லு, ஸ்ரீகுமார், ஷியாம் மோகன் ஆகியோர் நடித்துள்ளனர். மேஜர் முகுந்த் வரதராஜன் கதாபாத்திரத்தில் நடிகர் சிவகார்த்திகேயேன் நடித்திருக்கிறார்.
எதிர்பார்ப்பு: எனினும், சாய்பல்லவி, இந்து ரெபாக்கா வர்கீஸ் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருப்பதால், இதற்கான எதிர்பார்ப்பு கூடிவருகிறது. இந்த படம் தீபாவளியை பண்டிகை முன்னிட்டு அக்டோபர் 31ம் தேதி வெளியாக உள்ளது ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது












Click it and Unblock the Notifications