பாதகத்தி.. பிஞ்சு குழந்தை சாப்பிட்ட பிரட்டில் சயனடை கலந்து.. ஜோலியின் குரூரம்
குழந்தை சாப்பிட்ட பிரட்டில் சயனைடு கலந்துள்ளார் ஜோலி
Recommended Video
திருவனந்தபுரம்: என்ன ஒரு குரூரமான மனசு பாருங்க இந்த ஜோலிக்கு.. பச்சைக் குழந்தைக்கு அவள் சாப்பிடும் பிரெட்டில் சயனைடைக் கலந்து கொடுத்து கொலை செய்துள்ளார் இந்தப் பெண்.
ஜோலியின் கிரிமினல் செயல்களைத் தோண்டத் தோண்ட போலீஸார் அதிர்ச்சியில் உறைந்து போய் வருகின்றனர். அந்த அளவுக்கு அதிர வைப்பதாக உள்ளது அவரது செயல்பாடுகள்.
விஷத்தைக் கலப்பதற்காக அவர் தேர்ந்தெடுத்த பொருட்கள்தான் போலீஸாரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அந்த அளவுக்கு நுணுக்கமாக செயல்பட்டுள்ளார் ஜோலி.

பதட்டம்
சோப்பு, மது, கறி மசாலா, பிரெட் , மருந்துகள் என விதம் விதமாக தேர்வு செய்து நிறுத்தி நிதானமாக பிளான் செய்து ஒவ்வொரு குடும்ப உறுப்பினரையும் கொலை செய்துள்ளார் ஜோலி. எந்த பதட்டமும் இல்லாமல், தவறு வெளியே கொஞ்சம் கூட தெரியாத வகையில் அவர் செயல்பட்டுள்ளார்.

சர்ச்
ஜோலி கொலை செய்த 6 பேரில் 2 வது குழந்தை ஆல்பினும் ஒன்று. இந்தக் குழந்தையை மிகக் குரூரமாக கொலை செய்துள்ளார் ஜோலி. கோடன்சேரியில் உள்ள சர்ச் ஒன்றில் சம்பவ தினத்தன்று ஷாஜுவின் மகன் ஆல்பினுக்கு ஞானஸ்தானம் செய்தனர். அப்போது தனது கையால் குழந்தைக்கு பிரெட் ஊட்டி விட்டுள்ளார் ஜோலி.

விஷம்
அந்த பிரெட் சாப்பிட்ட கொஞ்ச நேரத்தில் குழந்தை இறந்து விட்டது. இந்த சம்பவத்தை அப்போது நேரில் பார்த்த ஒருவர், தற்போது போலீஸாரிடம் கூறியுள்ளார். போலீஸார் இதுகுறித்து ஜோலியிடம் கேட்டபோது பிரெட்டில் விஷம் கலந்திருந்ததாக ஒப்புக் கொண்டாராம். சாப்பிடக் கொடுத்த பிரெட்டில் யாருக்குமே சந்தேகம் வராத வகையில் சயனடை கலந்துள்ளார் ஜோலி.

சிக்கல்?
சம்பவத்தன்று ஆல்பின் சாப்பிட்ட பிரெட்டில் கொஞ்சம் மீந்துள்ளது. அதை பத்திரமாக அப்புறப்படுத்தி விட்டாராம் ஜோலி. நாய் ஏதாவது சாப்பிட்டால் சிக்கலாகி விடும் என்பதால் கீழே கூட போடாமல் எங்கோ கொண்டு போய் போட்டுள்ளார். அனேகமாக அதை அவர் புதைத்திருக்கக் கூடும் என்று தெரிகிறது.
-
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
30 வருடமாக "டிமிக்கி" கொடுத்த பாகிஸ்தான்.. உடனே ரூ.32,459 கோடி கடனை தர வேண்டும்.. UAE விதித்த கெடு -
Jayalalitha: நானும் ஜெயலலிதாவும் சர்ச் பார்க் பள்ளியில்தான் படித்தோம்! மணப்பாறையில் கனிமொழி பேச்சு -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
ரஷ்ய கஜானாவில் அடி.. இந்தியாவுக்கு ஓடி வந்த புடின் அரசு.. LPG பிரச்சனைக்கு வழிபிறந்தது? -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து












Click it and Unblock the Notifications