ரூ.16 கோடி மோசடி செய்ததாக புகார்.. ஹரி நாடார் கைது
திருவனந்தபுரம்: 16 கோடி மோசடி செய்த புகாரில் பனங்காட்டுப் படை கட்சி ஒருங்கிணைப்பாளர் ஹரி நாடார் கேரள மாநிலம் கோவளத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
Recommended Video
தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் போட்டியிட்ட சுயேட்சை வேட்பாளர்களிலேயே மிக அதிக வாக்கு வாங்கியவர் ஹரி நாடார்,
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் தொகுதியில் போட்டியிட்ட சுயேச்சை வேட்பாளர் ஹரிநாடார் 37,727 வாக்குகளை அள்ளினார். அ.தி.மு.க. வேட்பாளர் மனோஜ் பாண்டியன் 74,153 வாக்குகளும், தி.மு.க. வேட்பாளர் பூங்கோதை ஆலடி அருணா 70,614 வாக்குகளும் பெற்றனர்.

ஹரி நாடார் வாக்குகள்
இருவருக்கும் இடையேயான வாக்கு வித்தியாசம் 3,539 மட்டுமே ஆகும். ஹரிநாடார் 37,727 வாக்குகள் வாங்கியதன் மூலம் திமுகவின் பூங்கோதை ஆலடி அருணாவின் வெற்றியை காலி செய்தார்.

வருமான வரி சோதனை
நடமாடும் நகைக்கடையாக வலம் வரும் ஹரிநாடார் 12 கிலோ எடை கொண்ட நகைகளை எப்போதும் அணிந்திருப்பார். அண்மையில் விமான நிலையத்தில் நகைக்கான பில் குறித்து விமான நிலைய அதிகாரிகள் கேள்வி எழுப்பியதுடன் வருமான வரித்துறைக்கு தகவல் கொடுத்தனர். இதன் பேரில் திருவனந்தபுரத்தில் விசாரணைக்கு பின்னர் விடுவிக்கப்பட்டார். இந்த விவகாரம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெரிதாக பேசப்பட்டது.

கேரளாவில் கைது
இந்த சூழலில் 16 கோடி ரூபாய் மோசடி செய்த புகாரில் பனங்காட்டுப் படை கட்சி ஒருங்கிணைப்பாளர் ஹரி நாடார் கேரள மாநிலம் கோவளத்தில் கைது செய்யப்பட்டுள்ளதா தகவல்கள் வெளியாகி உள்ளன.

பரபரப்பு
எங்கு நடந்த மோசடி என்பது குறித்து காவல்துறை சார்பிலோ அல்லது கைது குறித்து ஹரி நாடார் சார்பிலோ எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை. 16 கோடி மோசடி செய்ததாக ஹரி நாடார் கைது செய்யப்பட்ட சம்பவம் திருநெல்வேலி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
எதிர்நீச்சல் சீரியல் ராணா யார் தெரியுமா? இத்தனை படங்களில் நடித்திருக்கிறாரா? இனி தான் சம்பவமே இருக்கு -
சென்னை சென்ட்ரல் -கோவை வந்தே பாரத்... தங்க முட்டை போடும் வாத்து.. ஒப்புக்கொண்ட ரயில்வே? -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை












Click it and Unblock the Notifications