பிரியாணியா சமைக்க போறா.. குக்கரில் எட்டிப்பார்த்த நாகப்பாம்பு.. அதிர்ந்த இளம்பெண்
திருவனந்தபுரம்: கேரளா மாநிலம் கோழிக்கோட்டில் உள்ள சாலக்கரா என்ற பகுதியில் உள்ள ஒரு வீட்டில் பாம்பொன்று சமையலறையில் இருந்த பிரஷர் குக்கரில் பதுங்கி இருந்திருக்கிறது. இதுகுறித்த தகவலறிந்து வந்த பாம்புபிடி வீரர், பத்திரமாக அதை மீட்டுச்சென்று காட்டுப்பகுதியில் விடுவித்தார்.
கோழிக்கோடு மாவட்டம் சாலக்கரையில் உள்ள தாமரச்சேரி பகுதியில் ஒர குடும்பத்தினர் வசதித்து வருகின்றனர் இவர்களது வீட்டில் சமையல் அறைக்குள் நாகப்பாம்பு ஒன்று புகுந்துள்ளது.. வீட்டின் சமையலறைக்கு சென்ற பாம்பு, அங்கிருந்த பிரஷர் குக்கரில் ஏறி பதுங்கி கொண்டது. சமையல் அறைக்கு சென்ற அந்த குடும்பத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் சமையல் செய்ய விரும்பினார்.அப்போது பிரஷெர் குக்கரில் பதுங்கி இருந்தது அதிக விஷமுள்ள நாகப்பாம்பு என்பதை கண்ட அவர் அதிர்ச்சி அடைந்தார். நல்ல வேளையாக பாம்பு அவரை கடிக்கவில்லை. அமைதியாகவே இருந்தது.

பாம்பு குக்கரில் சுருண்டு கிடந்ததை கண்ட அவர் உடனடியாக தீயணைப்புதுறைக்கு தகவல் கொடுத்தார். அவர்கள் பாம்பு பிடிக்கும் பயிற்சி பெற்ற கோரங்காட்டை சேர்ந்த எம்.டி.ஜம்ஷீத் என்பவருக்கு தகவல் கொடுத்தனர். அந்த தகவலின் பேரில் வீட்டிற்கு வந்த பாம்பு பிடி வீரர், விஷமுள்ள நாகப்பாம்பை பத்திரமாக பிடித்து காட்டுப்பகுதியில் விடுவித்தார்.
நல்ல வேளையாக பாம்பும் தப்பியிருக்கிறது. குக்கரில் பாம்பு இருப்பதை கவனிக்காமல் தண்ணீரை பிடித்து அடுப்பில் வைத்திருந்தால், பாம்பும் சமையல் ஆகியிருந்திருக்கும்.. பாம்புக்கும் பாதிப்பு ஏற்பவிடவில்லை.. பாம்பை பார்த்த பெண்ணுக்கும் அதிர்ஷ்டவசமாக எதுவும் ஏற்படவில்லை..
குக்கரில் மட்டுமல்ல கழிவறை ஓட்டைகளில், ஏசி துவாரங்களில், இருசக்கர வாகனத்தின் டிக்கியிலும் பாம்புகள் பதுங்கியிருந்த சம்பவங்கள் நடந்தள்ளது. முன்னதாக கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு ஈரோட்டில் ஒரு இருசக்கர வாகன்த்தில் கோதுமை நாகம் பதுங்கி இருந்தது. அதை பாம்பு வீரர் ஒருவர் பத்திரமாக பிடித்தார். ஈரோட்டில் யுவா ஸ்டோர்ஸ் என்ற கடையின் அருகே நிறுத்தியிருந்த இருசக்கர வாகனத்தில் நாகப்பாம்பு பதுங்கியிருந்தது. இதை கண்ட கடையின் உரிமையாளர் உடனடியாக தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்தார்.
தீயணைப்பு துறையினரின் அழைப்பின் பேரில் பாம்பு பிடிவீரர் யுவராஜ் அங்கு வந்தார். அவர் இருசக்கர வாகனத்தில் சத்தம் வந்ததை வைத்து எங்கு பாம்பு பதுங்கியுள்ளது என்பதை கண்டுபிடித்தார் விஷமுள்ள கோதுமை நாகம் இருசக்கர வாகனத்தின் சீட்டிற்கு அடியில் பதுங்கி இருந்தது. அந்த பாம்பை நீண்ட நேர போராட்டத்திற்கு பின் சீட்டை கழற்றி பிடித்த பாம்பு பிடிவீரர் யுவராஜ், அதனை பத்திரமாக வனத்துறையினரிடம் ஒப்படைத்தார்.
-
ஆரம்பிக்கும் மூன்றாம் உலக போர்.. வெளியே வந்த டூம்ஸ்டே மீன்.. அலறும் உலக நாடுகள் -
கூட்டுறவு வங்கி தங்க நகை கடன் + மகளிர் உரிமை தொகை! கனிமொழி பிரம்மாஸ்திரம்! ஸ்டாலின் முக்கிய முடிவு -
தேசிய ஜனநாயக கூட்டணியில் விஜய்.. நெருங்கும் பேச்சுவார்த்தை.. ஒரே வார்த்தையில் உடைத்த சரத்குமார் -
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
எங்க கொண்டு போய் விட்டுடுச்சி பாருங்க.. கேஸ் தட்டுப்பாட்டால், ஸ்விக்கி, ஜொமோட்டோ டெலிவரி குறைந்தது! -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்கா இனி பிக்பாஸ் இல்லை.. நீங்க நம்பலைனாலும் அதான் நெசம்.. ஐக்கிய அரபு சகாப்தமும் வீழ்ந்தது! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
3 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய்யை வாங்கி குவித்த இந்திய நிறுவனங்கள்! ரஷ்யாவுக்கு கொட்டும் பண மழை! -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
கடலில் இறக்கப்பட்ட கண்ணி வெடி! எக்குத்தப்பாய் வந்து சிக்கிய அமெரிக்கா! வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வார்னிங் -
ஒருவேளை உண்மையா இருக்குமோ.. என்டிஏ கூட்டணியில் விஜய்! மாஜி அமைச்சர் கடம்பூர் ராஜூ சொன்ன வார்த்தை!












Click it and Unblock the Notifications