வௌங்கிரும்.. கிட்ட வந்து "நங்குனு" முட்டிய மாப்ளை.. அழுதுட்டே வீட்டுக்குள் போன பொண்ணு.. ஏன் தெரியுமா
திருவனந்தபுரம்: கல்யாண வீடியோ ஒன்று இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.. அந்த வீடியோவில் கல்யாண பெண்ணை பார்த்து பலரும் பரிதாபப்பட்டு வருகிறார்கள்.. சிலர் சிரித்துக்கொண்டே கடக்கிறார்கள்.. சிலர் கடுமையான விமர்சனத்தை முன்வைத்து போகிறார்கள்.. அப்படி என்னதான் நடந்தது?
2 மனங்கள் இணைவதே திருமணம்.. ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே உருவாகும் அன்பையும் பாசத்தையும் அதிகரிக்கவும், வலுப்படுத்தவும் ஏற்ற வழி திருமணத்தைத் தவிர வேறு எதுவும் இல்லை என்றும் நம்பப்பட்டு வருகிறது.

அதனால்தான், மிகப்பெரிய விழாவாகவும், கோலாகலமாகவும் கல்யாணங்கள் செய்யப்படுகின்றன.. வசதி இல்லாதவர்கள்கூட, கடன்வாங்கியாவது ஆடம்பரமாக தங்கள் பிள்ளைகள் திருமணத்தை நடத்தி வைத்துவிடுகிறார்கள்.
சடங்குகள்: இந்த திருமணங்களில், அம்மி மிதிப்பது, அருந்ததி பார்ப்பது என்பது உட்பட நிறைய சடங்குகளும், பல்வேறு வழிமுறைகளும் அவரவர் வழக்கப்படி இன்றுவரை பின்பற்றப்படுகின்றன.. அதேபோல், திருமணம் முடிந்து வீட்டுக்குள் மணமக்களை அழைத்து செல்லும்போதும், வாசலில் அவர்களுக்கு ஆரத்தி எடுத்து நெற்றியில் பொட்டு வைத்து, பெரியவர்கள் மணமக்களை உள்ளே அழைத்து செல்வார்கள்.
ஆனால், கேரள மாநிலத்தில் நேற்று முன்தினம் ஒரு திருமணம் நடந்துள்ளது.. புதுமண தம்பதிகள் 2 பேரின் தலைகளையும் முட்ட வைக்கும் வினோத சடங்கு நடத்தப்பட்டுள்ளது.. பாலக்காடு மாவட்டம் பல்லசேனா கிராமத்தை சேர்ந்தவர் சச்சின். இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த ஜலஷா என்பவருக்கும் இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.. அதன்படி, நேற்றுமுன்தினம், பல்லசேனாவில் உள்ள பகவதி அம்மன் கோவிலில் திருமணம் சிறப்பாக நடந்து முடிந்தது..












Click it and Unblock the Notifications