எகிறி எகிறி உதைத்த கணவர்.. "கருப்பா இருக்கியே, அழகாவே இல்லை".. பரிதாப பெண்.. கடைசியில் பார்த்தால்?
திருவனந்தபுரம்: தாய் - தகப்பன் இல்லாமல் 3 குழந்தைகளும் அழுதபடியே உள்ளனர்.. கேரளாவில் இந்த சம்பவம் துயரத்தை தந்து வருகிறது.
கேரள மாநிலம் பத்தனம்திட்டா அருகே அரூர் பகுதியை சேர்ந்தவர் உண்ணி.. 40 வயதாகிறது.. மனைவி பெயர் நீது.. 33 வயதாகிறது..

கடந்த 2011-ம் வருடம்தான், 2 பேருக்கும் கல்யாணம் நடந்துள்ளது.. இவர்களுக்கு 3 குழந்தைகளும் இருக்கிறார்கள்..
தகராறு: ஆனால், தன்னுடைய மனைவியை தொடர்ந்து சித்ரவதை செய்து வந்திருக்கிறார் உண்ணி.. தேவையில்லாமல் தகராறு செய்வாராம்.. நீது அழகாக இல்லை என்ற சொல்லி, அடித்து உதைப்பாராம்.. இதனால், அழுதுகொண்டே பலமுறை தன்னுடைய அம்மா வீட்டுக்கு வந்துவிடுவாராம் நீத்து.. சிலநாட்கள் கழித்து, மாமியார் வீட்டுக்கு சென்று, மனைவியை சமாதானப்படுத்தி மறுபடியும் வீட்டுக்கு அழைத்து வருவாராம் உண்ணி.. மறுபடியும் அடித்து உதைத்து சித்ரவதை செய்வாராம்.
சமீபகாலமாக இந்த பிரச்சனை மேலும் அதிகமாகிவிட்டதாம்.. உண்ணியின் நடவடிக்கைகள் நாளுக்கு நாள் மோசமாகி கொண்டே போயுள்ளது.. கடந்த சில நாட்களாகவே, நீதுவுக்கு சாப்பிடுவதற்கு உண்ணி எதுவுமே தருவதில்லையாம்.. பட்டினி போட்டு சித்ரவதை செய்திருக்கிறார்..
ஸ்கூல்: இப்போது கோடை விடுமுறை முடிந்துள்ள நிலையில், குழந்தைகளுக்கு ஸ்கூல் திறக்க போகிறது.. ஆனால், ஸ்கூலுக்கு போவதற்கு, பாடப் புத்தகங்கள், யூனிபார்ம் என எதையுமே வாங்கி தரவில்லையாம்.. இதனால் மனமுடைந்துபோன நீது, தினமும் அடிவாங்கி சாவதைவிட, ஒரேடியாக இறந்துவிடுவதே மேல் என்ற முடிவுக்கு வந்தார்.. நேற்றைய தினம், பெட்ரூமிலேயே தூக்கிட்டு தற்கொலையும் செய்து கொண்டார்...
இந்த தகவல் அறிந்ததும் அரூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.. நீதுவின் சடலத்தை கைப்பற்றி போஸ்ட் மார்ட்டம் செய்வதற்காக பத்தனம்திட்டா அரசு மருத்துவமனைக்கும் அனுப்பி வைத்தனர்.. மகளின் சடலத்தை பார்த்து நீதுவின் பெற்றோர் கதறி கதறி அழுதார்கள்.. பிறகு, அரூர் போலீசிலும் புகார் செய்தனர்.,.. அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து, உண்ணியையும் கைது செய்தனர்.. இப்போது ஜெயிலில் இருக்கிறார் உண்ணி..
குழந்தைகள்: அம்மா - அப்பா இல்லாமல் அந்த 3 குழந்தைகளும் கதறி கொண்டிருக்கின்றன.. இதற்கெல்லாம் ஒரே காரணம், நீது அழகாக இல்லை என்பதுதானாம்.. இது ஒன்றையே சொல்லி சொல்லி காட்டி, துன்புறுத்தி வந்துள்ளார் உண்ணி.. கடைசியில் அந்த, பரிதாப ஜீவனின் உயிர் ஒரேடியாய் அடங்கி விட்டது...!!!
-
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி!












Click it and Unblock the Notifications