ராகுல் தகுதி நீக்கம்- வயநாடு தொகுதி இடைத்தேர்தல் பணிகள் தொடக்கம்- காங். அதிர்ச்சி
திருவனந்தபுரம்: ராகுல் காந்தி எம்.பி. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்த மேல்முறையீட்டு வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் வயநாடு லோக்சபா தொகுதிக்கான இடைத்தேர்தல் பணிகளை இந்திய தேர்தல் ஆணையம் தொடங்கி இருப்பது காங்கிரஸ் கட்சியினரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
கேரளா மாநிலம் வயநாடு லோக்சபா தொகுதியில் போட்டியிட்டு எம்பியானவர் ராகுல் காந்தி. 2019-ம் ஆண்டு லோக்சபா தேர்தல் பிரசாரத்தின் போது பிரதமர் மோடியை விமர்சித்தது தொடர்பாக ராகுல் காந்தி மீது குஜராத்தின் சூரத் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடரப்பட்டது. இந்த அவதூறு வழக்கு திடீரென விசாரிக்கப்பட்டு ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதனால் ராகுல் காந்தியின் எம்பி பதவி பறிக்கப்பட்டது.

ராகுல் காந்தியின் எம்பி பதவி பறிக்கப்பட்ட விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நடவடிக்கைக்கு எதிராக நாடாளுமன்றத்தை காங்கிரஸ் மற்றும் அனைத்து எதிர்க் கட்சிகளும் முடக்கின. மேலும் தமக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டு சிறை தண்டனைக்கு எதிராக ராகுல் காந்தி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு குஜராத் உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
மேலும் ராகுல் காந்தி வெற்றி பெற்ற வயநாடு லோக்சபா தொகுதி ஏற்கனவே காலியானதாகவும் அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து வயநாடு தொகுதிக்கு இடைத்தேர்தல் குறித்த அறிவிப்பு வெளியாகக் கூடும் எனவும் கூறப்பட்டது. ஆனால் ராகுல் காந்தி மேல்முறையீட்டு மனு நிலுவையில் உள்ளதை சுட்டிக்காட்டி தேர்தல் ஆணையம் தாமதம் செய்து வந்தது.
அண்மையில் அமெரிக்காவில் பேசிய ராகுல் காந்தி, அவதூறு வழக்கில் அதிகபட்ச தண்டனை விதிக்கப்பட்ட முதல் நபர் நானாகவே இருப்பேன். நான் அரசியலுக்கு வந்த போது இப்படி எல்லாம் எம்பி பதவியை பறிப்பார்கள் என நினைத்து கூட பார்க்கவில்லை எனவும் கூறியிருந்தார்.

இந்நிலையில் திடீரென வயநாடு தொகுதி இடைத்தேர்தலுக்கான பணிகளை இந்திய தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. கோழிக்கோடு ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று திடீரென வாக்குப் பதிவு இயந்திரங்கள் பரிசோதனை உள்ளிட்ட தேர்தலுக்கான முன்னேற்பாடுகள் நடைபெற்றன. இதற்கு அனைத்து அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளும் அழைக்கப்பட்டிருந்தனர். வயநாடு தொகுதி தேர்தல் ஏற்பாடுகள் காங்கிரஸ் கட்சியை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. தேர்தல் ஆணையத்தின் இந்த நடவடிக்கைகளுக்கு காங்கிரஸ் எதிர்ப்பும் தெரிவித்துள்ளது.
-
கன்னியாகுமரியில் 6 தொகுதிகள் நிலவரம் என்ன? 5ல் முந்தும் திமுக கூட்டணி.. விஜய்யால் பாஜகவுக்கு சேதாரம் -
காங்கிரசுக்கு ஒதுக்க சொல்வதா? அண்ணா அறிவாலயத்தில் அடித்துக்கொண்ட கிள்ளியூர் தொகுதி திமுக நிர்வாகிகள் -
எனக்கு நயன்தாரா வேணும்.. ஸ்டாலின் கனவை நிறைவேற்றுவாரா சி.வி சண்முகம் சர்ச்சை பேச்சு -
அமெரிக்க கடற்படை உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்தது.. ஏன் ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாக்க முடியவில்லை? -
இன்னும் சில மணி நேரத்தில் அமெரிக்கா எடுக்கும் முடிவு.. தங்க மார்கெட்டை தாக்க போகும் சூறாவளி! -
Thaai Kizhavi OTT: ஓடிடியில் வெளியாகும் தாய் கிழவி.. எப்போது, எதில் பர்க்கலாம்? வெளியான தகவல் -
அரபு நாடுகளில் இந்தியர்களின் 12, 000 கோடி முதலீடு காலி.. 800 நிறுவனங்கள் எதிர்காலம் கேள்விக்குறி! -
கோவை தெற்கில் களமிறங்கும் மகேந்திரன்.. ஆதரவாக இருக்கும் செந்தில் பாலாஜி.. கணக்கு போடும் ஸ்டாலின்! -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
திருப்பரங்குன்றம் வழக்கு.. நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் உத்தரவுக்கு இரு நீதிபதிகள் அமர்வு இடைக்கால தடை -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்!












Click it and Unblock the Notifications