குடிபோதையில் விபத்து ஏற்படுத்திய ஐஏஎஸ் அதிகாரி.. 14 நாள் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவு
திருவனந்தபுரம்: கேரளாவில் கார் மோதி பத்திரிகையாளர் பலியான சம்பவம் தொடர்பாக ஐஏஎஸ் அதிகாரியை 14 நாள் காவலில் அடைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கேரள மாநிலம், மலப்புரம் மாவட்டம் திரூர் பகுதியை சேர்ந்தவர் பஷீர் (35). இவர் சிராஜ் என்ற மலையாள பத்திரிகையில் தலைமை செய்தியாளராக பணிபுரிந்து வந்தார். நேற்று நள்ளிரவு பணி முடிந்து பைக்கில் வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தார். திருவனந்தபுரம் மியூசியம் காவல் நிலையம் அருகில் சென்று கொண்டிருந்தபோது பின்னால் வேகத்தில் வந்த கார் அவரது பைக் மீது மோதியது. இதில் பஷீர் தூக்கி வீசப்பட்டார்.

ரத்த வெள்ளத்தில் கிடந்த பஷீரை, மருத்துவமனைக்கு தூக்கிச் செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார். இதற்கிடையே விபத்தை ஏற்படுத்திய காரை ஓட்டி வந்தது ஐஏஎஸ் அதிகாரி ஸ்ரீராம் வெங்கட்ராமன் என்பது தெரியவந்தது.
அதே நேரம், காயமடைந்த ஐஏஎஸ் அதிகாரி ஸ்ரீராம் வெங்கட்ராமன், குடிபோதையில் இருந்தது ரத்தபரிசோதனையில் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்த நிலையில், மாஜிஸ்திரேட் அவரிடம் விசாரணை நடத்தினார். அப்போது 14 காவலில் வைக்க உத்தரவிட்டார். எனினும், அவர் சிகிச்சை பெற வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியதால் மருத்துவமனையிலேயே ஐஏஎஸ் அதிகாரி தங்க அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதேபோல் விபத்து நிகழ்ந்த போது ஐஏஎஸ் அதிகாரியுடன் அவரது பெண் தோழியும் உடன் இருந்ததால் அவரிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் பெண் தோழியின் கணவர் வெளி நாட்டில் பணி புரிந்து வரும் நிலையில் இவர்கள் இருவரும் திருவனந்தபுரத்த்தில் உள்ள பிரபல மது பாருக்கு சென்று மது அருந்தி விட்டு வரும் போது விபத்து நடந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications