இன்ஷியல் நடிகைக்கு பெயர் வந்தது இப்படித்தான்.. நடிகை கே.ஆர். விஜயா விடாமல் நடிப்பது இவருக்காக? வாவ்
சென்னை: "கல்யாணத்துக்கப்புறம் நடிக்க வேணாம்னுதான் இருந்தேன்.. எங்க வீட்டுக்காரர்தான், வீட்டிலேயே இருந்தா சோம்பேறியாயிடுவேன்னு சொல்லி என்னை திரும்ப நடிக்க அனுப்பிட்டாரு. "நீ சாகுற வரைக்கும் நடிக்கணும், ரொம்ப சந்தோஷமா இருக்கணும். உன்னால முடியும் வரைக்கும் நடிச்சிட்டு இருக்கணும்"னு சொன்னாரு" என பழம்பெரும் நடிகை கேஆர் விஜயா பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
சிட்டி பாக்ஸ் மீடியா என்ற யூடியூப் சேனலுக்கு தந்திருந்த பேட்டியில் கே.ஆர். விஜயா சொல்லும்போது, "என் வீட்டுல 5 பொண்ணுங்க.. நான்தான் மூத்த பொண்ணு.. அதனால் என் தலையிலதான் எல்லா பொறுப்பும் விழுந்தது.

என் கடைசி தங்கச்சி ரொம்ப ஜாலியா இருப்பா.. ஒருமுறை அவளுக்கு உடம்பு முடியாம போயிருச்சு.. கிட்டத்தட்ட அவள் இறந்துட்டான்னே எல்லாரும் முடிவு பண்ணிட்டோம். அந்த நேரத்துல நான் கோவில்ல பூஜை பண்ணிட்டு, பால் எடுத்துட்டு வந்து அவளுக்கு தந்தேன். அதுக்கப்பறம் அவள் பொழச்சிக்கிட்டாள். இது என்னால மறக்க முடியாத சம்பவம்.
10 வருடத்தில் 100 படங்கள்
தெய்வநாயகி. என்பதுதான் என்னுடைய பெயர்.. அப்பா, அம்மா பெயரை இன்ஷியலாக வைத்து, கே.ஆர். விஜயா என்று பெயரை மாற்றியது நடிகவேள் எம்ஆர் ராதா அவர்கள்தான்.
நான் முதல் படம் பண்ணும்போது எனக்கு 14, 15 வயசு இருக்கும்.. எல்லாரும் சின்ன பிள்ளைன்னு எனக்கு நடிப்பு சொல்லி தந்தாங்க.. கல்யாணத்துக்கப்புறம் நடிக்க வேணாம்னுதான் இருந்தேன்.. எங்க வீட்டுக்காரர்தான், வீட்டிலேயே இருந்தா சோம்பேறியாயிடுவேன்னு சொல்லி என்னை திரும்ப நடிக்க அனுப்பிட்டாரு. "நீ சாகுற வரைக்கும் நடிக்கணும், ரொம்ப சந்தோஷமா இருக்கணும். உன்னால முடியும் வரைக்கும் நடிச்சிட்டு இருக்கணும்"னு சொன்னாரு
சினிமாவுக்கு வந்த 10 வருஷத்துலயே 100 படம் நடிச்சிட்டேன். நடிக்கணும், சாப்பிடணும், தூங்கணும் இதை தவிர வேற எதுவுமே தெரியாது.. இப்போதுவரையுமே எனக்கு வேற எதுவுமே தெரியாது. ஷூட்டிங்கை தவிர, யார்கிட்டயாவது கதை பேசக்கூட தெரியாது. வீட்டிலேயே ஸ்விம்மிங் பூல், தியேட்டர் எல்லாமே இருந்தால், வெளியே போக வேண்டிய தேவை இல்லை.. அப்படியே ஏதாவது எனக்கு வேணும்னா என் வீட்டுக்காரர் என்னை கூட்டிட்டு போவாரு" என்றெல்லாம் நினைவுகளை பகிர்ந்துள்ளார்.
ஸ்பென்சர் பில்டிங் உரிமையாளர்
சமீபத்தில், Globe 360 என்ற யூடியூப் சேனலில், மூத்த பத்திரிகையாளர் தமிழா தமிழா பாண்டியன் தந்திருந்த பேட்டியில், ஷுட்டிங்கிற்கு தன்னுடைய சொந்த விமானத்திலேயே கேஆர் விஜயாவை அழைத்து வந்து, விமானத்திலேயே திரும்ப அழைத்து செல்வார் வேலாயுதம். தொழிலதிபர்கள்: காரணம், கேஆர் விஜயா, வேலாயுதத்துக்கு மிகவும் முக்கியம்..
விஐபி விருந்து இவர்கள் வீட்டில் தடபுடலாக இருக்கும். பல நாடுகளிலிருந்து வரும் தொழிலதிபர்கள், பண்ணையார்கள், விஐபிகள் என பலரும் வேலாயுதம் பங்களாவில் தினமும் நிறைந்திருப்பார்கள்.." என்று சொல்லியிருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications