இந்தியாவின் முதல் தலித் பிரதமர் கார்கே.. சசி தரூர் ஒரே போடு! இந்தியா கூட்டணில கொளுத்தி போட்டுட்டாரே
திருவனந்தபுரம்: 2024 தேர்தலில் காங்கிரஸ் தரப்பில் மல்லிகார்ஜுன கார்கே அல்லது ராகுல் காந்தி பிரதமர் வேட்பாளராக முன்னிருத்தப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக காங்கிரஸ் எம்பி சசி தரூர் தெரிவித்து உள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக ஆட்சிகாலம் 2024 ஆம் ஆண்டுடன் நிறைவடைய இருக்கிறது. அடுத்த ஆண்டுக்கு மே மாதம் நாடாளுமன்ற தேர்தல் நடத்தப்படலாம் என்று கூறப்படுகிறது. அதற்கான வேலைகளில் தற்போது ஆளும் பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் ஈடுபட்டு வருகின்றன. மத்தியில் ஆளும் பாஜகவை வீழ்த்த காங்கிரஸ், இடதுசாரிகள், திமுக, திரிணாமூல் காங்கிரஸ், ஜேடியு, ஆர்ஜேடி, ஆம் ஆத்மி, சமாஜ்வாடி, என்சிபி, மாநாட்டு கட்சி உள்ளிட்ட கட்சிகள் இணைந்து 'இந்தியா' என்ற பெயரில் கூட்டணி அமைத்து தேர்தலில் போட்டியிட இருப்பதாக அறிவித்து உள்ளன.

2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் யார்? தலைமை தாங்கும் கட்சி எது என்று எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சசி தரூர் 2024 மக்களவைத் தேர்தலில் இந்தியா கூட்டணி வெற்றிபெற்று மத்தியில் ஆட்சியைப் பிடித்தால், மல்லிகார்ஜுன கார்கே அல்லது ராகுல் காந்தி காங்கிரஸ் தரப்பில் பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தப்பட வாய்ப்பு இருப்பதாக தெரிவித்து இருக்கிறார்.
'இந்தியா' என்ற பெயரில் எதிர்க்கட்சிகள் அமைத்து உள்ள கூட்டணியில் 2024 மக்களவைத் தேர்தலுக்கான பிரதமர் வேட்பாளர் யார் என்ற கேள்வி எழுந்து இருக்கிறது. மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு பிரதமர் வேட்பாளர் பற்றி முடிவு எடுக்கப்படும் கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் தெரிவித்து உள்ளார்கள். இந்த நிலையில்தான் காங்கிரஸ் கட்சியின் செயற்குழு உறுப்பினரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சசி தரூர் தெரிவித்த கருத்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கேரள தலைநகர் திருவனந்தபுரத்தில் உள்ள டெக்னோ பார்க்கில் 'வே டாட் காம்' அலுவலகத்தை சசி தரூர் திறந்து வைத்தார். அங்கு தொழில்நுட்ப நிபுணர்களுடன் பேசிய அவர், "அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் மக்களவைத் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் கூட்டணி உள்ளது. எனவே வியப்பூட்டும் முடிவுகள் கிடைக்கும். இந்தியா கூட்டணி பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியை வீழ்த்தி, ஆட்சியைப் பிடிப்பதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. நாம் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.
தேர்தலில் இந்தியா கூட்டணி வெற்றி பெற்று இருந்தால் காங்கிரஸ் கட்சி சார்பில் அக்கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன் கார்கேவோ அல்லது காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியோ பிரதமராக முன்னிறுத்தப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. இருப்பினும், இது கூட்டணியாக உள்ளதால் முடிவுகள் வந்த பின்னரே அனைத்துக் கட்சிகளும் இணைந்து பிரதமர் யார் என்று தேர்வு செய்வார்கள். என்னுடைய யூகம் காங்கிரஸ் தரப்பில் ராகுல் காந்தி அல்லது மல்லிகார்ஜுன கார்கேதான். கார்கே பிரதமராக அறிவிக்கப்பட்டால் இந்தியாவின் முதல் தலித் பிரதமராக அவர் இருப்பார்." என்று தெரிவித்தார்.
-
பாஜக கூட ஓகே.. தவெகதான் பிரச்சனை.. செல்வப்பெருந்தகை சரமாரி குற்றச்சாட்டு -
விலை பேசப்படும் காங்கிரஸ் சீட்டுகள்! ராகுல் காந்திக்கு பறந்த புகார்! -
அடித்து ஆடிய எடப்பாடி.. திமுக கேம்பில் எதிர்பார்க்காத குளறுபடி.. ஸ்டாலின் மனதில் என்ன இருக்கிறது?.. -
3 முறை பிரதமர்.. பாஜகவிற்கே எடப்பாடி 27 தான் தந்துள்ளார்.. காங்கிரசுக்கு 28.. திமுகவினர் குமுறல் -
ராகுல் சொல்லியும் அடங்கலையே! கூட்டணிக்குள் குண்டு வைக்கும் மாணிக்கம் தாகூர்! -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications