கேரளா: தடை உத்தரவை மீறி பிரார்த்தனை கூட்டம் நடத்திய பாதிரியார் அதிரடி கைது
திருவனந்தபுரம்: கேரளாவில் தடை உத்தரவை மீறி பிரார்த்தனை கூட்டம் நடத்தியதாக பாதிரியாரை அம்மாநில போலிசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
நாட்டில் கொரோனா வைரஸ் அதிகம் பாதித்த மாநிலங்களில் கேரளாவும் ஒன்று. இதனால் கேரளாவில் பொதுமக்கள் ஒன்று கூடுதல் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

கேரளா அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முழு அளவில் செயல்படுத்தி வருகிறது. கேரளா கத்தோலிக் பிஷப் கவுன்சிலும் தேவாலயங்களில் கூட்டு பிரார்த்தனைகளுக்கு தடை விதித்திருக்கிறது.
இந்த நிலையில் திரிசூர் மாவட்டத்தில் 100 பேர் பங்கேற்ற பிரார்த்தனை கூட்டத்தை பாதிரியார் பாலி பாதயாத்தி நடத்தியிருக்கிறார். இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதனையடுத்து தடை உத்தரவுகளை மீறியதாக பாதிரியார் பாலிய் பாதயாத்தியை போலீசார் கைது செய்தனர். இச்சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications