கொரோனா பரவல்.. மத்திய கிழக்கு நாடுகளில் வேலையிழந்து.. நாடு திரும்பிய 10.45 லட்சம் மலையாளிகள்
திருவனந்தபுரம்: கொரோனா பரவல் காரணமாகக் கடந்த ஆண்டு மே மாதம் முதல் மட்டும் சுமார் 15 லட்சம் பேர் வெளிநாடுகளில் இருந்து கேரளா திரும்பியுள்ளனர். அவர்களில் 10.45 லட்சம் பேர் வேலையிழந்துள்ளனர் என்று அம்மாநில வெளிநாடுவாழ் பணியாளர்கள் மையம் தெரிவித்துள்ளது.
கடந்த 2019ஆம் ஆண்டு இறுதியில் பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் உலகையே புரட்டிப் போட்டுவிட்டது. கொரோனா பாதிப்பால் பல நாடுகளும் புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளன.
இதுபோன்ற கட்டுப்பாடுகளால் பெரிதும் பாதிக்கப்பட்டது வெளிநாடுகளுக்குச் சென்று வேலை செய்து வந்தவர்கள்தான். கொரோனா அச்சத்தால் அவர்கள் பலரும் சொந்த நாடுகளுக்குத் திரும்பினர்,

15 லட்சம் பேர்
இந்தியாவில் கேரளா மாநிலத்தில் இருந்து தான் வெளிநாடுகளுக்கு அதிகம் வேலை செய்யச் சென்றுள்ளனர். கொரோனா பாதிப்பால் கடந்த மே மாதம் முதல் மட்டும் சுமார் 15 லட்சம் பேர் வெளிநாடுகளில் இருந்து கேரளா திரும்பியுள்ளனர் என அம்மாநில வெளிநாடுவாழ் பணியாளர்கள் மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக, ஐக்கிய அமீரகம், சவுதி, கத்தார், ஓமன் ஆகிய நாடுகளில் இருந்து மட்டும் 14 லட்சத்திற்கும் மேற்பட்டோர் நாடு திரும்பியுள்ளனர். வெறும் 55 ஆயிரம் பேர் மட்டுமே மற்ற நாடுகளில் இருந்து திரும்பியுள்ளனர்.

நான்கு நாடுகள்
கொரோனா பரவல் தொடங்கிய போது, கடந்த 2020ஆம் ஆண்டு மே முதல் டிசம்பர் வரையிலான காலகட்டத்தில் 8.40 லட்சம் பேர் கேரளா திரும்பியுள்ளனர். ஆனால், இந்தாண்டு ஜனவரி முதல் அடுத்த ஆறு மாதத்தில் அந்த எண்ணிக்கை இரட்டிப்பாகியுள்ளது. அதாவது சுமார் 14.63 லட்சம் பேர் கேரளா திரும்பியுள்ளனர். வெளிநாடுகளில், குறிப்பாக மத்திய கிழக்கு நாடுகளில், பணிபுரிவோர் மாதாமாதம் அனுப்பும் தொகை தான் நீண்ட காலமாக கேரள மாநில பொருளாதாரத்தின் முதுகெலும்பாக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

வேலையிழப்பு
வெளிநாடுகளில் இருந்து இந்தியா திரும்பிய 15 லட்சம் பேரில், சுமார் 70%, அதாவது 10.45 லட்சம் பேர் வெளிநாடுகளில் தங்கள் வேலைகளை இழந்ததால் நாடு திரும்பியுள்ளனர். 2.90 லட்சம் பேர் விசா உள்ளிட்ட காரணங்களால் இந்தியா திரும்பியுள்ளனர். நாடு திரும்பிய மற்றவர்கள் குழந்தைகள், மூத்த குடிமக்கள் கேரள வெளிநாடுவாழ் பணியாளர்கள் மையம் தெரிவித்துள்ளது.

வெளிநாடுகளுக்கு சென்றவர்கள்
கடந்த மே மாதம் முதல் கேரளாவின் நான்கு சர்வதேச விமான நிலையங்களில் இருந்து மட்டும் சுமார் 27 லட்சம் பேர் வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளனர். மற்ற மாநிலங்களில் இருந்து கேரளாவுக்கு வந்து, அங்கிருந்து வெளிநாடுகளுக்குச் சென்றவர்களின் எண்ணிக்கையும் இதில் அடக்கம். இருப்பினும் சரியான தரவுகள் இல்லாததால் வேலையிழந்து நாடு திரும்பிய எத்தனை பேர், மீண்டும் வெளிநாட்டிற்குச் சென்றுள்ளனர் என்பது தெரியவில்லை.

புதிய சிக்கல்
இந்தியாவில் பரவும் டெல்டா, டெல்டா பிளஸ் கொரோனாவால் பல நாடுகளும் இந்தியப் பயணிகளுக்கு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. மேலும், கொரோனாவால் ஏற்பட்ட பொருளாதார பாதிப்பு மீண்டும் சீராக சில ஆண்டுகள் வரை ஆகும் என்பதால், நாடு திரும்பியவர்களுக்கு மீண்டும் வேலை கிடைப்பதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
-
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி












Click it and Unblock the Notifications