அழகிய ‛ஐரிஸ்’.. இந்தியாவின் முதல் ‛ஏஐ’ டீச்சரை அறிமுகம் செய்த கேரளா பள்ளி! எப்படி இருக்குனு பாருங்க
திருவனந்தபுரம்: இந்தியாவில் முதல் முறையாக கேரளா பள்ளியில் செயற்கை நுண்ணறிவான AI எனும் தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட ஆசிரியை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஆசிரியைக்கு ஐரிஸ் என பெயரிடப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் தொழில்நுட்பம் வேகமாக வளர்ந்து வருகிறது. தற்போது செயற்கை நுண்ணறிவு எனும் ஏஐ தொழில்நுட்பம் என்பது பேசும் பொருளாக உள்ளது. அதாவது ஏஐ தொழில்நுட்பம் மூலம் மனிதர்கள் செய்யும் பணிகளை செய்ய முடியும் என கூறப்படுகிறது.

அதாவது ஏஐ தொழில்நுட்பத்தில் உருவாக்கப்படும் ரோபோக்கள் மனிதர்களை போல சிந்திக்கவும், பகுப்பாய்வு செய்யவும் முடியும். சமீபத்தில் தனியார் செய்தி சேனல் கூட ஏஐ தொழில்நுட்பத்தில் உருவான செய்தி வாசிப்பாளரை அறிமுகம் செய்தது. இதனால் வரும் காலத்தில் ஏஐ தொழில்நுட்பம் என்பது மனிதர்களின் வேலைவாய்ப்பை பறிக்கலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது.
இந்நிலையில் தான் இந்தியாவில் முதல் முறையாக ஏஐ தொழில்நுட்பத்தில் பள்ளி ஆசிரியை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதற்கு ‛ஐரிஸ்' (IRIS) என பெயரிடப்பட்டுள்ளது. கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள கேடிசிடி உயர்நிலை பள்ளியில் ரோபோ வகையில் வடிவமைக்கப்பட்ட இந்த ஆசிரியை பள்ளி மாணவர்களுக்கு பாடம் சொல்லி கொடுப்பதோடு மாணவர்களின் சந்தேகங்களை தீர்த்து வைக்கிறது.
அதோடு மாணவர்களுடன் கைக்கொடுத்து உண்மையான ஆசிரியர் போன்று செயல்பட்டு வருகிறது. இந்த புதிய முயற்சியை பள்ளியின் கடுவாயில் தங்கல் அறக்கட்டளை, மேக்கர்லாப்ஸ் எடுடெக் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்துடன் சேர்ந்து உருவாக்கி உள்ளது. இதுதொடர்பான வீடியோவை மேக்கர்லாப்ஸ் நிறுவனம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

அந்த பதிவில் ஏஐ தொழில்நுட்ப ரோபா வடிவிலான டீச்சர் மாணவருடன் கைக்கொடுப்பது போலவும், வகுப்பறையில் நடந்து செல்வது போன்ற காட்சியும் இடம்பெற்றுள்ளது. அதாவது ரோபாவின் காலுக்கு அடியில் சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளது. அந்த பதில் ‛‛ஐரிஸ் என்ற ஏஐ ஆசிரியரை உருவாக்கி உள்ளோம். இந்த கண்டுபிடிப்பின் மூலம் இந்தியாவின் முதல் ஏஐ ஆசிரியர் ரோபோ இது என்ற பெருமையை பெற்றுள்ளது'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஏஐ தொழில்நுட்ப ரோபா ஆசிரியையால் 3 மொழிகளில் பேசவும், மாணவர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கவும் முடியும். மேலும் இன்டெல் ப்ராசசெர் மற்றும் கோப்ரோசசர் பொருத்தப்பட்டுள்ளதால் இது மாணவர்களின் அதிவேக கற்றலுக்கு உதவியாக இருக்கும் என நம்பப்படுகிறது.
-
ஆரம்பிக்கும் மூன்றாம் உலக போர்.. வெளியே வந்த டூம்ஸ்டே மீன்.. அலறும் உலக நாடுகள் -
கூட்டுறவு வங்கி தங்க நகை கடன் + மகளிர் உரிமை தொகை! கனிமொழி பிரம்மாஸ்திரம்! ஸ்டாலின் முக்கிய முடிவு -
தேசிய ஜனநாயக கூட்டணியில் விஜய்.. நெருங்கும் பேச்சுவார்த்தை.. ஒரே வார்த்தையில் உடைத்த சரத்குமார் -
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
எங்க கொண்டு போய் விட்டுடுச்சி பாருங்க.. கேஸ் தட்டுப்பாட்டால், ஸ்விக்கி, ஜொமோட்டோ டெலிவரி குறைந்தது! -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்கா இனி பிக்பாஸ் இல்லை.. நீங்க நம்பலைனாலும் அதான் நெசம்.. ஐக்கிய அரபு சகாப்தமும் வீழ்ந்தது! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
3 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய்யை வாங்கி குவித்த இந்திய நிறுவனங்கள்! ரஷ்யாவுக்கு கொட்டும் பண மழை! -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
கடலில் இறக்கப்பட்ட கண்ணி வெடி! எக்குத்தப்பாய் வந்து சிக்கிய அமெரிக்கா! வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வார்னிங் -
ஒருவேளை உண்மையா இருக்குமோ.. என்டிஏ கூட்டணியில் விஜய்! மாஜி அமைச்சர் கடம்பூர் ராஜூ சொன்ன வார்த்தை!












Click it and Unblock the Notifications