Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கவனமா இருங்க.. அது இங்கயும் வந்துருச்சு! மாநிலங்களுக்கு பறந்த “அலர்ட்” கேரளா விரைந்த மத்திய குழு

Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: இந்தியாவில் முதல் முறையாக கேரளாவில் ஒருவருக்கு குரங்கு அம்மை தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், அம்மாநிலத்துக்கு மத்திய அரசின் குழு விரைந்து இருக்கிறது. அனைத்து மாநிலங்களும் தயாராக இருக்க கடிதம் அனுப்பப்பட்டு உள்ளது.

Recommended Video

    Monkeypox என்றால் என்ன? | Monkeypox Virus | Monkeypox Signs And Symptoms | Oneindia Tamil

    குரங்கம்மை நோய் உலகம் முழுவதும் பல நாடுகளில் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.

    இந்தியாவிலும் கடந்த சில மாதங்களாக குரங்கம்மை தொற்று குறித்து மத்திய மற்றும் அனைத்து மாநில சுகாதாரத்துறை அமைச்சகங்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தன.

    கேரளாவில் பாதிப்பு

    கேரளாவில் பாதிப்பு

    இதுவரை இந்தியாவில் குரங்கு அம்மை நோயால் யாருக்கும் பாதிப்பு ஏற்படாத நிலையில், தற்போது கேரளாவில் ஒருவருக்கு குரங்கு அம்மை தொற்று உறுதி செய்யப்பட்டு இருப்பதாக அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்து இருக்கிறார். கடந்த 12 ஆம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து வந்த நபருக்கு குரங்கு அம்மை தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது என அவர் கூறி இருக்கிறார்.

    11 பேரிடம் பரிசோதனை

    11 பேரிடம் பரிசோதனை

    குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்ட நபரின் உடல் நிலை சீராக இருப்பதாக தெரிவித்த அமைச்சர், அவருடன் தொடர்பில் இருந்த 11 பேர் அடையாளம் காணப்பட்டு உள்ளனர் என்றார். கேரளாவில் குரங்கு அம்மை பாதிப்பு ஒருவருக்கு கண்டறியப்பட்டு உள்ளதை தொடர்ந்து அம்மாநிலத்துக்கு மத்திய சுகாதாரத்துறை குழு விரைந்து இருக்கிறது.

    மத்திய குழு

    மத்திய குழு

    குரங்கு அம்மை தொடர்பான வழிகாட்டுதலை வழங்கும் அந்த குழு, குரங்கு அம்மை தடுப்பில் கேரள அரசுடன் இணைந்து பணியாற்றும் என்று மத்திய சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது. இதற்கிடையே குரங்கு அம்மை தொடர்பாக அனைத்து மாநில அரசுகளுக்கும் வழிகாட்டு நெறிகளுடன் கூடிய கடிதத்தை மத்திய சுகாதாரத்துறை அனுப்பி வைத்து இருக்கிறது. அந்த கடிதத்தில், குரங்கு அம்மை பாதிப்பு உள்ள நாடுகளில் இருந்து வரும் பயணிகளை பரிசோதனை செய்ய வேண்டும் என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.

     மாநிலங்களுக்கு கடிதம்

    மாநிலங்களுக்கு கடிதம்

    குரங்கு அம்மை பாதிப்பு இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படும் நபர்களை கட்டாயம் பரிசோதனை செய்ய வேண்டும் என்றும், நோய்க்கான அறிகுறி இருந்தால் இணை நோய் இருப்பவர்கள் உடனடியாக சிகிச்சை பெற வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. அதேபோல் குரங்கு அம்மை நோய்க்கு தேவையான சிகிச்சைகளை வழங்குவதற்கான மருத்துவ கட்டமைப்புகளை தயார் நிலையில் வைத்திருக்கவும் அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+