Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தேவாவுக்கு மறுப்பு.. இரட்டை அர்த்த பாடலால் வருத்தத்தில் கே.எஸ் சித்ரா.. இளையராஜா சொன்ன வார்த்தை..?

Subscribe to Oneindia Tamil

சென்னை: பாடகி கே.எஸ் சித்ரா தன்னுடைய ஆரம்ப காலத்தில் நடந்த பல சுவாரசியமான தருணங்களை பற்றி பேசியிருக்கிறார்.

தேவா இசை அமைத்த பாடலில் தனக்கு கூச்சமான வார்த்தைகள் இருந்ததால் அந்த பாடலை சித்ரா பாட மறுத்து விட்டாராம்.

பிறகு சித்ராவை அழைத்த இளையராஜா சித்ராவிற்கு பல அறிவுரைகளை கூறினாராம். அதை இப்ப வரைக்கும் நாம் மீறவில்லை என்று பல தகவல்களையும் பகிர்ந்து இருக்கிறார்.

Why singer KS Chithra refused to sing the music composer Deva song

பல ஹிட் பாடல்களை பாடி பலருக்கும் மனதில் மாற்றத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் கே.எஸ் சித்ரா இதுவரைக்கும் ஆறு முறை சிறந்த பாடகிக்கான தேசிய விருதையும் பெற்றிருக்கிறார். இந்த நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் தன்னுடைய ஆரம்ப காலகட்டத்தில் நடந்த இப்பவும் மறக்க முடியாத நிகழ்வுகளை பற்றி கூறியிருக்கிறார்.

அதில் நான் பாடகியாக வந்த புதிதில் வைரமுத்து, இளையராஜா உள்ளிட்ட பலரும் நான் சிறப்பாக வரவேண்டும் என்பதற்காக பல ஐடியாக்கள் கொடுத்தார்கள். நான் பாடும் போது செய்யும் சின்ன சின்ன தவறுகளையும் சுட்டிக்காட்டி அடுத்த பாடலில் அதை திருத்திக் கொள்ள வேண்டும் என்று சொன்னார்கள்.

Why singer KS Chithra refused to sing the music composer Deva song

அப்படித்தான் ஒருமுறை தேவா இசையில் ஒரு பாடல் பாட வாய்ப்பு கிடைத்தது. அந்த பாடலை முதலில் எஸ்பிபி சார் பாட முடியாது என்று சொல்லிவிட்டு கிளம்பி விட்டார். ஆனால் நான் அப்படி சொல்ல முடியாது. அவர் ஒரு பெரிய பாடகர் நான் அப்போதுதான் அறிமுகம் ஆகி இருக்கிறேன். அதனால் என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டே இருந்தேன். ஆனால் தேவா சார் ரொம்பவே சாந்தமானவர். அவரிடம் சென்று ஒரே ஒரு லைன் மட்டும் மாற்றி தர முடியுமா சார் ரொம்ப வல்கரா இருக்கு என்று சொன்னேன்.

அவரும் சரிமா மாற்ற நான் ட்ரை பண்ணுகிறேன். இது ஒரு பெரிய பாடல் ஆசிரியர் எழுதியது. அவரிடம் பேசுகிறேன் என்று சொல்லி இன்னைக்கு இதை எடுக்க வேண்டாம் இன்னொரு நாள் பாத்துக்கலாம் என்று அனுப்பி வைத்தாராம். அதற்குப் பிறகு என்னை கூப்பிடவே இல்லை சில நாட்களுக்கு பிறகு இளையராஜா சார் ஸ்டுடியோவுக்கு சென்றேன். அப்போது அவர் என்னை அழைத்து தேவா ஸ்டுடியோவில் பாட முடியாது என்று சொன்னியா என்று கேட்டார்.

Why singer KS Chithra refused to sing the music composer Deva song

அப்போது ஆமாம் சார் வரிகள் கொஞ்சம் வல்கரா இருந்துச்சு அதனால்தான் என்று சொன்னாராம். அதற்கு அவர் அதையெல்லாம் நீங்க ஏன் பாக்குறீங்க உங்க வேலை பாடுவது மட்டும்தான். எந்த கலைஞரும் வேண்டுமென்றே அவ்வாறு எழுத மாட்டார்கள். கதைக்கு தேவையானது தான் எழுதுவார்கள். அவர்களின் எழுத்துக்கு குரல் கொடுப்பதுதான் உன் வேலை என்று சொன்னார். அப்போதுதான் நான் செய்த தவறு புரிந்தது. இப்ப வரைக்கும் அதை ஃபாலோ பண்ணி வருகிறேன் என்றும் கூறுகிறார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+