அலறவிடும் நிபா வைரஸ்.. ஒரு வாரத்துக்கு கோழிகோட்டில் பள்ளிகள் அனைத்தும் மூடல்! கேரளாவில் என்ன நிலை
திருவனந்தபுரம்: கேரளாவில் நிபா வைரஸ் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், அங்குள்ள கல்வி நிறுவனங்கள் மூடப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நமது அண்டை மாநிலமான கேரளாவில் மீண்டும் இப்போது நிபா வைரஸ் பாதிப்பு மீண்டும் ஏற்பட்டுள்ளது. கொரோனாவை காட்டிலும் நிபா வைரஸ் பாதிப்பால் ஏற்படும் உயிரிழப்பு விகிதம் அதிகம் என்பதால் இது அங்கே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

பொதுவாகக் கேரளாவில் இருந்து வெளிநாடுகளுக்குச் செல்வோரும் திரும்புவோரும் அதிகம். கொரோனா கூட இந்தியாவில் கேரளாவில் தான் முதலில் கண்டறியப்பட்டது.ந இதற்கிடையே இப்போது மீண்டும் நிபா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
முன்னதாக சமீபத்தில் கேரளாவில் இரண்டு பேர் காய்ச்சல் காரணமாக உயிரிழந்தனர். கடந்த மாதம் 30ஆம் தேதி ஒருவர் உயிரிழந்த நிலையில், அதன் பிறகு இம்மாத தொடக்கத்தில் மற்றொருவர் உயிரிழந்தார். அவர்களுக்குக் காய்ச்சல் மற்றும் நிமோனியா பாதிப்பு இருந்துள்ளது. மேலும், அவர்களின் உடலில் நிபா வைரஸ் பாதிப்பின் அறிகுறிகள் இருந்துள்ளதும்.. இதையடுத்து அவர்களிடம் இருந்த சேகரிக்கப்பட்ட மாதிரிகள் சோதனைக்கு அனுப்பப்பட்டன.
மேலும், அவர்களுடன் தொடர்பில் இருந்தோர் தனிமைப்படுத்தப்பட்டன. இதுவரை அங்கே மொத்தம் 6 பேருக்கு நிபா வைரஸ் பாதிப்பு உறுதியாகியுள்ளது. நிபா தொற்று எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. இதனால் நிபா வைரசால் பாதிக்கப்பட்டோருடன் தொடர்பில் இருந்த 800க்கும் மேற்பட்டோர் கண்காணிப்பில் உள்ளனர். மேலும், ஏற்கனவே தமிழ்நாடு எல்லையிலும் கண்காணிப்பு பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதுவரை அங்கே 6 பேருக்கு நிபா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், அங்கே பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே கேரளாவின் கோழிக்கோடு மாவட்டத்தில் நிபா வைரஸ் பரவல் காரணமாக, அடுத்த ஞாயிற்றுக்கிழமை வரை அனைத்து கல்வி நிறுவனங்களும் ஒரு வாரம் மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த உத்தரவு மாவட்டத்தில் உள்ள பள்ளிகள், கல்லூரிகள், டியூஷன் சென்டர்கள் என அனைத்து கல்வி நிறுவனங்களுக்குப் பொருந்தும் என்று கூறப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
மத்தி மீனின் "கோடி" ரூபாய் ரகசியம்.. விலை மலிவான இந்த மீனுக்குள் ஒளிந்திருக்கும் நன்மை! வரப்பிரசாதம்












Click it and Unblock the Notifications