Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Timeline: கேரள நடிகை பாலியல் வழக்கு! நடிகர் திலீப் கைது முதல் விடுதலை வரை 8 ஆண்டாக நடந்தது என்ன?

Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: கேரளாவில் பிரபல நடிகை காரில் கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் திலீப் விடுவிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை எர்ணாகுளம் நீதிமன்றம் பிறப்பித்தது. மேலும் பல்சர் சுனில் உள்பட 6 பேர் குற்றவாளிகள் என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. 8 ஆண்டுகளாக இந்த வழக்கு கடந்து வந்த பாதையை பார்க்கலாம்.

2017 பிப்ரவரியில், ஒரு பிரபல மலையாள நடிகை கடத்தப்பட்டு, பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

dileep crime

இந்த வழக்கு 8 ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு விசாரணை கட்டங்கள், துணை குற்றப்பத்திரிக்கைகள் மற்றும் நீதித்துறை தலையீடுகள் வழியாக நகர்ந்துள்ளது. இந்த சம்பவம் நடந்தது தொடங்கி ஹேமா கமிட்டி வரை கேரள திரைத்துறையில் என்னென்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.

2017 பிப்ரவரி 17: பிரபல மலையாள நடிகை ஒருவர் கொச்சி அருகே கடத்தப்பட்டு, ஓடும் காரில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தை வீடியோவாக எடுத்து பின்னாளில் நடிகையை பிளாக் மெயில் செய்ய திட்டமிட்டிருந்தனர். இந்த நிலையில் பாதிக்கப்பட்ட நடிகை உடனடியாக காவல்துறையில் புகார் அளித்தார்.

பிப்ரவரி 19- மூவர் கைது செய்யப்பட்டனர். ஆனால் முக்கிய குற்றவாளி பல்சர் சுனி தலைமறைவாக இருந்தார்.

பிப்ரவரி 23- பல்சர் சுனியும் விஜீஷும் நீதிமன்றத்தில் சரணடைந்தனர்; பாதிக்கப்பட்டவரின் தொலைபேசி மற்றும் மெமரி கார்டு காவல்துறை வசம் ஒப்படைக்கப்பட்டது.

ஏப்ரல் 18- பல்சர் சுனி மற்றும் ஆறு பேர் மீது முதல் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

மே 18- சினிமா கலெக்டிவ் பெண்கள் அமைப்பு (WCC) முதலமைச்சரிடம் நடவடிக்கை கோரி மனு அளித்தது.

ஜூன் மாத இறுதியில்- விசாரணை தீவிரமடைந்தது; சுனியிடமிருந்து திலீப்பிற்கு கடிதம் ஒன்று வந்ததாகக் கூறப்பட்டது. இதை வைத்து திலீப்பிடமும் நதிர்ஷாவிடமும் விசாரணை நடத்தபபட்டது.

ஜூலை 10- இவ்வழக்கில் சதி செய்ததாகவும், தாக்குதலைத் தூண்டியதாகவும் திலீப்பை சிறப்பு புலனாய்வுக் குழு (SIT) கைது செய்தது.

நடிகை தனது அப்போதைய மனைவி மஞ்சு வாரியரிடம், திலீப்பின் கவ்யா மாதவனுடனான தொடர்பு குறித்து தெரிவித்ததால், பழிவாங்கும் நோக்கில் இந்த குற்றச் செயலை திலீப் திட்டமிட்டு நடத்தியதாக குற்றம் சாட்டப்பட்டது.

ஜூலையில் 'அம்மா' (மலையாள நடிகர் சங்கம்) அமைப்பு திலீப்பை நீக்கியது.

அக்டோபர் 3- 85 நாட்கள் சிறைவாசத்திற்குப் பிறகு, திலீப்பிற்கு ஜாமீன் கிடைத்தது.

நவம்பர் 22- திலீப் உட்பட 12 பேர் மீது துணை குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது; மஞ்சு வாரியர் முக்கிய சாட்சியாகப் பட்டியலிடப்பட்டார்.

டிசம்பர் 5- நீதிமன்றம் அந்தக் குற்றப்பத்திரிக்கையை ஏற்றுக்கொண்டது.

2018 ஜனவரி 20- மெமரி கார்டில் உள்ள வீடியோவைப் பார்க்க அனுமதி கோரி திலீப் மனு தாக்கல் செய்தார். ஒரு முக்கிய விசாரணை அதிகாரி இடமாற்றம் செய்யப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது.

பிப்ரவரி 7- பாலியல் வன்கொடுமை வீடியோவைப் பார்க்கக் கோரிய திலீப்பின் மனுவை மாஜிஸ்திரேட் நிராகரித்தார்.

மார்ச்-ஏப்ரல் மாதங்களில்- திலீப் உயர் நீதிமன்றத்திலும் உச்ச நீதிமன்றத்திலும் மேல்முறையீடு செய்தார்; ஆனால் பாதிக்கப்பட்டவரின் தனியுரிமையைக் காரணம் காட்டி, இரு நீதிமன்றங்களும் வீடியோவை ஒப்படைக்க மறுத்துவிட்டன.

ஜூன் மாதம்- 'அம்மா' அமைப்பு திலீப்பை மீண்டும் சேர்த்துக் கொண்டபோதிலும், கடும் எதிர்ப்பின் காரணமாக மீண்டும் சேர அவராகவே மறுத்துவிட்டார்.

