"ரொம்ப டேன்ஞர்!" ஸ்கூல்ல கூட பையணும் பொண்ணும் ஒன்னா உட்கார கூடாது.! கேரளாவில் கிளம்பிய எதிர்ப்பு
திருவனந்தபுரம்: பள்ளியில் மாணவ - மாணவிகள் ஒரே இடத்தில் ஒன்றாக அமர்வது குறித்து இஸ்லாமிய அமைப்பின் தலைவர் ஒருவர் சர்ச்சை கருத்தைத் தெரிவித்துள்ளார்.
Recommended Video
இந்தியாவில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதிகரித்து உள்ளது. குறிப்பாகச் சிறார்களுக்கு எதிரான குற்றங்களும் அதிகரித்து உள்ளது.
இதைத் தடுக்க மத்திய, மாநில அரசுகளும் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது. மறுபுறம் பாலியல் சம்பவங்களுக்குப் பெண்களைக் குறை சொல்லும் போக்கும் அதிகரித்து வருகிறது.

சர்ச்சை
இந்நிலையில், அண்டை மாநிலமான கேரளாவில் பையனும் பொண்ணும் ஒன்றாக அமர்வதே ஆபத்தானது என்று ஒருவர் கூறியுள்ளது சர்ச்சையைக் கிளப்பி உள்ளது. கேரள இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பொதுச் செயலாளர் இன்-சார்ஜ் பிஎம்ஏ சலாம் என்பவர் இந்தச் சர்ச்சைக்குரிய கருத்தைத் தெரிவித்தார். அதாவது பள்ளி வகுப்பறைகளில் சிறுவர் மற்றும் சிறுமிகளை ஒன்றாக உட்கார அனுமதிப்பது ஆபத்தானது என்று குறிப்பிட்டுள்ளார்.

அவசியம் என்ன?
இந்தியாவில் மற்ற மாநிலங்களுக்கு முன்னோடியாகப் பாலின சமத்துவ கல்வியை அறிமுகப்படுத்தக் கேரள கம்யூனிஸ்ட் அரசு நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், சலாம் இந்த கருத்தைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், "கேரள அரசின் செயல்பாடுகள் ஆபத்தானது. வகுப்பறைகளில் சிறுமிகளும் சிறுவர்களும் ஒன்றாக உட்கார வேண்டிய அவசியம் என்ன?

ரொம்ப டேன்ஞர்
ஏன் அவர்களை வற்புறுத்துகிறீர்கள்? ஏன் அசம்பாவிதம் நடக்கத் தேவையில்லாத வாய்ப்புகளை உருவாக்குகிறீர்கள்? இதெல்லாம் ரொம்ப டேன்ஞர்.. இவை சிக்கலை மட்டுமே ஏற்படுத்தும்.இதனால் இடைநிற்றல் சிக்கல் கூட ஏற்படும் ஆபத்து உள்ளது. பாலின நடுநிலைமை என்பது மதப் பிரச்சினை அல்ல, தார்மீக பிரச்சினை. பாலின சமத்துவ சீருடைகளை மாணவர்கள் மீது திணிக்க அரசு முயல்கிறது.

பாலின சமத்துவமா?
பாலின சமத்துவம் மாணவர்களைத் தவறாக வழிநடத்தும். இதைத் திரும்பப் பெறுமாறு அரசை நாங்கள் வலியுறுத்துவோம்" என்று தெரிவித்தார். கேரள அரசின் பாலின சமத்துவ கல்வி முறைக்கு அங்குள்ள பல்வேறு இஸ்லாமிய அமைப்புகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்து இருந்தன. ஆண்களும் பெண்களும் ஒன்றாக அமர்ந்து படிக்கும் சூழல் ஏற்பட்டால், பெண் பிள்ளைகள் இடை நிற்றல் அதிகரிக்கும் ஆபத்து இருப்பதாகக் கூறினர்.

பெண்கள்
பாலியல் தொல்லை சம்பவங்களில் பெண்களைக் குறை சொல்லும் போக்கும் சமீப காலமாக அதிகரித்து வருகிறது. கேரளாவில் பாலியல் தொல்லை தொடர்பான விசாரித்த கேரளா நீதிமன்றம், பெண் பாலியல் ரீதியான செயல்பாடுகளைத் தூண்டும் வகையிலான ஆடைகளை அணிந்து இருக்கும் போது, சட்டப்பிரிவு 354ஏ (பாலியல் தொல்லை தொடர்பான வழக்கு) பொருந்தாது" என்று கூறி சர்ச்சை கிளப்பி இருந்தது குறிப்பிடத்தக்கது.
-
பள்ளிகளுக்கு 155 நாட்கள் லீவு! காலண்டர் வெளியீடு! அதிகபட்சம் விடுமுறை எந்த மாதம்? கல்வித்துறை லிஸ்ட் -
கேரளாவில் அரசு பேருந்துகளில் இனி இலவச பயணம்! சாதனை உத்தரவில் கையெழுத்திட்ட பெண் செயலாளர்! சூப்பர் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை!












Click it and Unblock the Notifications