நுபுர் சர்மா அவசரத்தில் ஏதோ பேசிட்டார்.. இதற்கெல்லாம் ஏன் ரியாக்சன்? கேட்பது கேரள ஆளுநர் ஆரிப் கான்
திருவனந்தபுரம்: கத்தார் நாட்டிடம் இந்தியா மன்னிப்பு கேட்க வேண்டியது இல்லை, நாம் சின்ன விஷயத்திற்கு எல்லாம் ரியாக்சன் கொடுக்க வேண்டியது இல்லை என்று கேரளா ஆளுநர் ஆரிப் முகமது கான் கூறியுள்ளார்.
பாஜக செய்தி தொடர்பாளராக இருந்த நுபுர் சர்மா தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சி ஒன்றில் பேசிய போது, இஸ்லாமிய இறை தூதுவர் நபிகள் நாயகத்தை கடுமையாக விமர்சனம் செய்து இருந்தார். இஸ்லாமிய இறை தூதுவர் நபிகள் நாயகத்தை நேரடியாக இகழ்ந்து, சில அச்சில் ஏற்ற முடியாத வார்த்தைகளை பேசி இருந்தார்.
இவரின் பேச்சு சர்ச்சையான நிலையில் பாஜகவில் இருந்து நுபுர் சர்மா நீக்கப்பட்டார்.

கத்தார் விளக்கம்
இந்த நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக கத்தார் சார்பாக இந்தியாவிற்கு சம்மன் அனுப்பப்பட்டது.. அதில் பாஜக தங்கள் நிர்வாகிகளை நீக்கியதை வரவேற்கிறோம். ஆனால் இந்தியா இதற்கு பொது மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கத்தார் கூறியது. ஆனால் இந்தியா இதற்கு மன்னிப்பு கேட்கவில்லை. மாறாக, இந்த கருத்துக்கள் இந்தியாவின் அதிகாரபூர்வ கருத்துக்கள் அல்ல. அவை சில கலகக்காரர்களின் கருத்து என்று விளக்கம் அளித்தது.

ஆரிப் கான்
இந்த நிலையில் கத்தார் நாட்டிடம் இந்தியா மன்னிப்பு கேட்க வேண்டியது இல்லை என்று கேரள ஆளுநர் ஆரிப் கான் தெரிவித்துள்ளார். அவர் தனது பேட்டியில், இந்தியாவிற்கு எதிராக சில நாடுகள் பல காலமாக கருத்து தெரிவித்து வருகிறது. காஷ்மீர் விவகாரம் தொடங்கி பல விஷயங்களில் இவர்கள் இந்தியாவிற்கு எதிராக பேசி உள்ளனர். ஒவ்வொருத்தருக்கும் அவர்கள் தங்கள் கருத்துக்களை சொல்ல உரிமை இருக்கிறது.

அவர்கள் உரிமை
ஆனால் அதன் மீதெல்லாம் நாம் கவனம் செலுத்த வேண்டுமா? என்பதே கேள்வி.அவர்கள் நம்மை மன்னிப்பு கேட்க சொல்கிறார்கள்.. ஆனால் அது எல்லாம் முக்கியம் இல்லை. இந்தியா இது போன்ற சின்ன சின்ன விஷயத்திற்கு எல்லாம் ரியாக்சன் கொடுக்க வேண்டியது இல்லை. இந்தியா தனது சொந்த பாரம்பரியத்தை காப்பதில் கவனமாக இருக்க வேண்டும். சகிப்புத்தன்மை நம்முடைய பாரம்பரியம் இல்லை.

மற்றவர்கள் கலாச்சாரம்
மற்றபடி மரியாதையும், எல்லோரையும் ஏற்றுக்கொள்வதும்தான் நம்முடைய பாரம்பரியம். மற்றவர்களின் கலாச்சாரத்தை ஏற்றுக்கொள்வதுதான் நம்முடைய கலாச்சாரம். நாம் யாரையும் வேற்று ஆளாக பார்க்க மாட்டோம். பிரதமர் மோடி எல்லோரையும் உள்ளடக்கிய வளர்ச்சி வேண்டும். அதுதான் நம் பாரம்பரியம் என்று கூறியுள்ளார். ஆர்எஸ்எஸ் தலைவரும் அதைத்தான் சொல்லி இருக்கிறார். எல்லோரும் வளர வேண்டும்.

வலுப்படுத்த கூடாது
நமது கலாச்சாரத்தை பாதுகாக்க வேண்டும் என்று பிரதமர் மோடி கூறி இருக்கிறார். அதைத்தான் நாம் வலுப்படுத்த வேண்டும். நுபுர் சர்மா அவசரத்தில் தொலைக்காட்சியில் ஏதாவது பேசி இருப்பார். விவாத கொதிப்பில் ஏதாவது சொல்லி இருப்பார். அது போன்ற விஷயங்கள் எல்லாம் பெரும்பாலும் முக்கியம் கிடையாது, என்று கேரளா ஆளுநர் ஆரிப் முகமது கான் கூறியுள்ளார்.
-
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம்












Click it and Unblock the Notifications