2019 நவம்பரில்- எர்ணாகுளம் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை முறையாகத் தொடங்கியது. ஆனால், நீதிபதியின் பாரபட்சம் இருப்பதாகக் கூறி, வழக்கை வேறொரு நீதிமன்றத்திற்கு மாற்றக் கோரி நடிகை உயர் நீதிமன்றத்தை அணுகியதால் விசாரணை நிறுத்தப்பட்டது.

டிசம்பர் 2019- திரைத்துறையில் நடக்கும் பாலியல் சம்பவங்கள் குறித்து நீதிபதி ஹேமா கமிட்டி ரகசிய அறிக்கையை, மாநில அரசுக்கு தாக்கல் செய்தது.

2020, ஜனவரி 6- குற்றம்சாட்டப்பட்ட 12 பேர் மீது வழக்குப் பதியப்பட்டது.

ஜன.30- விசாரணை தொடங்கியது.

அக்.28- நீதிபதி பாரபட்சம் காட்டுவதால் அவரை மாற்றக் கோரி, நடிகை ஹைகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.

நவ.23- நீதிபதியை மாற்றக் கோரிய நடிகையின் மனுவை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது.

டிசம்பர்- நடிகை வழக்கில் வேறொரு நீதிபதியை நியமிக்கக் கோரி மாநில அரசு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. ஆனால் அதுவும் நிராகரிக்கப்பட்டது.

2021 ஜனவரி 4 அன்று- வி.என். அனில்குமார் புதிய சிறப்பு அரசு வழக்கறிஞராக நியமிக்கப்பட்டார்.

2021 ஆம் ஆண்டு முழுவதும், திரும்பத் திரும்ப சாட்சிகளை அழைத்தல் மற்றும் கோவிட்-19 தாமதங்கள் காரணமாக விசாரணை மெதுவாகவே நடைபெற்றது.

2022 ஜனவரி 9 அன்று- விசாரணை அதிகாரிகளுக்கு தீங்கு விளைவிக்க சதி செய்ததாகக் கூறி, திலீப் மற்றும் ஐந்து பேர் மீது புதிய முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்யப்பட்டது.

ஜனவரி 10-20 வரை- சிறப்பு புலனாய்வுக் குழு (SIT) அமைக்கப்பட்டு, திலீப்புக்குச் சொந்தமான இடங்களில் சோதனைகள் நடத்தப்பட்டன.

பிப்ரவரி - இந்த வழக்கின் முக்கிய சாட்சியங்களிடம் சிறப்பு புலனாய்வு குழு விசாரணை நடத்தியது.

ஏப்ரல்- விசாரணை அதிகாரிகளை கொலை செய்ய முயற்சித்த வழக்கில் திலீப்பிற்கு உயர்நீதிமன்றம் முன்ஜாமீன் கொடுத்தது.

ஜூலை- மெமரி கார்டை 3 முறை யாரோ பயன்படுத்தியதாக தடயவியல் துறை கண்டறிந்தது குறித்து விசாரணை நடத்துமாறு சிறப்பு புலனாய்வு குழுவுக்கு விசாரணை நீதிமன்றம் உத்தரவிட்டது

2023 பிப்- ஏப்ரல்- மெமரி கார்டில் இருப்பதை சிதைக்கும் நோக்கில் அதை ஓபன் செய்திருப்பதாக தடயவியல் துறை அறிக்கை தாக்கல் செய்தது.

செப்- ஹேமா குழு அறிக்கை இரகசியமாக இருக்கும் என்று அரசு நீதிமன்றத்தில் கூறியது.

2024 பிப்- நடிகை மீதான பாலியல் வன்கொடுமை வழக்கு இறுதி கட்டத்தை எட்டியதாக உயர்நீதிமன்றத்தில் விசாரணை நீதிமன்றம் தெரிவித்தது.

ஏப்ரல்- மெமரி கார்ட்டில் இருந்த வீடியோவை 3 பேர் சட்டத்திற்கு புறம்பாக பார்த்திருக்கிறார்கள் என விசாரணையில் தெரியவந்தது.

செப்- ஏழரை ஆண்டுகள் சிறை வாசத்திற்கு பிறகு பல்சர் சுனிக்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.

நவ- விசாரணையை விரைந்து முடிக்குமாறு விசாரணை நீதிமன்றத்திற்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

2025, ஜன- விசாரண இறுதி கட்டத்தை எட்டியது. சீலிடப்பட்ட மெமரி கார்டை நீதிமன்றம் ஆய்வு செய்தது.

ஏப்ரல்- சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரிய திலீப்பின் மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

அக்டோபர்- இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிமன்றம் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தது.

டிச.8- எட்டு ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்த இந்த முக்கியமான வழக்கில், திலீப் குற்றவாளி என்பதை நிரூபிக்க போதிய ஆதாரம் இல்லாததால் இன்று எர்ணாகுளம் முதன்மை அமர்வு நீதிமன்றம் அவரை விடுவித்துள்ளது. மற்ற 6 பேர் குற்றவாளிகள் என தீர்ப்பு. திலீப்பின் நண்பர் சரத்தும் விடுவிக்கப்பட்டார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+