ரூ.16 கோடி மோசடி செய்ததாக புகார்.. ஹரி நாடார் கைது
திருவனந்தபுரம்: 16 கோடி மோசடி செய்த புகாரில் பனங்காட்டுப் படை கட்சி ஒருங்கிணைப்பாளர் ஹரி நாடார் கேரள மாநிலம் கோவளத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
Recommended Video
தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் போட்டியிட்ட சுயேட்சை வேட்பாளர்களிலேயே மிக அதிக வாக்கு வாங்கியவர் ஹரி நாடார்,
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் தொகுதியில் போட்டியிட்ட சுயேச்சை வேட்பாளர் ஹரிநாடார் 37,727 வாக்குகளை அள்ளினார். அ.தி.மு.க. வேட்பாளர் மனோஜ் பாண்டியன் 74,153 வாக்குகளும், தி.மு.க. வேட்பாளர் பூங்கோதை ஆலடி அருணா 70,614 வாக்குகளும் பெற்றனர்.

ஹரி நாடார் வாக்குகள்
இருவருக்கும் இடையேயான வாக்கு வித்தியாசம் 3,539 மட்டுமே ஆகும். ஹரிநாடார் 37,727 வாக்குகள் வாங்கியதன் மூலம் திமுகவின் பூங்கோதை ஆலடி அருணாவின் வெற்றியை காலி செய்தார்.

வருமான வரி சோதனை
நடமாடும் நகைக்கடையாக வலம் வரும் ஹரிநாடார் 12 கிலோ எடை கொண்ட நகைகளை எப்போதும் அணிந்திருப்பார். அண்மையில் விமான நிலையத்தில் நகைக்கான பில் குறித்து விமான நிலைய அதிகாரிகள் கேள்வி எழுப்பியதுடன் வருமான வரித்துறைக்கு தகவல் கொடுத்தனர். இதன் பேரில் திருவனந்தபுரத்தில் விசாரணைக்கு பின்னர் விடுவிக்கப்பட்டார். இந்த விவகாரம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெரிதாக பேசப்பட்டது.

கேரளாவில் கைது
இந்த சூழலில் 16 கோடி ரூபாய் மோசடி செய்த புகாரில் பனங்காட்டுப் படை கட்சி ஒருங்கிணைப்பாளர் ஹரி நாடார் கேரள மாநிலம் கோவளத்தில் கைது செய்யப்பட்டுள்ளதா தகவல்கள் வெளியாகி உள்ளன.

பரபரப்பு
எங்கு நடந்த மோசடி என்பது குறித்து காவல்துறை சார்பிலோ அல்லது கைது குறித்து ஹரி நாடார் சார்பிலோ எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை. 16 கோடி மோசடி செய்ததாக ஹரி நாடார் கைது செய்யப்பட்ட சம்பவம் திருநெல்வேலி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications