அதி தீவிர புயல் டூ சூப்பர் புயலாக மாறிய பைபர்ஜாய்.. கடலில் வலுவிழக்குமா.. எங்கே கரையை கடக்கும்?
திருவனந்தபுரம்: அரபிக் கடலில் நிலைக் கொண்டிருந்த அதி தீவிர புயலான பைபர்ஜாய் தற்போது சூப்பர் புயலாக மாறியதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்த புயல் ஜூன் 15 ஆம் தேதி கரையை கடக்கும்.
இதுகுறித்து வானிலை மையம் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: பைபர்ஜாய் என்ற அதி தீவிர புயல் ஜூன் 10 ஆம் தேதி அதிகாலை 5.30 மணிக்கு கிழக்கு- மத்திய அரபிக் கடலில் அருகில் மையம் கொண்டிருந்தது.

மேலும் தீவிரமடைந்து அடுத்த 24 மணி நேரத்தில் வடக்கு- வடகிழக்கு நோக்கி நகரக் கூடும் என தெரிவித்துள்ளது. இந்த பயங்கரமான புயல் தங்கள் நாட்டில் கரையை கடக்க வாய்ப்பில்லை என பாகிஸ்தான் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
எனினும் சிந்து மற்றும் பலுசிஸ்தானில் உள்ள கடலோர பகுதியில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய உஷாராக இருக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. கராச்சியிலிருந்து 1,120 கி.மீ. தொலைவில் கராச்சிக்கும் லாகூருக்கும் இடையே உள்ள அதே தூரத்தில வெள்ளிக்கிழமை அமைந்திருந்தது என பாகிஸ்தான் ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.
தேசிய பேரிடர் மீட்பு படையினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குஜராத்தில் உள்ள போர்பந்தர் கிர் சோம்நாத் மற்றும் வல்சாத் ஆகிய இடங்களில் தலா ஒரு குழுமை நிறுத்தவுள்ளது. இந்த புயலால் அடுத்த இரு தினங்களுக்கு குஜராத்தில் ஒரு சில இடங்களில் மழைப்பொழிவு இருக்கும். இரு நாட்களுககு பிறகு சவுராஷ்டிரா மற்றும் கட்ச் பகுதிகளில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த புயல் முதலில் தெற்கு- தென் மேற்கு நோக்கி நகர்ந்த நிலையில் இரு தினங்களுக்கு பிறகு வடக்கு- வடகிழக்கு நோக்கி நகரத் தொடங்கும். இரு நாட்களுக்கு பிறகு குஜராத்தின் கடலோர பகுதிகளில் காற்றின் வேகம் அதிகரிக்கும். புயல் எங்கு கரையை கடக்கும் என்பது தெளிவாக தெரியவில்லை என இந்திய வானிலை மையம் தெரிவித்திருந்தது.
இந்த தென்மேற்கு பருவமழை சீசனில் உருவான முதல் புயல் பைபர்ஜாய் புயல். இதற்கு வங்கதேசம் பெயரிட்டுளளது. இந்த பெயருக்கு வங்கத்தில் பேரழிவு என்பது பொருளாகும். மீனவர்கள் ஆழ்கடல் பகுதிகளில் மீன் பிடிக்க சென்றிருந்தால் அவர்கள் உடனடியாக கரை திரும்புமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த பைபர்ஜாய் புயல் இன்று அல்லது நாளை தெற்கு குஜராத்தை அடையலாம் என்பதால் மாநில பேரிடர் மீட்பு படை குழுக்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
மிக தீவிர புயலான பைபர்ஜாய் புயல் போர்பந்தரிலிருந்து 480 கி.மீ. தூரத்திலும் துவாரகாவிலிருந்து 530 கி.மீ. தூரத்திலும் உள்ளது. இந்த புயல் தற்போது அதி தீவிர புயலாக வலுவடைந்தது. இதையடுத்து தற்போது சூப்பர் புயலாக மாறிவிட்டது. கடலிலேயே வலிவிழக்கும் இந்த புயல் இந்தியா- பாகிஸ்தான் இடையே வரும் ஜூன் 15 ஆம் தேதி கரையை கடக்கும். கரையை கடக்கும்போது வலிவிழந்து அதி தீவிர புயலாக மாறும். புயல் கரையை கடக்கும் போது மணிக்கு 135 கி.மீ. வேகத்தில் காற்று வீசும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த புயல் நேரடியாக இந்தியாவை தாக்காது என்றும் இந்திய கடல் பகுதியில் கரையை கடக்காது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. பைபர்ஜாய் எங்கள் கடல் பகுதிக்கு வராது என பாகிஸ்தான் வானிலை ஆய்வு மையம் கூறிய நிலையில் அந்த புயல் பாகிஸ்தான் அருகே கரையை கடக்கும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
29 + 9.. அதிமுக கூட்டணியில் பாஜக - அமமுகவுக்கு எத்தனை சீட்? இறங்கி வராத எடப்பாடி பழனிச்சாமி -
உலக நாடுகளுக்கே மிகப்பெரிய ஆபத்து.. நிலைமை கையை மீறி போகுது.. ரஷ்யா புதின் தந்த 'ஷாக்' வார்னிங் -
"நீங்கள் ஸ்டாலினை சீண்டி இருக்கலாம்.. ஆனால் என்னிடம் வேண்டாம்.!" ஆளுநர் ரவிக்கு மம்தா எச்சரிக்கை -
பவன் கல்யாண் போட்ட தூண்டில்.. நாமக்கல்லில் 70% எகிறும் விஜய் கிராஃப்.. திமுகவுக்கு 4 பக்கம் ஆபத்து? -
எடப்பாடியை முதல்வராக மோடி - அமித்ஷா அறிவிக்காதது ஏன்.. காரணம் இதுதான்.. உடைத்த பிரபலம் -
விசிக 8, மதிமுக 4.. நாளைக்குள் தொகுதி பங்கீட்டை முடிக்கும் திமுக.. குறைந்த தொகுதிகளில் உதயசூரியன்! -
ஒரு குண்டு கூட வீசாமல்.. அமெரிக்காவை காலி செய்யும் சீனாவின் "ரகசிய" ஆயுதம்.. ஆட்டம் மொத்தமா மாறுது -
பச்சை, வெள்ளை, சர்க்கரை ரேஷன் அட்டையில் அரசு சலுகைகள்! 3 மாதம் பொருட்கள் வாங்காவிட்டால் கார்டு கட்?












Click it and Unblock the Notifications