அது எப்படி எங்களை விஷம் என சொல்லலாம்? காந்தியின் கொள்ளுப் பேரனை கைது செய்க- பாஜக, ஆர்எஸ்எஸ் 'அடம்'
திருவனந்தபுரம்: ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தை விஷம் என விமர்சித்ததால் மகாத்மா காந்தியின கொள்ளுப்பேரன் துஷார் காந்தியை கைது செய்ய வேண்டும் என பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தினர் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். தங்களது இயக்கத்துக்கு எதிரான கருத்துகளை துஷார் காந்தி திரும்பப் பெற வேண்டும் என்பதும் ஆர்.எஸ்.எஸ்.-ன் கோரிக்கை.
கேரளாவின் திருவனந்தபுரம் அருகே உள்ள நெய்யாற்றின்கரையில் காந்தியவாதி கோபிநாதன் சிலை திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மகாத்மா காந்தியின் கொள்ளுப் பேரன் துஷார் காந்தி பங்கேற்று சிலையைத் திறந்து வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய துஷார் காந்தி, பாஜக- ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தை மிகக் கடுமையாக விமர்சித்தார். துஷார் காந்தி பேசுகையில், இந்தியாவின் ஆன்மாவை ஆர்.எஸ்.எஸ். அதன் துணை அமைப்புகள் என சங் பரிவாரங்கள் எனும் புற்று நோய் முடக்கி வைத்திருக்கிறது என காட்டமாக கூறினார். மேலும் பாஜக, ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தினர் ஆபத்தான எதிரிகள்; கேரளாவுக்குள் நுழைய முயற்சிக்கின்றனர்; ஆர்.எஸ்.எஸ். ஒரு விஷம் எனவும் விமர்சித்தார் துஷார் காந்தி.
இதனால் பாஜக, ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தினர் கொந்தளித்து போயினர். இந்த நிகழ்ச்சியின் இறுதியில் துஷார் காந்திக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்; துஷார் காந்தியின் காரை வழிமறித்தும் முழக்கமிட்டனர். மேலும் துஷார் காந்தியை கேரளா மாநில அரசு கைது செய்ய வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.
இது தொடர்பாக பாஜக மூத்த தலைவர் முரளீதரன் கூறுகையில், மகாத்மா காந்தியின் பெயரை வைத்து ஆதாயம் தேடுவதில் துஷார் காந்தி நீண்டகாலமாகவே முயற்சித்து வருகிறார் என்றார். மேலும் காந்தி என்று பெயர் வைத்துக் கொண்டதாலேயே மகாத்மா காந்திக்கான மரியாதையை எல்லாம் எதிர்பார்க்கவும் கூடாது எனவும் கண்டனம் தெரிவித்தார்.
ஆனால் துஷார் காந்தியோ, என்னுடைய காரை வழிமறித்து பாஜக, ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தினர் கோஷம் எழுப்பினர். என் மீது எந்த தாக்குதலும் நடத்தவில்லை; இத்தகைய போராட்டங்கள்தான் அவர்கள் யார் என்பதை மக்கள் முன்பாக அம்பலப்படுத்தி நிற்கிறது என்றார்.
-
நயினாரை விடவே கூடாது.. சாத்தூரில் வீழ்த்த ஸ்டாலின் ‘ஸ்கெட்ச்’.. இறங்கும் திமுகவின் ‘பெரிய தலை’ -
18 தொகுதிகளில் பாஜக வெல்வது கடினம்? திமுகவிடம் கோர்த்துவிட்ட எடப்பாடி பழனிச்சாமி! தாமரைக்கு ‘செக்’ -
பாஜகவின் 27 வேட்பாளர்கள் இவர்கள்தானா? வெளியான உத்தேச பட்டியல்.. அண்ணாமலைக்கு சீட் இல்லை? -
ஜோதிடர் சொன்ன வார்த்தை? நயினார் நாகேந்திரன் நெல்லை தொகுதியில் போட்டியிடாதது ஏன்? பரபரப்பு தகவல் -
அரைக் கிணறை தாண்டாத அறிவாலயம்.. அதிவேகத்தில் அதிமுக! போட்ட ஸ்கெட்சை பக்காவாக முடித்த எடப்பாடி! -
பலே ஆளுங்க எடப்பாடி பழனிசாமி.. பாஜகவின் 27 தொகுதிகளில் இப்படி ஒரு ட்விஸ்டா! பாவம் ஜிகே வாசன்? -
கோவை வடக்கில் அண்ணாமலை.. வானதி சீனிவாசனுக்கு பதில் களம் இறங்க போகிறாரா? -
கோவையை விடுங்க.. மொத்தமாகவே ஏமாந்த பாஜக! அதிமுக மீது உச்சகட்ட அதிருப்தியில் அண்ணாமலை -
அண்ணாமலை சட்டமன்றம் செல்ல வேண்டும்.. அதுவே என் விருப்பம்.. வானதி சீனிவாசன் சொன்ன வார்த்தை! -
அதிமுக வேட்பாளர்கள் யார்? 146 வேட்பாளர்களை எப்போது அறிவிப்பார் எடப்பாடி! உச்சகட்ட டென்ஷனில் ர.ர.கள்! -
குமரியில் காலியாகும் அதிமுகவின் அடித்தளம்.. 4 தொகுதிகளை கைப்பற்றிய பாஜக.. சோர்வடைந்த தொண்டர்கள்! -
பாஜகவுக்கு பல்ப் கொடுத்த எடப்பாடி.. வெயிட்டான தொகுதிகளை வச்சுகிட்டாரே! எந்தெந்த தொகுதிகளில் போட்டி?












Click it and Unblock the Notifications