அண்டாவில் மிதந்து கொண்டே வந்த மணமக்கள்.. திட்டமிட்டபடி திருமணம்.. கேரள வெள்ளநீர் பாதிப்பு எதிரொலி
அண்டாவில் மிதந்து வந்து திருமணம் செய்துள்ளனர் கேரள தம்பதிகள்
திருவனந்தபுரம்: கேரளாவில் பெய்துவரும் கனமழை காரணமாக, மணமக்கள் இருவரும் அண்டாவில் மிதந்து கொண்டே, திருமண மண்டபத்துக்கு சென்ற சம்பவம் நடந்துள்ளது.
Recommended Video
இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்களில் பலத்த மழை பெய்து வருகிறது.. இதில் மிக மோசமாக உள்ளது கேரள மாநிலத்தின் நிலைமை. இடுக்கி மற்றும் கோட்டயம் மாவட்டங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது... இதன்காரணமாக, சபரிமலை கோவிலுக்கு இன்றும் நாளையும் செல்ல வேண்டாம் என்று பக்தர்களுக்கு அறிவுறுத்தப்பட்டும் உள்ளது..
மற்றொரு பக்கம் மீட்பு பணிகள் தீவிரமாகி உள்ளன.. கோட்டயம், இடுக்கியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி பலர் உயிரிழந்துள்ளனர்.. கோட்டயம் மாவட்டம் கூட்டிக்கல் பகுதியில் நேற்று முன்தினம் ஏற்பட்ட நிலச்சரிவில் 13 பேர் உயிரிழந்தனர்...

சோகம்
அதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் பலியானது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.. இன்றைய நிலவரப்படி, கேரள மழை பாதிப்புகளில் சிக்கி மொத்தம் 22 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.. இனி அடுத்தடுத்த நாட்களிலும் மழை பெய்யும் என்று கூறப்பட்டுள்ளது. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் மீட்பு நடவடிக்கைகள் நடந்து வருகின்றன..

வாகனங்கள்
ஏராளமான இடங்களில் வெள்ள நீர் சூழ்ந்து காணப்படுகிறது.. பெரும்பாலான சாலைகளில்வாகன போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. சில வாகனங்கள் வெள்ள நீரில் அடித்து கொண்டும் சென்றுவிடுகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு வருகிறது.. அதேசமயம் நடக்க உள்ள திருமணங்களையும் தடபுடலாக நடத்த முடியாமல், பலரும் தவித்து வருகின்றனர்.. அந்த வகையில் ஒரு மணமக்கள் புதுவழியை தேர்ந்தெடுத்து, திருமண மண்டபத்துக்கு சென்றுள்ளனர்.

திருமணம்
இந்த மணமக்கள் இருவருமே செங்கனூர் மருத்துவமனையில் சுகாதார பணியாளர்களாக பணிபுரிந்து வருகின்றனர்.. இவர்கள் பெயர் ஆகாஷ் மற்றும் ஐஸ்வர்யா.. இவர்களுக்குதான் இன்றைய தினம் பெரியோர்களால் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. இதற்காக தளவாடி என்ற பகுதியில் உள்ள கோயிலில் திருமணத்தை நடத்தவும் முடிவு செய்திருந்தனர்.. அந்த நேரம் பார்த்துதான் எதிர்பாராமல் இப்படி ஒரு வெள்ளம் வந்துவிட்டது..

சமையல் பாத்திரம்
திருமணம் நடக்க உள்ள கோயிலுக்கு 2 நாட்களுக்கு முன்புகூட வந்துள்ளனர்.. அந்த அளவுக்கு அங்கு தண்ணீர் சூழப்படவில்லை.. ஆனால், இந்த 2 நாளில் மழை அதிக அளவு பெய்ததால், அந்த பகுதி முழுவதுமே மழை தண்ணீரால் சூழப்பட்டுள்ளது.. இதனால், மண்டபத்திற்கு மணமக்கள் உட்பட குடும்பத்தினர் யாராலுமே செல்ல முடியாத நிலைமை ஏற்பட்டது.. எனினும், நிச்சயிக்கப்பட்ட திருமணம் எக்காரணம் கொண்டும் நின்றுவிடக்கூடாது என்பதற்காக, சமையலுக்கு பயன்படுத்தும் பெரிய அண்டாவில் மணமக்கள் ஏறி உட்கார்ந்து கொண்டனர்.. நீரில் மிதந்தபடியே அந்த பாத்திரத்தில் சென்றதையடுத்து, திருமண மண்டபத்திற்கு வந்து சேர்ந்தனர்.

பாதிப்பு
இறுதியில் திருமணம் திட்டமிட்டபடியே எளிமையாக நடந்து முடிந்தது. ஏற்கனவே தொற்று காரணமாக குறைந்த அளவிலேயே திருமணத்துக்கு உறவினர்களை அழைத்திருந்தனராம். இப்போது மழை என்பதால் மேலும் குறைவான அளவிலேயே நபர்கள் திருமணத்தில் கலந்து கொண்டுள்ளனர்.. கடந்த வருடம் கேரளாவில் வெள்ளம் வந்தபோது, இதேபோலதான் ஒரு பாட்டி உட்பட நிறைய பேரை அண்டாவை வைத்துதான் காப்பாற்றினார்கள்.. அதேபோல டெக்னிக்கை மணமக்கள் இன்றைய தினம் செய்துள்ளனர்..
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications