இவங்க ஏன் இப்படி பண்றாங்க.. எப்பவுமே இவங்க இப்படித்தானோ?
சென்னை: விஜய் டிவியின் விஜய் அவார்ட்ஸ் நிகழ்ச்சி நேற்று ஒளிபரப்பினாங்க. அதில் சிறந்த நடிகை விருது நம்ம செம்பாவுக்கு கிடைச்சுதுங்க.
செம்பா நம்ம ஆல்யா மானஸாதான்...வழக்கம் போல எதிர்பார்க்காம விருது கிடைக்கற மாதிரி எல்லாரும் ரியாக்ஷன் தருவாங்களே அது போல ஒரு ஆக்ஷன் குடுத்தார்.
இவரும், சஞ்சீவும் அருகருகில் உட்கார்ந்து இருந்தாங்க. மேடையில எக்சைட்டிங்கா பேசினார். எல்லாருக்கும் நன்றி சொன்னார். இவர் கூட சஞ்சீவிவை மேடைக்கு அழைக்கலை.
அட..பொம்பளைங்க புடவை முந்தானைக்கு இத்தனை மவுசா...
இந்த டிடி இருக்காங்களே அவங்க சஞ்சீவை மேடைக்கு அழைச்சாங்க அவர் உடனே ஒரு மோதிரத்தை கையில் எடுத்துகிட்டு, மானஸாவின் முன் மண்டியிட்டு வில் யூ மேரி மீன்னு கேட்கறார்.
எஸ்னு மானசா சொல்ல மோதிரத்தை அணிவிக்கறார்.அதோடேயா, நம்ம டிடி மாலையையும் மாத்திக்க சொல்றார்.ரெண்டு பேரும் மாலையை மாத்திக்கிட்டு கட்டிப்பிடிச்சு முத்தம் குடுத்துக்கறாங்க.
இல்லை தெரியாமத்தான் சீரியல் விரும்பிகள் கேட்கறாங்க. அவங்களுக்குத்தான் வீட்டுலயே நிச்சயதார்த்தம் சிறப்பா நடத்தி முடிச்சுட்டாங்களே... இடையில நீங்க ஏன் இந்த மாதிரி வேலை எல்லாம் பார்க்கறீங்க?
டிடி..உங்க கல்யாணத்துல அப்படித்தான் எல்லா அலப்பரையும் செய்தீங்க... முடிஞ்சா முதலிரவையும் நடத்தி முடிச்சுருவீங்க..இல்லே... நாங்க பே சேனலாக்கியம் பார்த்துகிட்டு இருக்கோம் . நீங்க என்னடான்னா யார் யார் லவ் பண்றதையோ லைவ்ல காமிக்கறீங்க.
பர்சனல் வேற தொழில் வேறங்க...ஏப்போதான் உணருவீங்களோ...