கொச்சி சென்ற கப்பல் கவிழ்ந்தது.. மீட்பு பணி தீவிரம்.. கரை ஒதுங்கும் பொருட்களை தொட வேண்டாம் என அலர்ட்
திருவனந்தபுரம்: விழிஞ்சம் துறைமுகத்திலிருந்து கொச்சிக்கு புறப்பட்ட கண்டெய்னர் கப்பல் 38 நாட்டிக்கல் மைல் தொலைவில் கடலில் சரிய தொடங்கியுள்ளது. இந்த விபத்தால், கப்பலில் உள்ள கண்டெய்னர்கள் கடலில் மூழ்க தொடங்கின. இந்த விபத்தில் இதுவரை 21 பேர் பத்திரமாக மீட்கப்பட்ட நிலையில், எஞ்சியுள்ள 3 பேரை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
லைபிரீயன் நாட்டுக்கு சொந்தமான கண்டெய்னர் சரக்கு கப்பல் MSC ELSA 3- கொச்சியில் இருந்து 38 நாட்டிக்கல் மைல் தொலைவில் கடலில் மூழ்க தொடங்கியது. விழிஞ்சம் துறைமுகத்தில் இருந்து புறப்பட்ட இந்த கப்பல், கடலில் விபத்துக்கு உள்ளாகியுள்ளது. விழிஞ்சம் துறைமுகத்தில் இருந்து கொச்சிக்கு புறப்பட்ட கப்பல், நேற்று இரவு 10 மணியளவில் சென்றடையும் என எதிபார்க்கப்பட்டது.

கப்பல் கவிழ்ந்தது
ஆனால், அரபிக்கடலில் இந்த கப்பல் மூழ்க தொடங்கியது. இந்த கப்பல் விபத்தின் போது கப்பலில் 24 பேர் இருந்ததாகவும் அவர்களில் 9 பேர் பாதுகாப்பு உடைகளுடன் தப்பித்ததாகவும் சொல்லப்படுகிறது. கப்பலை மீட்கும் பணிக்காக 2 கப்பல்களும் ராணுவ ஹெலிகாப்டரும் சென்றுள்ளன. கப்பலில் இருந்து 24 பேர் மீட்கப்பட்டுள்ள நிலையில், 3 பேரை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
தென்மேற்கு பருவமழை காரணமா?
கப்பலில் இருந்த ரசாயனம் கடலில் கொட்டியதால் அப்பகுதி ஆபத்தான பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. விபத்துக்குள்ளாகியிருக்கும் கப்பலில் 367.1 மெட்ரிக் டன் சப்லர் எரிவாயு எண்ணெயும் 84.4 மெட்ரிக் டன் கேஸ் எண்ணையும் இருந்துள்ளது. தற்போது கப்பல் மூழ்க தொடங்கியிருப்பதால் சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்தும் என்று இயற்கை ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
விபத்துக்குள்ளான கப்பலில் இருந்து எண்ணய் கடலில் கலக்காதவாறு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். இந்த ரசாயன எண்ணெய் படலங்கள் கரை ஒதுங்கும் பட்சத்தில் அதன் அருகே பொதுமக்கள் செல்ல வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு பருவமழை கேரளாவில் தொடங்கியுள்ளது. இதனால், அரபிக் கடலில் ஏற்பட்ட மாற்றம் காரணமாக இந்த விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.
என்ன நடந்தது?
கப்பலில் பயணித்த சிப்பந்திகளில் மாஸ்டர் ரஷ்யாவை சேர்ந்தவர் ஆவார். ஏனைய 20 பேர் பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்தவர்கள் என்றும் இரண்டு பேர் உக்ரைன் மற்றும் ஒருவர் ஜர்ஜ்ஜியாவை சேர்ந்தவர் என்றும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அதிகாரிகள் கூறியதாவது:- சனிக்கிழமை பிற்பகல் 1.30 மணியளவில், கப்பலின் நிர்வாக குழுவிடம் இருந்து உதவி கோரப்பட்டது. இதையடுத்து, இரண்டு கடற்படை கப்பல் மற்றும் ஒரு டார்னியர் போர் விமானம் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளது.
-
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை? -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
இரட்டை இலைக்கு ‘குட்பை’.. அதிமுகவை அடக்கிய பாஜக? திமுக கூட்டணிக்கு அடிக்கப்போகும் அதிர்ஷ்டம் -
ப்ளீஸ் சார்.. என் ஹனிமூனை விட்ருவீங்களா? கலெக்டருக்கு வித்தியாசமான மனு தந்த கேரளா அரசு பள்ளி ஆசிரியை -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்? -
திமுக சொன்ன அந்த வார்த்தை.. தொகுதி பங்கீட்டில் அதிருப்தியான மநீம.. நாளை கமல்ஹாசன் ஆலோசனை -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
அதிமுக முன்னாள் அமைச்சர்களின் உருவபொம்மைகளுக்கு செருப்பு மாலை! பொள்ளாச்சியில் பரபரப்பு -
திரிஷா பற்றிய மொத்த பிரச்சனைகளுக்கும் ஒரே போஸ்டில் அவரே பதில்.. இப்படி ஒரு ரியாக்ஷனை எதிர்பார்க்கலையே












Click it and Unblock the Notifications