நாய்கள் குரைக்கவில்லை.. செஃபி செய்த "அந்த" சர்ஜரி.. அபயா வழக்கில் பக்காவாக காட்டி கொடுத்த ஆதாரம்

Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: கேரளா கன்னியாஸ்திரி அபயா கொலை வழக்கில் வெளியான 229 பக்கங்கள் கொண்ட தீர்ப்பில் அவர் வேண்டுமென்றே கொலை செய்யும் நோக்கில் கடுமையாக தாக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இந்த வழக்கில் கிடைத்த ஆதாரங்கள் என்ன என்பதும் வெளியாகியுள்ளன.

கேரளாவின் கோட்டயத்தில் செயிண்ட் பியஸ் கான்வென்ட்டில் கன்னியாஸ்திரியாக இருந்தவர் அபயா (21). 28 ஆண்டுகளுக்கு முன்னர் கொலை செய்யப்பட்டார். இது குறித்த வழக்கில் ஒரு பாதிரியாரும், கன்னியாஸ்திரியும் குற்றவாளிகள் என தீர்ப்பளிக்கப்பட்டது.

இந்த வழக்கின் தீர்ப்பு 229 பக்கங்களை கொண்டதாகும். அபயாவின் உச்சந்தலையிலும் பின்புறத்திலும் கோடாரியால் கடுமையாக தாக்கப்பட்டிருந்தார். தலையில் ஏற்பட்ட காயங்களே அவர் உயிரிழக்க காரணமாயிற்று. அவரை கொல்ல வேண்டும் என்ற நோக்கத்துடன் அவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.

கன்னியாஸ்திரி

கன்னியாஸ்திரி

ஆதாரங்களை அழிப்பதற்காக கன்னியாஸ்திரியின் உடலை கிணற்றில் வீசியுள்ளனர். மேலும் கிணற்றில் விழுந்ததால் அவரது தலையில் காயம் ஏற்பட்டதை போல் சித்தரிக்கவே இந்த முயற்சி நடத்தப்பட்டது. இந்த கொலை வழக்கில் மிகவும் முக்கியமானது. கொலை நடந்த இடம் கான்வென்ட். அந்த கான்வென்டில் ஆண்கள் வருகை என்பது முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது.

பாதிரியார்

பாதிரியார்

அவ்வாறிருக்கையில் அந்த கான்வென்டில் பாதிரியார் தாமஸ் கோட்டூர் நுழைந்திருந்தது அவரது தவறான நடத்தையையே காட்டுகிறது. இந்த வழக்கில் பாதிரியார் தாமஸும் கன்னியாஸ்திரி செஃபியும்தான் கொலையாளி என்பதை நிரூபிக்கும் ஆதாரம் எது என்பதும் வெளியாகியுள்ளது.

விசாரணை

விசாரணை

1. கான்வென்டில் அபயாவுடன் இருந்தவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அபயா மகிழ்ச்சியான ஒரு வாழ்வை வாழ்ந்து வந்தார். இதனால் அவர் நிச்சயம் தற்கொலை செய்திருக்க வாய்ப்பில்லை என்பது நிரூபணமானது.

2. இந்த கான்வென்ட்டை குற்றம்சாட்டப்பட்ட இரு பாதிரியார்களும் அவ்வப்போது வந்து சென்று கொண்டிருந்தனர். பெண்கள் மட்டுமே இருந்த கான்வென்டில் பாதுகாப்புக்காக நாய்கள் இருந்தன. கொலை நடந்த போது அந்த இடத்தில் நாய்கள் ஏதும் குரைக்கவில்லை என அந்த கான்வென்ட்டின் சமையல் பெண் கூறியிருந்தார். ஏனெனில் கான்வென்ட்டிற்குள் நுழைந்தவர்களை நாய்களுக்கு ஏற்கெனவே பரீட்சயமானவர்கள்.

கான்வென்ட்டில்

கான்வென்ட்டில்

3. கொலை நடப்பதற்கு முன்னர் கான்வென்டில் இருந்தவர்கள் இரு ஆண்களை மட்டுமே அந்த பகுதியில் பார்த்தனர். அதிலும் அடக்கு ராஜு என்பவரின் சாட்சியம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். அவர் ஒரு திருடன். சம்பவத்தினத்தன்று கான்வென்ட்டில் எதையாவது திருட முடியுமா என்பதற்காக உள்ளே நுழைந்திருந்தார்.

கன்னியாஸ்திரி ஒப்புதல்

கன்னியாஸ்திரி ஒப்புதல்

4. பாதிரியார் தாமஸ் கன்னியாஸ்திரி செஃபியுடன் உல்லாசமாக இருந்ததை ஒப்புக் கொண்டார். அது போல் செஃபியும் ஒப்புக் கொண்டார். செஃபி கன்னித்தன்மையுடன்தான் இருக்கிறார் என்பதற்காக அவராகவே ஹைமன்பிளாஸ்டி எனப்படும் அறுவை சிகிச்சை மேற்கொண்டிருந்தது தெரியவந்தது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+