உங்க பருப்பு எங்ககிட்ட வேகாது; நாங்க வேற மாதிரி... பிரதமர் மோடிக்கு, பினராயி விஜயன் வார்னிங்!
திருவனந்தபுரம்: நாங்கள், நீங்கள்(மத்திய அரசு) இதுவரை டீல் செய்தவர்களைப் போன்றவர்கள் அல்ல. எங்களின் போக்கு வித்தியாசமானது. நீங்கள் என்ன செய்தாலும் இந்த மண் எங்களை அவதூறாகப் பேசாது என்று கேரள முதல்வர் பினராயி விஜயன், பிரதமர் மோடியை அவதூறாக பேசியுள்ளார்.
ஓமன் நாட்டிலிருந்து திருவனந்தபுரத்துக்குத் அமெரிக்க டாலர்களைக் கடத்திய வழக்கில் கேரள சபாநாயகர் ஸ்ரீராமகிருஷ்ணன் நேரில் விசாரணைக்கு ஆஜராகக் கோரி அமலாக்கப் பிரிவு சம்மன் அனுப்பியுள்ள நிலையில் பினராயி விஜயன் இவ்வாறு கூறியுள்ளார்.
ஓமன் நாட்டிலிருந்து திருவனந்தபுரத்துக்குத் தூதரகத்தின் உதவியைப் பயன்படுத்தி அமெரிக்க டாலர்களைக் கடத்திய வழக்கில் கேரள சபாநாயகர் ஸ்ரீராமகிருஷ்ணன் நேரில் விசாரணைக்கு ஆஜராகக் கோரி அமலாக்கப் பிரிவு சம்மன் அனுப்பியுள்ளது. ஸ்ரீராமகிருஷ்ணன் 12-ம் தேதி கொச்சி சுங்கத்துறை அலுவலகத்தில் விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும் என்றும் சுங்கத்துறையினர் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.

இந்த வழக்கில் கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கும் தொடர்பு இருப்பதாக தொடர்ந்து குற்றம்சாட்டப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மத்திய அரசு விசாரணை அமைப்புகளை தங்கள் ஆதாயத்துக்கு பயன்பபடுத்தி வருவதாக பினராயி விஜயன் சராமரியாக குற்றம்சாட்டி உள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது:-
''பாஜகவுக்கும், அவர்களின் இசைக்கு ஏற்ப நடனமாடும் ஏஜென்சிகளுக்கும்(விசாரணை அமைப்புகள்) நான் சொல்ல வேண்டியது இதுதான். நாங்கள், நீங்கள் இதுவரை டீல் செய்தவர்களைப் போன்றவர்கள் அல்ல. எங்களின் போக்கு வித்தியாசமானது. நீங்கள் என்ன செய்தாலும் இந்த மண் எங்களை அவதூறாகப் பேசாது. ஏனெனில் இங்கு எங்களின் வாழ்க்கை திறந்த புத்தகம் போன்றது. இதை கூடிய விரைவில் உணருவீர்கள்'' என்று பினராயி விஜயன் கூறியுள்ளார்.
-
சர்வதேச தங்க மார்கெட்டில் பூகம்பம்.. 25 ஆண்டுகளில் முதல்முறையாக தங்கத்தை விற்று தள்ளும் ரஷ்யா! -
Gold Price: மீண்டும் ஷாக் கொடுத்த தங்கம் விலை.. ஒரே நாளில் அதிரடி உயர்வு.. நகை பிரியர்கள் கலக்கம்! -
கோவையில் இருந்து கொண்டே மோடியை வரவேற்க செல்லாத அண்ணாமலை.. லிஸ்டில் இருந்தும் புறக்கணித்து எதிர்ப்பு -
தடுமாறுதே தங்க சந்தை.. மாறி மாறி சரிந்து எகிறும் தங்கத்தின் விலை! இப்போ வாங்கலாமா? வேண்டாமா? -
மாநில முதலமைச்சர்களுடன்.. பிரதமர் மோடி முக்கிய மீட்டிங்! மு.க.ஸ்டாலின் பங்கேற்காதது ஏன்? -
தொடரும் ஈரான் போர்! கச்சா எண்ணெய் – கேஸ் அபாயம் பற்றி மாநில முதலமைச்சர்களுடன் மோடி தீவிர ஆலோசனை -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னை மாணவி தடா அருவிக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம்












Click it and Unblock the Notifications