கொரோனாவை படுவேகமாக கட்டுப்படுத்திய கேரளா- ஏப்.4-லிலேயே ரேபிட் டெஸ்ட் கருவிகள் மூலம் அதிரடி நடவடிக்கை
திருவனந்தபுரம்: நாட்டில் கேரளாவில்தான் கொரோனாவின் உக்கிரம் முதலில் அதிகமாக இருந்தது. ஆனால் தம்முடைய முழு வீச்சிலான நடவடிக்கைகள் மூலம் கொரோனாவின் தாக்கத்தை வெகுவேகமாக கட்டுப்படுத்திவைத்திருக்கிறது சபாஷ் கேரளா மாநில அரசு.
Recommended Video
மகாராஷ்டிராவும் கேரளாவும்தான் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களாக இருந்தன. ஆனால் தற்போது நிலைமை வேறு. கொரோனாவால் பாதிக்கப்பட்டோரில் சுமார் 50% கேரளாவில் குணமடைந்தும் வருகின்றனர்.

இந்தியாவின் வேறு எந்த ஒரு மாநிலமும் செய்யாத மகத்தான சாதனை இது. கொரோனாவை கட்டுப்படுத்த முழு அளவிலான லாக்டவுன், மக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்காத அளவுக்கு நிவாரணப் பணிகள், மருத்துவ சேவைகள் என அரசு இயந்திரம் முழுவதும் அர்ப்பணிப்புடன் செயல்பட்டதால்தான் கேரளாவில் சாதிக்க முடிந்தது.
தமிழகத்தில் இப்போதுதான் பேசுபொருளாக இருக்கிறது கொரோனாவை உடனுக்குடன் கண்டுபிடிக்கக் கூடிய ரேபிட் டெஸ்ட் கருவிகள் கொள்முதல்தான். அதுவும் நாட்டிலேயே தமிழகம்தான் ரேபிட் டெஸ்ட் சோதனை கருவிகளை வாங்கியதாகவும் அரசு சொல்கிறது. இன்னொரு பக்கம், தமிழகத்துக்கு வர வேண்டிய கருவிகளை மத்திய அரசு எடுத்துக் கொண்டுவிட்டது; அமெரிக்காவுக்கு கொடுத்துவிட்டார்கள் என்கிறது தகவல்கள்.
உண்மையில் இந்த கருவிகள் இன்னமும் நமக்கு வரவே இல்லைதான். அதேநேரத்தில் கேரளாதான் இத்தகைய கருவியை பயன்படுத்தி சாதனை நிகழ்த்திய முதல் மாநிலமும் கூட.
கேரளாவின் சுகாதாரத்துறை அமைச்சர் ஷைலஜா கடந்த 4-ந் தேதியன்று இந்துஸ்தான் டைம்ஸ் நாளேட்டுக்கு அளித்த பேட்டியில், 2000 ரேபிட் டெஸ்ட் கருவிகளை கேரளா வாங்கி பரிசோதனைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த கருவியின் மூலமாக மட்டுமல்ல பிசிஆர் டெஸ்ட் மூலமாகவும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு உறுதி செய்யப்படும் என விவரித்தும் இருக்கிறார். இந்த பேட்டியை டேக் செய்திருக்கும் சமூக ஆர்வலர் சுமந்த் சி ராமன், ஏப்ரல் 4-ல் கேரளா 2,000 ரேபிட் டெஸ்ட் கருவிகளை கொள்முதல் செய்திருக்கும் போது ஏன் இதர மாநிலங்கள் இதனை செய்யவில்லை என கேட்டிருக்கிறார்.
ஆம் உண்மையில் நல்ல கேள்விதான்-பாராட்டுக்குரியது கேரளா அரசு!
-
பெரிய சிக்கலில் இந்தியா! 1970ல் நடந்தது போல.. இப்போதும் நடக்கப்போகுது! வெளியான ஷாக் தகவல்! -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
Election Commission: தேர்தல் ஆணைய கடிதத்தில் பாஜகவின் முத்திரை.. கேரள அரசியல் கட்சிகள் அதிர்ச்சி.. நடந்தது என்ன? -
ரெடியா இருங்க மக்களே! சட்டுன்னு ஏறப்போகும் பெட்ரோல், டீசல் விலை! தேதி குறிச்சாச்சு! -
தெறித்து ஓடும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்! பாதாளத்திற்கே போகும் இந்திய பங்குச்சந்தைகள்.. 3 காரணங்கள் -
துரந்தர் இல்லை.. துரோகி.. இந்திய விமான படை வீரர் அதிரடி கைது! பாகிஸ்தானுக்காக உளவு பார்த்தது அம்பலம் -
ஈரானில் விழுந்த குண்டுகளால்.. இந்தியாவில் உயர்ந்த குடிநீர் விலை.. இன்னும் என்னவெல்லாம் நடக்குமோ! -
வந்தாச்சு LPG ATM.. இனி காத்திருக்கவே வேண்டாம்! வெறும் 2 நிமிடத்தில் புதிய சிலிண்டர் ஈஸியா வாங்கலாம் -
முடிவுக்கு வந்தது இழுபறி! புதுச்சேரி, கேரளா, அசாமில் வேட்புமனுத் தாக்கல் ஓவர்! யாருக்கு வெற்றி? -
கேரளா தலையெழுத்தை தீர்மானிக்கும் "அந்த" சில ஆயிரம் வாக்குகள்.. கரையேறுமா காங்கிரஸ்? -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல!












Click it and Unblock the Notifications