தங்கக் கடத்தல் வழக்கில் பினராயி விஜயனின் பெயர்.. ஸ்வப்னாவை கட்டாயப்படுத்திய அமலாக்கத் துறை?
திருவனந்தபுரம்: கேரளாவில் தங்கம் கடத்தப்பட்ட வழக்கில் முதல்வர் பினராயி விஜயனுக்கும் தொடர்பிருக்கிறது என கூறுமாறு ஸ்வப்னா சுரேஷை அமலாக்கத் துறை வற்புறுத்தியதாக போலீஸ் எஸ்கார்ட் ஒருவர் தெரிவித்துள்ளார்.
கேரளாவில் கடந்த ஆண்டு தங்கம் கடத்தல் வழக்கில் ஸ்வப்னா சுரேஷ் என்பவர் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் நாள்தோறும் புதுப்புது திருப்பங்கள் ஏற்பட்டு வருகின்றன.

ஐக்கிய அரபு அமீரகத்தின் தூதரக அதிகாரிகள் உதவியுடன் தங்கக் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஸ்வப்னா சுரேஷ் , கேரளா முதல்வர் பினராயி விஜயன், சட்டசபை சபாநாயகர் ராமகிருஷ்ணன் ஆகியோரின் உதவியுடன் கடத்தியதாக வாக்குமூலம் அளித்ததாக சொல்லப்படுகிறது.
இதையடுத்து சுங்கத் துறை அதிகாரிகள் தங்கக் கடத்தல் வழக்கில் முதல்வர் பினராயி விஜயனின் பெயரை ஸ்வப்னா சுரேஷ் கூறியதாக குற்றப்பத்திரிகையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். தேர்தலை கருத்தில் கொண்டு வேண்டுமென்றே என் மீது போடப்படும் பழி என விசாரணை அமைப்புகள் மீது பினராயி விஜயன் குற்றம்சாட்டினார்.
இந்த நிலையில் ஸ்வப்னா சுரேஷின் பாதுகாப்புக்காக நியமிக்கப்பட்ட பெண் போலீஸ் அதிகாரி (எஸ்கார்ட்), முதல்வர் பினராயி விஜயனின் பெயரை கூறுமாறு ஸ்வப்னா சுரேஷ் அமலாக்கத் துறை அதிகாரிகளால் கட்டாயப்படுத்தப்பட்டார் என கைப்பட எழுதிய அறிக்கையில் பெண் அதிகாரி தெரிவித்துள்ளார்.
அந்த பெண் அதிகாரி கூறுகையில் அமலாக்கத் துறை ஸ்வப்னாவிடம் விசாரணை நடத்திய அறையில் நான் இருந்தேன், அப்போது ஆடியோவில் இருப்பது போன்று முதல்வரின் பெயரை கூறுமாறு அமலாக்கத் துறை அதிகாரிகள் வற்புறுத்தினார்கள். நான் அங்கிருந்த போது ஸ்வப்னாவிடம் வற்புறுத்தி ராதாகிருஷ்ணன் சார் கேள்வி கேட்டார் என பெண் போலீஸ் அதிகாரி தெரிவித்தார்.
அந்த பெண் கூறும் ராதாகிருஷ்ணன் அமலாக்கத் துறை இயக்ககத்தின் உதவி இயக்குநர் பி ராதாகிருஷ்ணனா என்பது தெளிவாக தெரியவில்லை.
-
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம்












Click it and Unblock the Notifications