சபரிமலையில் இதுவரை 100 பெண்கள் தரிசனம் செய்துள்ளனர்.. கேரளா அமைச்சர் பரபர பேட்டி!
சபரிமலை ஐயப்பன் கோவிலில் கடந்த நடைதிறப்பில் மட்டும் சுமார் நூறு பெண்கள் தரிசனம் செய்துள்ளனர் என்று கேரள அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் தெரிவித்து இருக்கிறார்.
Recommended Video

திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோவிலில் கடந்த நடைதிறப்பில் மட்டும் சுமார் நூறு பெண்கள் தரிசனம் செய்துள்ளனர் என்று கேரள அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் தெரிவித்து இருக்கிறார்.
சபரிமலை கோவிலுக்குள் கடந்த 2ம் தேதி நுழைந்த இரண்டு அங்கு சாமி தரிசனம் செய்து உள்ளனர். இவர்கள் இருவரும் 50 வயதிற்கும் குறைவான பெண்கள் ஆவர்.
மலப்புரம் பகுதியை சேர்ந்த கனகதுர்கா என்ற 46 வயது பெண்ணும், கோழிக்கோடு பகுதியை சேர்ந்த பிந்து என்ற 40 வயது பெண்ணும் இன்று அதிகாலை சபரிமலை கோவிலுக்குள் சென்றுள்ளனர். இந்த சமயம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது.

பெண்கள்
இந்த நிலையில் சபரிமலை சம்பவம் தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த கேரள அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ளார். அதில், சபரிமலை ஐயப்பன் கோவிலில் கடந்த நடைதிறப்பில் மட்டும் சுமார் நூறு பெண்கள் தரிசனம் செய்திருக்க வாய்ப்புள்ளது. சபரிமலை கோவிலில் தரிசனம் செய்த பெண்களின் விவரங்கள் பதிவு செய்யப்படவில்லை.

வயது இல்லை
வெறுமனே பெயர்கள் மட்டும்தான் பதிவு செய்யப்பட்டுள்ளது. வயது பதிவு செய்யப்படவில்லை. இதனால் 100 பெண்களுக்கும் அதிகமாக கோவிலுக்குள் சென்று தரிசனம் செய்திருக்க வாய்ப்பு இருக்கிறது. சபரிமலை கோவிலுக்குள் பெண்களை செல்ல விடாமல் தடுப்பது முறையற்றது.

தவறு
அது பண்டையகால நடைமுறை. அதை பின்பற்றுவது தவறு. கோவிலுக்குள் பெண்களை அனுமதிப்பதே சரியானது. இதற்கு எதிராக போராடுவது தவறான விஷயம்.

இறுதி தீர்ப்பு
சபரிமலை கோவிலுக்குள் பெண்கள் நுழைவிற்கு எதிராக பக்தர்களை சிலர் தூண்டிவிடுகிறார்கள். அரசு இவர்களை கண்காணித்து வருகிறது. இவர்கள் மீது விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும். உச்ச நீதிமன்றத்தை மதித்து நடப்பதே மிகவும் சரியானதாக இருக்கும், என்று அவர் கூறியுள்ளார்.
-
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன்












Click it and Unblock the Notifications