புருஷன் பொண்டாட்டிக்குள்ள ஈகோன்னா அது எதுக்குங்க.. நடிகை நீலிமா பொளேர் கேள்வி
சென்னை: சன் டிவியின் சீனியர் சுட்டீஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நடிகை நீலிமா, தம்பதியர் ஒற்றுமைக்கு அற்புதமான மூன்று விஷயங்களைக் கூறினார். சின்னத்திரை, பெரிய திரை என்று ஒரு வலம் வந்த பிறகு தான் காதலித்த பையனை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆனார்.
இருப்பினும் தொழில் பக்தி காரணமாக திருமணமாகியும் குழந்தை பெற்றுக்கொள்வதை சிறிது காலம் தள்ளிப் போட்டும் இருந்தார்.
விஜய் டிவியின் நீயா-நானா நிகழ்ச்சியில் ஒரு முறை இவரும் கலந்துகொண்டு சின்னத்திரை நடிகர்களுக்கான வாய்ப்புக்கள் குறித்து பேசினார். அப்போதுதான் திருமணம் ஆகியிருந்த சமயம்.

வாய்ப்பில்லை
சின்னத்திரையில வாய்ப்பு கேட்டு போனா, திருமணமான நடிகையா, அப்படின்னா வேண்டாம்பான்னு சொல்லிடுவாங்க. என்ன காரணம்னு பார்த்தா, இது மெகா சீரியல், இவங்க உடனே கர்ப்பமாயிருவாங்க.. வயித்துல குழந்தை இருக்கும்போது சீன்ஸ் சூட் செய்வது கஷ்டம்னு வாய்ப்பு தர மாட்டாங்க. உடனே குழந்தை பெத்துக்குவோம்னு யார் சொன்னா, நீங்களே ஏன் முடிவு பண்றீங்கன்னு கேட்டு அனைவரையும் அதிர வைத்தார்.

செய்தார்.
சொன்னது போலவே காதல் சில வருடம், கல்யாணமாகி சில வருடங்கள் என்று கழித்து கடந்த இரு வருடம்தான் ஒரு பெண் குழந்தையைப் பெற்றெடுத்தார்.

ஒற்றுமைக்கு
சீனியர் சுட்டீஸ் நிகழ்ச்யில் இமான் அண்ணாச்சியிடம் பேசியபோது, கணவன் மனைவி ஒற்றுமைக்கு மூன்று விஷயங்களை யதார்த்தமாக கூறினார்.
என்னைவிட நீ அதிகமா சம்பாதிக்கறேன்னு கணவன் மனைவியுடன் ஈகோ பார்க்க கூடாது, உன்னைவிடா நான் அதிகமா சம்பாதிக்கறேன்னு மனைவி கணவனைக் குத்தி காண்பிக்க கூடாது. எல்லாம் நமக்குத்தானே..

வேலை
நான்தான குடும்பத்துக்கு அதிகம் உழைக்கிறேன்...நீ சும்மா என்று கணவன் மனைவியையோ, மனைவி கணவனையோ சாதாரணமாக எடைப்போட்டுவிடக் கூடாது.

ஆதரவாக
உனக்கு கஷ்டம் வரும்போது நான் இருக்கிறேன், எனக்கு கஷ்டம் வரும்போது நீ பார்த்துக்கொள் என்று இருவரும் புரிதலுடன் இருக்க வேண்டும் என்கிறார். ஈகோதான்மா எல்லார்கிட்டயும் இருக்கு, அதனாலதான் தூக்கிப் போட்டுட்டு போயிடறாங்கன்னு இமான் அண்ணாச்சி சொல்கிறார்.

ஈகோதான் தாலி
அப்படீன்னா அவங்களுக்கு கல்யாணமே வேண்டாம், ஈகோவை தாலியா கட்டிக்கிட்டு வாழ வேண்டியதுதான் என்று நீலிமா சிரித்துக்கொண்டே சொன்னார் .. அதை விடுங்க. அது என்ன நீலிமான்னு கேட்டா, நீலிமா என்பது அம்மனின் பெயராம். நல்லதும்மா.
-
குக் வித் கோமாளியில் பஞ்சாயத்து மேல் பஞ்சாயத்து! மணிமேகலை இடத்தில் ஜோயா! புதிதாக வந்த ரோஜா! காரணம் இருக்கு! -
மாதம்பட்டி ரங்கராஜனின் சவால்! நான் இந்த இடத்தில் வந்து நிற்க காரணம்.. உருக்கமாக போஸ்ட் போட்ட ஜாய்! அடுத்த பஞ்சாயத்து -
சிறகடிக்க ஆசை: சிந்தாமணி சதி! உண்மைகளை உளறிய மனோஜ், ஜெயிலுக்கு போகும் விஜயா! மீனா செய்த செயல் -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்! -
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள் -
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
ஏசியை 18 டிகிரியில் வைத்தால் கரண்ட் பில்லில் இவ்வளவு மாற்றமா?.. தமிழக மின்சார வாரியம் கணக்கு இதோ -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம்












Click it and Unblock the Notifications