Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நடுநடுங்க வைத்த மரணம்.. ஒரே மர்மம்.. மொத்தம் 3 பெண்கள்.. மோகன்லால் போட்ட வீடியோவால் பரபரப்பு

3 இளம்பெண்கள் மரணங்கள் குறித்து மோகன்லால் வீடியோ ஒன்றினை பதிவிட்டுள்ளார்

Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: மோகன்லால் வெளியிட்ட 3 பெண்கள் குறித்த வீடியோக்கள் பற்றிதான் கேரளா முழுக்க பேச்சாக உள்ளது.. அத்துடன் இன்றைய இளைஞர்களிடமும் உருக்கமான வேண்டுகோளை மோகன்லால் முன்வைத்துள்ளார்.

Recommended Video

    Kerala Vismaya Case | வரதட்சணை கேட்டு கொடுமை! உயிர்விட்ட பெண் | கண்டனம் தெரிவித்த Kalidas, Rajisha

    கடந்த ஒரே வாரத்தில் அடுத்தடுத்து மூன்று இளம்பெண்கள் இறந்துள்ளனர்.. இவர்கள் 3 பேருமே வரதட்சணை கொடுமையினால் உயிரிழந்துள்ளனர்.. இதனால் அதிர்ச்சியில் உறைந்துள்ளது கேரளா.

    கொல்லத்தை சேர்ந்த மாணவி விஸ்மயா.. 22 வயது.. காலேஜ் படித்து கொண்டிருந்தார்.. படிக்கிற பெண்ணை திடுதிப்பென்று மாப்பிள்ளையை பார்த்து கல்யாணம் செய்துவைத்தனர்.. 100 பவுன் நகைகள், ஒரு ஏக்கர் நிலம், 11லட்சத்தில் கார் கொடுத்தும், இன்னும் வரதட்சணை கேட்டுள்ளார் மாப்பிள்ளை கிரண்குமார்...

    இளம்பெண்

    இளம்பெண்

    உடம்பெல்லாம் அடித்து காயப்படுத்தி உள்ளார்.. ஆணிகளை கொண்டு முகத்திலேயே குத்தி, கட்டையால் தாக்கியும் வந்துள்ளார். பிரச்சனையை பெற்றோரிடம் சொன்னபோது, நேரில் வந்து பேசுகிறோம் என்று சமாதானப்படுத்தி இருந்தனர்.. ஆனால், அதற்குள் தற்கொலை செய்து கொண்டார் என செய்தி வெளியானது.. ஆனால், இது தற்கொலை இல்லை, கொலை என்று தெரியவந்துள்ளது.

     அர்ச்சனா

    அர்ச்சனா

    இதையடுத்து, திருவனந்தபுரத்தில் அர்ச்சனா என்கிற 24 வயது பெண் தற்கொலை செய்துகொண்டார்.. சுரேஷ் என்பவரை அர்ச்சனா காதலித்துள்ளார்.. 3 லட்சம் வரதட்சணை கொடுத்த பின்னரும், இன்னும் பணம் வேண்டும் என்று சுரேஷ் குடும்பத்தினர் பிரச்சனை செய்துள்ளனர்.. இதனால், கடந்த 21-ம்தி ராத்திரி அர்ச்சனா இறந்துவிட்டதாக கூறப்படுகிறது.. ஆனால் இதுவும் கொலை என்று அர்ச்சனாவின் பெற்றோர் கதறுகிறார்கள்.

    மரணம்

    மரணம்

    அதேபோல, ஆழப்புழா வல்லிகுன்னத்தில் 19 வயதான சுசித்ரா என்ற இளம்பெண்ணும் உயிரிழந்துள்ளார்.. இவரும் வரதட்சணை பிரச்சனையால்தான் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.. 3 பெண்களுமே இளம்பெண்கள், 3 பெண்களுக்குமே வரதட்சணை பிரச்சனை இருந்துள்ளது.. 3 பெண்களின் மரணங்களும் சந்தேகத்தை கிளப்பி உள்ளன.. இந்த மரணங்களினால் நாடெங்கிலும் கண்டனம் எழுந்து வருகிறது.

    இந்தியா

    இந்தியா

    கனிமொழியும் இதற்காக கண்டனம் தெரிவித்திருந்தார்.. "இந்தியாவில் வரதட்சணை கொடுமைக்கு 1 மணி நேரத்திற்கு, 1 பெண் பலியாகிறார்... ஆனாலும் இந்தியக் குடும்பங்கள் இந்த வழக்கத்தை நிறுத்தியபாடில்லை... நம் மகள்களுக்கு திருமணம் செய்துவைக்கும் போது அவர்கள் சுயமரியாதையோடு பாதுகாப்பாய் இருப்பது முக்கியம் என்பதை உணரவேண்டும்' என்று பதிவிட்டார்.

     ஆராட்டு

    ஆராட்டு

    கனிமொழியின் இந்த ட்வீட்டுக்கு பலரும் தங்கள் ஆதரவை தெரிவித்தனர்.. இந்நிலையில்தான், மோகன்லாலும் கண்டனம் தெரிவித்துள்ளார்.. தான் நடித்து வெளிவர உள்ள, ஆராட்டு படத்தில் இடம்பெற்றிருக்கும் வரதட்சணைக்கு எதிரான ஒரு சீனை பதிவிட்டுள்ளார்..

     வரதட்சணை

    வரதட்சணை

    அதில், "பெண்களுக்கு திருமணத்தைவிட சுயமரியாதைதான் முக்கியம். வரதட்சணை வாங்குவதும் தவறு கொடுப்பதும் தவறு.. வரதட்சணை வேண்டாம் என்று சொல்லுங்கள். பெண்களுக்கு நீதியும் சமத்துவமும் இருக்கும் ஒரு கேரளாவை உருவாக்குவோம்" என்றும் குறிப்பிட்டுள்ளார். மோகன்லாலின் இந்த ட்வீட் வைரலாகி உள்ளது.. இளம்பெண்கள் பலரும், இனிமேல் வரதட்சணை கொடுக்க மாட்டோம் என பதிவிட்டு வருகின்றனர்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+