நம்ம ஊர்லதான் சாகடிக்க பாயாசம்.. கேரளாவில் ஆட்டுக் கால் சூப் போல.. கொடூர வரலாறு படைத்த ஜோலி!
ஜோலியை 6 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது
Recommended Video
கேரளா: நம்ம ஊர்ல பாயாசம் மாதிரி.. கேரளாவில் ஆட்டுக்கால் சூப் போல.. அதான் குடும்பத்தில் இருந்த 6 பேருக்கும் சூப்பில் விஷம் வைத்து கொன்றுள்ளார் ஜோலி. கேரளாவே ஷாக்கில் உறைந்து கிடக்கும் இந்த சமயத்தில், போலீசார் ஜோலி உட்பட 2 பேரை காவலில் எடுத்து விசாரிக்க போகிறார்களாம்! இதனால் இன்னும் என்னென்ன கர்ணகொடூரங்களை ஜோலி செய்துள்ளாரோ என்ற பரபரப்பு கலந்த பீதி மக்களிடம் தொத்தி கொண்டுள்ளது!
கேரளாவில் தொடர் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஜோலி ஜோசப் உள்பட 2 பேரை போலீஸ் 6 நாள் விசாரிக்க அனுமதி அளித்துள்ளது. ஜோலி ஜோசப்பை அக்டோபர் 16 ம் தேதி வரை போலீஸ் காவலில் விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சொத்துக்காக, அதிகாரத்துக்காக தன் குடும்ப உறுப்பினர்களை கொலை செய்துள்ளார் ஜோலி என்ற 47 வயது பெண். இப்போதுதான் 47 வயது.. 14 வருடங்களுக்கு முன்னால் இந்த பெண்ணின் வயதையும், செய்திருக்கும் காரியத்தையும் நினைத்தால் நம் உடம்பே நடுங்குகிறது.

அலர்ஜி
பெண்கள் என்றாலே ஜோலிக்கு அலர்ஜியாம்.. அதனால் மாமியார் உட்பட 2வது கணவன் ஷாஜூவின் மனைவி சிலி, அவரது மகள் ஆல்பைன் என பெண்களை குறி வைத்து கொன்றுள்ளார். இவர்களை தவிர, மேலும் 5 பெண்களையும் கொலை செய்ய முயற்சியும் செய்திருக்கிறாராம்.

6 பேர் கொலை
மற்ற ஆண்களுடன் பேசக்கூடாது என்று கணவர் சொன்னதால் அவரையும் போட்டு தள்ளிவிட்டார் ஜோலி. ஆக மொத்தம் 6 கொலைகளை ஜோலி அரங்கேற்றி உள்ளார். இதில் 5 கொலைகளை அதாவது தன் புருஷன் உட்பட 5 பேரை தான்தான் கொன்றதாக ஜோலியே துணிச்சலுடன் ஒப்புக் கொண்டுள்ளார்.

நிரூபணம்
ஆனால், இப்படி 6 பேரை கொலைகளை ஜோலி மட்டுமே செய்திருக்க வாய்ப்பிருக்காது என்று போலீசார் போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட் வந்தவுடனேயே சந்தேகித்தனர். அதனால், இதுதொடர்பாக விசாரித்ததில் ஜோலிக்கு 2 பேர் உதவி இருக்கிறார்கள். நகைக்கடையில் வேலை பார்க்கும் மேத்தீவ், பிராஜி குமார் ஆகியோர்தான் அவர்கள். சூப்பில் கலந்து தர சயனைடை ஜோலிக்கு தந்தது இவர்கள்தான் என்பது நிரூபணமானது.

போலீஸ் கஸ்டடி
இதையடுத்து, ஜோலி உட்பட 2 பேரை தாமரசேரி முதன்மை நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்ப்படுத்தினர். குற்றம்சாட்டப்பட்ட 2 பேரையும் 2 வாரங்கள் ரிமாண்ட் செய்து நீதிபதி உத்தரவிட்டிருந்தார். இந்த நிலையில், ஜோலியை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரப்பட்டிருந்தது. அதன்படி, அதற்கான உத்தரவும் இன்று பிறப்பிக்கப்பட்டுள்ளது.

வெளிவரும் பகீர்கள்
ஜோலி ஜோசப் உட்பட 2 பேரை போலீஸ் 6 நாள் விசாரிக்க கோர்ட் அனுமதி அளித்துள்ளது. அதாவது வரும் அக்டோபர் 16 ம் தேதி வரை இவர்களிடம் போலீஸார் விசாரணை நடத்த உள்ளனர். இதில் இன்னும் என்னென்ன சமாச்சாரங்களை ஜோலி அள்ளி வீசப்போகிறாரா தெரியவில்லை என்பதால், பெரும் பரபரப்பில் ஜோலி விவகாரம் தலைதூக்கி உள்ளது.
-
பாப்பா எப்படி இருக்கா? தந்தை கேட்டதுமே கண்கலங்கிய டாக்டர்கள்.. ஆஸ்பத்திரியில் நடந்த அந்த அதிசயம் -
என்னது துணை முதலமைச்சர் பதவி தராங்களா.. விஜய் தான் முதலமைச்சர்.. செங்கோட்டையன் தடாலடி -
சல்லி சல்லியாக நொறுங்கிடுச்சே.. துபாய் அஸ்திவாரமே ஆடுதுங்க.. 'சொர்க்க பூமி' இப்படி ஆகிடுச்சே! -
விஜய் ஏமாத்திட்டாரு.. பருத்தி மூட்டை குடோனிலேயே இருந்திருக்கலாம்.. திமுகவில் இணையும் செங்கோட்டையன்? -
விஜய் வந்தால்! அதிமுக 134 தொகுதிகளில் மட்டுமே போட்டியிடும்? எடப்பாடி பழனிசாமியின் சீட் கணக்கு! -
இப்போ வேண்டாம்.. தேர்தலுக்கு பின் ஆதரவு தருகிறேன்.. சிஎம் போஸ்ட் தாங்க.. பாஜகவிடம் பேசிய விஜய்? -
திருவள்ளூர் மக்கள் ஏக்கத்துடன் பார்த்த பல ஆண்டு கனவு... ரயில் நிலையத்தில் பார்த்துமே பெரு மகிழ்ச்சி -
"இது" இல்லை என்றால் சிலிண்டர் வராது! புக்கிங் விதிகளை திடீரென மாற்றிய மத்திய அரசு! முக்கிய அறிவிப்பு -
வேலைக்கு ஆகாத டிரம்ப் பிளான்! அமெரிக்காவின் தலைமையை ஏற்க தயங்கும் உலக நாடுகள்! ஈரான் வெற்றி! -
வடிவேலுவை சினிமாவில் நுழைய விட்டதும், வளர்த்து விட்டதும் தப்பு.. ப்ளூ சட்டை மாறன் காட்டம்! பின்னணி சம்பவம் -
தவெக 6-12 தொகுதிகள் ஜெயிக்க வாய்ப்பு.. விஜய் வருகையால் அதிமுகவுக்கு பூஸ்ட்? கருத்துக்கணிப்பு ரிசல்ட் -
ஜோதிடரிடம் இருந்து வந்த மெசேஜ்.. வியூகத்தை மாற்றும் எடப்பாடி பழனிசாமி












Click it and Unblock the Notifications