"பயங்கர சத்தம்.." ரோடு முழுக்க திடீரென கிளம்பிய வெள்ளை புகை.. பரபரப்பான தமிழக கேரள எல்லை! என்னாச்சு
திருவனந்தபுரம்: கேரள மாநிலத்தில் லாரி ஒன்றின் பின்னால் இருந்து திடீரென வெள்ளை நிறத்தில் அதிகப்படியாக வாயு வெளியேறியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழ்நாடு கேரள எல்லையில் எப்போதும் வழக்கம் போல போக்குவரத்து சேவை இருந்து கொண்டே தான் இருக்கும். இதனால் தமிழ்நாடு கேரள எல்லையில் உள்ள சாலைகள் எப்போதும் பரபரப்பாகவே இருக்கும்.
இரு மாநிலங்களுக்கும் இடையே தொடர்ச்சியாக சரக்கு மற்றும் பேருந்து போக்குவரத்து இருந்து கொண்டே இருக்கும். இதனிடையே கேரளாவின் எர்ணாகுளத்தில் இருந்து கார்பன் டை ஆக்சைட் ஏற்றி வந்த டேங்கர் லாரி தமிழக எல்லையில் விபத்தில் சிக்கியதால் சற்று நேரம் பரபரப்பு நிலவியது.

எல்லை: தமிழ்நாடு கேரள எல்லை பகுதியில் அமைந்துள்ள முக்கிய பகுதிகளில் ஒன்று வாளையாறு. இங்கே தான் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. கேரளா மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் இருந்து டேங்கர் லாரி மூலம் கார்பன் டை ஆக்சைடு ஏற்றிச் செல்லப்பட்டது. கோவையில் இருக்கும் சோடா தயாரிக்கும் நிறுவனத்திற்கு கார்பன் டை ஆக்சைடு ஏற்றி வந்துள்ளனர்.
அப்போது அந்த டேங்கர் லாரி தமிழ்நாடு - கேரளா எல்லையான வாளையாறு வட்டப்பாரா அருகே வந்த போது, திடீரென கோவையை நோக்கி சென்று கொண்டிருந்த காய்கறி லோடு ஏற்ற வந்த மற்றொரு லாரி, இந்த டேங்கர் லாரியில் பின்புறத்தில் மோதியுள்ளது.
விபத்து: எதிர்பாராத விதமாக காய்கறி லோடு லாரி மோதிய நிலையில், கார்பன் டை ஆக்சைடு ஏற்றி வந்த லாரி வால்வில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் உள்ளே இருந்த கார்பன் டை ஆக்சைடு திடீரென வெளியேற தொடங்கியது. பயங்கர சத்தத்துடன் கார்பன் டை ஆக்சைடு வெளியேற தொடங்கிய நிலையில், அங்கே வெள்ளை புகை மண்டலம் ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கே பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இது குறித்து உடனடியாக போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வாளையாறு போலீசார், பாலக்காடு - கோவை நெடுஞ்சாலையில் போக்குவரத்தை முழுமையாக நிறுத்தினர். கஞ்சிக்கோடு தீயணைப்பு துறையினரும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, கார்பன் டை ஆக்சைடு வெளியேற்றத்தை தடுக்க போராடினர்.

வெளியேறிய கார்பன் டை ஆக்சைட்: டேங்கர் லாரியில் வால்வு பகுதியில் ஏற்பட்ட உடைப்பை அடைக்க சுமார் 2 மணி நேரம் வரை ஆகியுள்ளது. தீவிர போராட்டத்திற்கு பின்னரே தீயணைப்புத் துறையினர் வால்வை சீர் செய்தனர்.
திடீரென கோவை பாலக்காடு தேசிய நெடுஞ்சாலையில் இப்படி அதீத சத்தத்துடன் கார்பன் டை ஆக்சைடு வெளியேறியதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பான வீடியோவும் இணையத்தில் வெளியாகி பரபரப்பை கிளப்பியுள்ளது. இது குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள வாளையாறு போலீசார் தீவிர விசாரணையில் இறங்கியுள்ளனர்.
-
தங்கம் மீண்டும் ரூ.10,000? மக்கள் அனைவருக்கும் உள்ள கேள்வி.. ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் நறுக் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி யாருக்கு கிடைக்கும்? நகை மதிப்பீட்டில் உள்ள ஏல ரகசியம் இதுதானா -
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
பேசி முடித்ததுமே சரிந்த பாமக நிறுவனர் ராமதாஸ்.. கேள்விப்பட்டதும் உடனே போன் போட்ட முதல்வர் ஸ்டாலின்! -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
LIK vs TN 2026 box office: மூன்று நாள் முடிவில் பிரதீப் ரங்கநாதன் Vs நட்டி யாருக்கு வெற்றி? வசூல் நிலவரம் -
யாருங்க இந்த ஐடியாலாம் தருவது? தவெக விஜய் கொடுத்த வாக்குறுதியில்.. இருக்கும் பெரிய ஓட்டை! -
'ஜனநாயகன்' பட லீக்கில் என்ன நடந்தது.. தமிழக காவல்துறை முழு விளக்கம்












Click it and Unblock the Notifications