"கேரள யானை மத வெறியனால் கொல்லப்பட்டது.." எச்.ராஜா பகீர் கருத்து.. மதசாயம்.. பினராயி விஜயன் காட்டம்
திருவனந்தபுரம்: கேரளாவில் யானை வெடிவைத்து கொல்லப்பட்ட சம்பவத்தில் மத சாயம் பூசப்படுவதாக அந்த மாநில முதல்வர் பினராயி விஜயன் குற்றம்சாட்டியுள்ளார். காங்கிரஸ் தலைவர்களும் இதே குற்றச்சாட்டை பாஜக தலைவர்கள் மீது முன்வைத்துள்ளனர்.
Recommended Video
கேரள மாநிலத்தில் அன்னாசிப் பழத்துக்கு உள்ளே வெடிவைத்து கொடுத்து ஒரு யானை கொல்லப்பட்டதாக தகவல் வெளியானது. அதுவும் மலப்புரம் மாவட்டத்தில் இந்த யானை பலியானதாக ஊடகங்களில் செய்தி வெளியானது.
மலப்புரம் மாவட்டத்தில் குறிப்பிட்ட சிறுபான்மை மதத்தினர் அதிகப்படியாக வாழ்வதால் இந்த பிரச்சனையை வேறு மாதிரியான கோணத்தில் வலதுசாரியினர் சமூக வலைத்தளங்களில் முன்னெடுக்க தொடங்கினர்.

மேனகா காந்தி ஆரம்பித்தார்
முன்னாள் மத்திய அமைச்சரும், பாஜகவை சேர்ந்த, விலங்குகள் நல ஆர்வலர் மேனகா காந்தி ஒரு சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்தார். அதில், மலப்புரம் மாவட்டம், விலங்குகள் மற்றும் பறவைகளுக்கு எதிராக மிகவும் மூர்க்கத்தனமாக நடந்து கொள்ளும் மக்களை கொண்ட பகுதி என்றும், சாலைகளில் விஷத்தைத் சுமார் 300 முதல் 400 பறவைகள் மற்றும் நாய்கள் ஒரே நேரத்தில் கொல்லப்படது அந்த மாவட்டத்தில் தானென்றும் அவர் குற்றஞ்சாட்டியிருந்தார்.

மலப்புரம் மாவட்டம் இல்லை
ஆனால் கேரளாவில் உள்ள எதிர்க்கட்சிகள் மற்றும் ஆளுங்கட்சி இரண்டுமே இந்த குற்றச்சாட்டை மறுக்கின்றன. யானை பலியான சம்பவம் என்பது பாலக்காடு மாவட்டத்தில் உள்ள மன்னார்காடு வன சரகத்திற்கு உட்பட்ட பகுதி என்றும், மலப்புரம் மாவட்டம் கிடையாது என்றும், மேலும், பறவைகள் மற்றும் நாய்களுக்கு விஷம் வைத்து கொன்ற சம்பவம் எதுவுமே அந்த மாவட்டத்தில் இதுவரை பதிவானது இல்லை. எந்த ஆதாரத்தின் அடிப்படையில் மேனகா காந்தி இவ்வாறு தெரிவித்தார் என்றும் கேள்விகள் எழ ஆரம்பித்தன.
|
பினராயி விஜயன் குற்றச்சாட்டு
மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் வெளியிட்ட டுவிட்டர், பதிவிலும், மலப்புரம் மாவட்டம் என்பதை அழுத்தம் திருத்தமாக தெரிவித்திருந்தார். இதனிடையே கேரள முதல்வர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், யானை கொல்லப்பட்ட சம்பவத்தில் நீதி பெற்றுத் தரப்படும் என்றும், ஆனால் இந்த விஷயத்தை சிலர் வெறுப்பு பிரசாரத்துக்கு பயன்படுத்தி வருவதாகவும் குற்றஞ்சாட்டினார். தவறான தகவல்களுடன் பொய்கள் கட்டமைக்கப்பட்டு வருகின்றன. அரைகுறை உண்மைகளை வைத்துக்கொண்டு மதவெறி பிரச்சாரங்கள் செய்யப்படுகின்றன. இவ்வாறு முதல்வர் குற்றஞ்சாட்டியுள்ளார் .
|
ராஜா சீற்றம்
மலப்புரம் மாவட்டத்தில் சம்பவம் நடக்கவில்லை என்று திரும்ப திரும்ப கேரள அரசு கூறிய பிறகும், பாஜக தலைவர்கள் இதை விடுவதாக இலல்லை. இதனிடையே பாஜக தேசிய பொதுச் செயலாளரான எச்ச ராஜா வெளியிட்டுள்ள ஒரு ட்விட்டர் பதிவில், கேரளா மல்லப்புரத்தில் கர்ப்பிணி யானைக்கு அன்னாசிப்பழத்தில் கல்வெடி வைத்து யானையும் அதன் கர்ப்பத்தில் இருந்த குட்டியும் ஒரு மதவெறியனால் கொல்லப்பட்டது வன்மையாக கண்டிக்கத்தக்கது. ஜல்லிக்கட்டிற்கு எதிராக மல்லுக்கட்டிய இந்து விரோத ஈவென்சலிஸ்ட் கூட்டம், பீட்டா எல்லாம் எங்கே. வெட்கம். இவ்வாறு தெரிவித்துள்ளார். இதற்கு சமூக வலைத்தளங்களில் கடும் கண்டனம் எழுந்துள்ளது.
-
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
Kerala: உடலில் 91 காயங்கள்.. கண்ணை மறைத்த கள்ளக்காதல்.. 1½வயது குழந்தையை துடிக்க துடிக்க கொன்ற கொடூரம்! அதிர்ந்த கேரளா












Click it and Unblock the Notifications