கட்சி கொள்கை விதிப்படியே.. .ஷைலஜாவுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கவில்லை.. சி.பி.ஐ(எம்) விளக்கம்!
திருவனந்தபுரம்: கட்சியின் கொள்கை விதிகளின்படியே ஷைலஜாவுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படவில்லை என்று கேரள சிபிஐ (எம்) மாநில செயல் செயலாளர் விஜயராகவன் தெரிவித்தார்.
Recommended Video
சமீபத்தில் நடந்து முடிந்த தேர்தலில் கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி(எல்.டி.எஃப்) அமோக வெற்றி பெற்று தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சியில் அமர்ந்தது.
பினராயி விஜயன் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி(எல்.டி.எஃப்) அரசின் அமைச்சரவை பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது.

.ஷைலஜா டீச்சருக்கு வாய்ப்பு இல்லை
அமைச்சரவையில் முதல்வர் பினராயி விஜயனை தவிர பழைய அமைச்சர்கள் யாருக்கும் மீண்டும் இடமில்லை.எல்லோருமே புதுமுகங்கள்தான். அமைச்சரவையில் ஷைலஜா டீச்சர் என்று அழைக்கப்படும் கேரள சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த கே.கே.ஷைலஜாவுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படாதது கண்டு பலரும் அதிர்ச்சி அடைந்தனர்.

'ராக்ஸ்டார்' சுகாதார அமைச்சர்
உலக ஊடகங்களால் 'ராக்ஸ்டார் சுகாதார அமைச்சர்' என்று புகழப்பட்ட ஷைலஜா கொரோனா வைரஸ் காலத்தில் கேரள சுகாதாரத்துறையை உலக அளவில் கொண்டு சேர்த்தவர். இது தவிர நிபா வைரசை சிறப்பாக எதிர்க்கொண்டு அதனை விரட்டியடித்தவர். கேரள சுகாதாரத்துறையின் நடவடிக்கையை ஐ.நா அமைப்பே பாராட்டியது.

மக்கள் கேள்வி
இது தவிர சட்டமன்றத்தில் ஆளும் கட்சி ஆட்சியை பிடிக்க முக்கிய காரணமாக இருந்தவர் ஷைலஜா. இத்தகைய சிறப்பு வாய்ந்த ஒரு நபருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்காதது ஏன்? என்றும் ஷைலஜாவுக்கு மீண்டும் சுகாதாரத்துறை அமைச்சர் பதவி கொடுக்க வேண்டும் என்றும் பிரமுகர்கள் முதல் சாதாரண மக்கள் வரை வலியுறுத்தி வருகின்றனர். டுவிட்டரில் #bringourteacherback, # BringBackShailajaTeacher என்ற ஹேஷ்டேக்குகளை பயன்படுத்தி ஷைலஜா டீச்சருக்கு ஆதரவாக பலர் பதிவிட்டு வருகின்றனர்.

முக்கியத்துவம் வாய்ந்தவை
இந்த நிலையில் ஷைலஜாவுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்காதது கட்சியின் கொள்கைப்படி எடுத்த முடிவு என்று சிபிஐ (எம்) மாநில செயல் செயலாளர் விஜயராகவன் கூறியுள்ளார். இது தொடர்பாக நிருபர்களிடம் அவர் கூறுகையில், ' கம்யூனிஸ்ட் கட்சியைப் பொருத்தவரை, அரசியலும், அமைப்பும் சமமாக முக்கியத்துவம் வாய்ந்தவை. தற்போதைய முடிவும் இதற்கேற்றார்போல் தான் இருக்கிறது.

கொள்கை விதிதான் காரணம்
சுகாதாரத் துறை அமைச்சரை அமைச்சரவையில் இடம் பெற செய்யாதது கட்சியின் அரசியல் மற்றும் அமைப்பு சார்ந்த முடிவு. இதில் மறுபரிசீலனை செய்ய ஏதுமில்லை. இது தொடர்பாக கட்சி தலைமை ஏற்கனவே விளக்கம் அளித்துள்ளது' என்று விஜயராகவன் தெரிவித்தார். பழையவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கக் கூடாது என்ற சிபிஐ (எம்) கட்சியின் கொள்கை விதிகள் காரணமாக ஷைலஜா டீச்சருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications