Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

முதல்வர் அதிரடி.. சபரிமலை ஐயப்பன் கோவிலில் தினசரி 25,000 பக்தர்களுக்கு அனுமதி.. வந்தது அறிவிப்பு

சபரிமலையில் 25 ஆயிரம் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்று பினராயி விஜயன் அறிவித்துள்ளார்

Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: சபரிமலை அய்யப்பன் கோவிலில் தினசரி 25,000 பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படும் என்று முதல்வர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார்.

நாடு முழுவதும் கொரோனா தொற்றின் பரவல் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டு வருகிறது.. எனினும், கட்டுப்பாடுகள் பல நடைமுறையில் உள்ளது.

அந்த வகையில், சபரிமலைக்கு பக்தர்கள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டு வந்தது.. இதனால் வருடா வருடம் பக்தர்கள் செல்வது போல கடந்த முறை செல்ல முடியாத சூழலும் உருவானது.

சபரிமலை

சபரிமலை

கொரோனா பரவல் காரணமாக சபரிமலை அய்யப்பன் கோயிலில் தினசரி 2,000 பக்தர்களுக்கும், ஞாயிற்றுக்கிழமைகளில் 3,000 பக்தர்களுக்கும், மகர விளக்கு தரிசனத்துக்காக 5,000 பக்தர்களுக்கும் அனுமதி அளிக்கப்பட்டு வந்தது... கடந்த சில மாதங்களாக மாதாந்திர பூஜைகளின்போது தினசரி 15,000 பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

பக்தர்கள்

பக்தர்கள்

இந்நிலையில், சபரிமலை அய்யப்பன் கோயிலில் மண்டல பூஜை, மகர விளக்கு ஜோதி விழா அடுத்த மாதம் 16ம் தேதி தொடங்கவுள்ளது. இதையொட்டி பக்தர்களுக்கு மேற்கொள்ள வேண்டிய வசதிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் நேற்று கேரள முதலமைச்சர் பினராய் விஜயன் தலைமையில் திருவனந்தபுரத்தில் நடைபெற்றது... அப்போதுதான் ஐயப்பன் கோயிலில் தரிசனம் செய்வதற்கு தினமும் 25,000 பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படும் என்ற முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

தரிசனம்

தரிசனம்

இது தொடர்பாக பினராயி விஜயன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: "மண்டல கால பூஜையின்போது, தரிசனத்துக்காக தினந்தோறும் 25,000 பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படும்... தேவைப்பட்டால் வரும் நாட்களில் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரிக்கப்படும்.. ஆன்லைனில் முன்பதிவு செய்யும் பக்தர்களுக்கு மட்டுமே தரிசனத்துக்கு அனுமதி அளிக்கப்படும்.

தடுப்பூசிகள்

தடுப்பூசிகள்

கோயிலுக்கு வரும் பக்தர்கள் கண்டிப்பாக 2 டோஸ்களை செலுத்தியதற்கான சர்ட்டிபிகேட் அல்லது கொரோனா ஆர்டிபிசிஆர் நெகட்டிவ் சர்ட்டிபிகேட்டை வைத்திருக்க வேண்டும்.. 10 வயதுக்குட்பட்ட மற்றும் 65 வயதுக்கு மேற்பட்ட பெண் பக்தர்களும் அனுமதிக்கப்படுவார்கள்... பக்தர்கள் கொண்டு செல்லும் நெய், சுவாமிக்கு அபிஷேகம் செய்யப்பட்டு பிரசாதமாக வழங்கப்படும்.

 பம்பை நதி

பம்பை நதி

தரிசனம் முடிந்த பிறகு, சன்னிதானத்தில் பக்தர்கள் தங்குவதற்கு அனுமதி இல்லை, அதனால், பக்தர்கள் பம்பைக்கு திரும்பிவிட வேண்டும்.. எருமேலியில் இருந்து பெருவழிப்பாதையில் நடந்து சபரிமலை வர அனுமதி கிடையாது.. கடந்த வருடம் பம்பை நதியில் குளிக்க அனுமதி மறுக்கப்பட்டாலும், நதியோரம் ஷவர் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.. ஆனால், இந்த முறை பம்பை நதியில் நீராட பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+