Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"சிக்கன் விற்பனைக்கு தடை.." கோழிகளை காலி செய்யும் பறவை காய்ச்சல்.. கேரளாவில் திடீர் பரபரப்பு

Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: கடந்த சில நாட்களாகவே சிக்கன் மற்றும் முட்டை விலை தொடர்ந்து உயர்ந்து வந்தது. இதற்கிடையே நமது அண்டை மாநிலமான கேரளாவில் திடீரெனப் பறவைக் காய்ச்சல் கண்டறியப்பட்டுள்ளது. இதனால் அந்தப் பகுதிகளில் கோழிக்கறி உட்படப் பண்ணை பறவைகள் விற்பனைக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் கோழிப் பண்ணை விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

குளிர் காலம் தொடங்கியது முதலே முட்டை மற்றும் கறிக்கோழி விலை தொடர்ந்து அதிகரித்து வந்தது. குறிப்பாக முட்டை விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துவிட்டது. சில்லறை விலையில் முட்டை ரூ.8 முதல் 10 வரை விற்கும் அளவுக்கு உயர்ந்துவிட்டது. இதனால் பொதுமக்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டனர். இருப்பினும், விலை உயர்வால் கோழிப் பண்ணை விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Bird Flu Outbreak Confirmed in Kerala s Alappuzha and Kottayam Culling Operations Set to Begin

ரேட் எகிறியது

பொதுவாகவே குளிர் காலத்தில் முட்டை வரத்து குறைவதால் விலை அதிகரிக்கும். மேலும், கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு கேக் தேவையும் அதிகரிக்கும் நிலையில், பேக்கரிக்கள் அதிகளவில் முட்டைகளை வாங்கும். இந்தாண்டும் இதே காரணங்களால் தான் முட்டை விலை பல மடங்கு அதிகரித்துவிட்டது.

இந்தச் சூழலில் தான் நமது அண்டை மாநிலமான கேரளாவில் கோழிப் பண்ணை விவசாயிகளுக்குப் பேரதிர்ச்சி கொடுக்கும் சம்பவம் நடந்துள்ளது. கிறிஸ்துமஸ், புத்தாண்டு சமயத்தில் சிக்கன், வாத்து உள்ளிட்ட கறி விற்பனை அதிகரிக்கும் நிலையில், அங்குத் திடீரெனப் பறவைக் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஆலப்புழா மற்றும் கோட்டயம் மாவட்டங்களில் வீரியமிக்க பறவைக் காய்ச்சல் வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது.

பறவைக் காய்ச்சல்

அங்குச் சேகரிக்கப்பட்ட மாதிரிகள் போபாலில் உள்ள தேசிய உயர்பாதுகாப்பு விலங்கு நோய்கள் நிறுவனத்திற்கு அனுப்பப்பட்ட நிலையில், பறவைக் காய்ச்சல் உறுதி செய்யப்பட்டது. ஆலப்புழா மாவட்டத்தில் நெடுமுடி , செருதனா, கருவாட்டா, கார்த்திகப்பள்ளி, ஆலப்புழா தெற்கு, புன்னப்ர தெற்கு, தக்கழி, புரக்காடு ஆகிய எட்டுப் பஞ்சாயத்துகளிலும், கோட்டயத்தில் குருப்பந்தர, மஞ்ஜூர், கல்லுபுறக்கல், வேலூர் ஆகிய நான்கு கிராமங்களிலும் நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டது.

சிக்கன் விற்பனைக்குத் தடை

கோழிகள் மட்டுமின்றி, காடை மற்றும் வாத்துக்களிலும் இந்தப் பறவைக் காய்ச்சல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து நோய் கண்டறியப்பட்ட பகுதிகளிலிருந்து ஒரு கிலோமீட்டர் சுற்றளவுக்குள் கோழிக்கறி, வாத்துகள் உட்பட அனைத்து விதமான பறவை இறைச்சிகளை விற்க தடை விதிக்கப்பட்டுள்ளது. 2021 மத்திய அரசின் திருத்தப்பட்ட வழிகாட்டுதலின்படி இந்தத் தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

அதிகாரிகள் தகவல்

இருப்பினும், இது வீரியமிக்க வைரஸ் என்பதால் 10 கி.மீ. சுற்றளவுக்குள் கறி விற்பனை மற்றும் பறவைகளை எடுத்துச் செல்லவும் தடை விதிக்க வேண்டும் என்ற குரல்கள் எழுந்துள்ளன. மேலும், அதிகாரிகளும் அங்கு நிலைமை எப்படி இருக்கிறது என்பதைக் கண்காணிக்கும் பணிகளில் இறங்கியுள்ளனர். நவீன முறையில் பண்ணைகளில் வாத்துகள் வளர்க்கப்படும். ஆனால், குட்டநாடு கிராமங்களில் திறந்தவெளி வாத்து வளர்க்கிறார்கள். இதன் காரணமாகவே நோய் பாதிப்பு எளிதாக நடப்பதாக அதிகாரிகள் கூறினர். மேலும், தற்போது நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

பறவைக் காய்ச்சல் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் உத்தரவிட்டுள்ளார்.. மாநிலக் குழு ஒன்றும் சோதனைகளை மேற்கொள்ளச் சம்பவ இடங்களுக்கு விரைந்துள்ளது. இதுவரை கேரளாவில் H5N1 பறவைக் காய்ச்சல் மனிதர்களைத் தாக்கியதில்லை என்ற போதிலும் போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+