கேரளா குண்டு வெடிப்பு பிரார்த்தனை கூடத்தில் என்.ஐ.ஏ.- முதல்வர் தலைமையில் அனைத்து கட்சி கூட்டம்!
திருவனந்தபுரம்: கேரளாவில் குண்டு வெடிப்பு நடந்த எர்ணாகுளம் கமளச்சேரி பிரார்த்தனை கூட்டம் நடைபெற்ற மையத்தை தேசிய புலனாய்வு ஏஜென்சி (என்.ஐ.ஏ.) அதிகாரிகள் பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக அனைத்து அரசியல் கட்சிகளுடன் மாநில முதல்வர் பினராயி விஜயன் இன்று ஆலோசனை நடத்தினார்.
கேரளா எர்ணாகுளம் கமளச்சேரியில் ஜெகோவாவின் சாட்சிகள் அல்லது யெகோவாவின் சாட்சிகள் என்ற கிறிஸ்தவ பிரிவினர் பிரார்த்தனை கூட்டத்தை நடத்தி வந்தனர். இந்தக் கூட்டத்தில் 2,000க்கும் அதிகமானோர் பங்கேற்றனர். சிலுவைகள், உருவங்களை ஏற்காத, இறந்தவர்கள் உயிரோடு வருவார்கள் என்று நம்புகிற கிறிஸ்தவ பிரிவினர்தான் யெகோவா சாட்சிகள்.

பலி எண்ணிக்கை 3 ஆக அதிகரிப்பு: கமளச்சேரி பிரார்த்தனையின் போது திடீரென பயங்கர சப்தத்துடன் குண்டுகள் வெடித்தன. இதனால் பிரார்த்தனையில் ஈடுபட்டிருந்தவர்கள் சிதறி ஓடினர். இந்த குண்டு வெடிப்பு சம்பத்தில் 12 வயது சிறுமி உட்பட 3 பேர் பலியாகி உள்ளனர். 50க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தற்போது உயிரிழந்த 3 பேர் விவரங்களை போலீசார் வெளியிட்டுள்ளனர்.
டொமினிக் சரண்: இந்த குண்டு வெடிப்புக்கு டொமினிக் மார்ட்டின் என்பவர் பொறுப்பேற்று போலீசில் சரணடைந்தார். இவரும் ஜெகோவா சாட்சிகள் பிரிவைச் சேர்ந்தவர். இந்த பிரிவில் 16 ஆண்டுகள் தாம் இணைந்திருந்ததாகவும் ஜெகோவா சாட்சிகள், தேசதுரோகிகள் என்பதாலும் அவர்களை அழிக்கவே வெடிகுண்டு வைத்ததாகவும் டொமினிக் மார்ட்டின் வாக்குமூலம் கொடுத்தார். தற்போது டொமினிக் மார்ட்டின் ஊபா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
அனைத்து கட்சி கூட்டம்: நாட்டை பேரதிர்ச்சிக்குள்ளாக்கிய இந்த சம்பவம் குறித்து விவாதிக்க கேரளாவில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தை முதல்வர் பினராயி விஜயன் இன்று கூட்டினார். இந்தக் கூட்டத்தில் கேரளாவின் முக்கிய அரசியல் கட்சிகளின் தலைவர்கள், பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
என்.ஐ.ஏ. விசாரணை: இதனிடையே எர்ணாகுளம் கமளச்சேரி வெடிகுண்டு வெடித்த இடத்தை தேசிய புலனாய்வு ஏஜென்சி அதிகாரிகள் (என்.ஐ.ஏ) இன்று நேரில் பார்வையிட்டு விசாரணையை நடத்தினர். இதேபோல தமிழ்நாடு, கேரளா போலீசாரும் இந்த வெடிகுண்டு சம்பவம் குறித்து விசாரிக்கின்றனர்.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications