உங்க பருப்பு எங்ககிட்ட வேகாது; நாங்க வேற மாதிரி... பிரதமர் மோடிக்கு, பினராயி விஜயன் வார்னிங்!
திருவனந்தபுரம்: நாங்கள், நீங்கள்(மத்திய அரசு) இதுவரை டீல் செய்தவர்களைப் போன்றவர்கள் அல்ல. எங்களின் போக்கு வித்தியாசமானது. நீங்கள் என்ன செய்தாலும் இந்த மண் எங்களை அவதூறாகப் பேசாது என்று கேரள முதல்வர் பினராயி விஜயன், பிரதமர் மோடியை அவதூறாக பேசியுள்ளார்.
ஓமன் நாட்டிலிருந்து திருவனந்தபுரத்துக்குத் அமெரிக்க டாலர்களைக் கடத்திய வழக்கில் கேரள சபாநாயகர் ஸ்ரீராமகிருஷ்ணன் நேரில் விசாரணைக்கு ஆஜராகக் கோரி அமலாக்கப் பிரிவு சம்மன் அனுப்பியுள்ள நிலையில் பினராயி விஜயன் இவ்வாறு கூறியுள்ளார்.
ஓமன் நாட்டிலிருந்து திருவனந்தபுரத்துக்குத் தூதரகத்தின் உதவியைப் பயன்படுத்தி அமெரிக்க டாலர்களைக் கடத்திய வழக்கில் கேரள சபாநாயகர் ஸ்ரீராமகிருஷ்ணன் நேரில் விசாரணைக்கு ஆஜராகக் கோரி அமலாக்கப் பிரிவு சம்மன் அனுப்பியுள்ளது. ஸ்ரீராமகிருஷ்ணன் 12-ம் தேதி கொச்சி சுங்கத்துறை அலுவலகத்தில் விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும் என்றும் சுங்கத்துறையினர் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.

இந்த வழக்கில் கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கும் தொடர்பு இருப்பதாக தொடர்ந்து குற்றம்சாட்டப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மத்திய அரசு விசாரணை அமைப்புகளை தங்கள் ஆதாயத்துக்கு பயன்பபடுத்தி வருவதாக பினராயி விஜயன் சராமரியாக குற்றம்சாட்டி உள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது:-
''பாஜகவுக்கும், அவர்களின் இசைக்கு ஏற்ப நடனமாடும் ஏஜென்சிகளுக்கும்(விசாரணை அமைப்புகள்) நான் சொல்ல வேண்டியது இதுதான். நாங்கள், நீங்கள் இதுவரை டீல் செய்தவர்களைப் போன்றவர்கள் அல்ல. எங்களின் போக்கு வித்தியாசமானது. நீங்கள் என்ன செய்தாலும் இந்த மண் எங்களை அவதூறாகப் பேசாது. ஏனெனில் இங்கு எங்களின் வாழ்க்கை திறந்த புத்தகம் போன்றது. இதை கூடிய விரைவில் உணருவீர்கள்'' என்று பினராயி விஜயன் கூறியுள்ளார்.
-
இந்தியாவில் வீடுகளில் தேங்கி கிடக்கும் 32,000 டன் தங்கம்.. மறுசுழற்சி செய்ய விரும்பும் மோடி! ஏன்? -
தங்க திருட்டு வழக்கில் கைதான தம்பதியின் செயலால்... தாம்பரம் சேலையூர் போலீசாருக்கு பெரிய சிக்கல் -
இனி தங்கம் உங்க கையில விளையாடும்! தமிழ்நாடு அரசின் சூப்பர் அறிவிப்பு! 5 நாள் ட்ரெய்னிங் போதும்! -
சும்மா துங்கும் பொக்கிஷம்.. இந்திய வீடு, கோயில்கள் முடங்கிய 32,000 டன் தங்கம்! மத்திய அரசின் ப்ளான்! -
ஆட்டம் போடும் அமெரிக்க டாலர்.. கோடிக்கணக்கான ரூபாய் தங்கத்தை விற்ற ரிசர்வ் வங்கி! இது தான் காரணமா? -
சேலத்தில் விசிக பிரமுகருக்கு 20 பவுன் தங்க மாலை.. மனைவியான பெண் போலீஸ் ஏட்டு சர்ப்ரைஸ் -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications