திடீரென கேட்ட பயங்கர சத்தம்.. சபரிமலை கோயிலில் வெடி விபத்து.. மூன்று பேர் படுகாயம்!
திருவனந்தபுரம்: புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலில் வெடி மருந்து நிரப்பும் இடத்தில் இன்று எதிர்பாராத விதமாக வெடிவிபத்து ஏற்பட்டது. இதில் மூன்று ஊழியர்கள் படுகாயமடைந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.
உலக புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலில் இப்போது பக்தர்கள் குவிந்து வருகின்றனர். சபரிமலை கோயிலில் இப்போது மண்டல, மகர விளக்குப் பூஜை விழா நடந்து வருகிறது.

இதற்காகச் சபரிமலை கோயிலில் கடந்த 16ஆம் தேதி நடை திறக்கப்பட்டது. கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா கட்டுப்பாடுகள் அமலில் இருந்ததால் பக்தர்கள் பெரியளவில்லை இல்லை,
இந்தாண்டு கொரோனா கிட்டதட்ட முழுமையாகக் கட்டுக்குள் வந்துவிட்ட நிலையில், பக்தர்கள் பலரும் மண்டல பூஜை முன்னிட்டு குவிந்து வருகின்றனர். ஒவ்வொரு நாளும் பக்தர்களின் கூட்டம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இதனால் அங்குப் பல இடங்களில் போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது. அதேபோல அங்கு ஒவ்வொரு ஆண்டும் வெடி வழிபாட்டு நடைபெறுவது வழக்கம். இதற்காக அங்கு வெடிமருந்து நிரப்பும் மையமும் உள்ளது.
இன்றைய தினம் சபரிமலையில் உள்ள வெடிமருந்து நிரப்பும் மையத்தில் வழக்கம் போல வெடி மருந்து நிரப்பும் பணிகள் ஏற்பட்டது. மாளிகைபுரம் அருகே உள்ள இந்த மையத்தில் இன்று மாலை எதிர்பாராத விதமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
அங்கு வெடிமருந்து நிரம்பும்போது சிறு வெடி விபத்து ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் உடனடியாக நீரைப் பாய்ச்சி தீயை முழுமையாக அணைத்தனர்.
இந்த விபத்தில் அங்கு பணியாற்றி வந்த மூன்று ஊழியர்கள் படுகாயமடைந்தனர். அவர்கள் உடனடியாக கோட்டயாம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதில் தொடர்புடையவர்கள் ராஜேஷ், அமல், ஜெயக்குமார் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. காயமடைந்த ஒருவருக்கு 60% தீக்காயமும் மற்ற இருவருக்கு 40% தீக்காயமும் ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.
அவர்களுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சபரிமலையில் பக்தர்கள் அதிகம் வரும் பகுதியில் திடீரென ஏற்பட்ட இந்த விபத்தால் அங்கு சற்று நேரம் பதற்றம் ஏற்பட்டது.
-
ஒற்றை இலக்க பாஜக.. கேரளாவில் அடித்து தூக்கும் காங்.,. அப்போ கம்யூனிஸ்ட்? புதிய கருத்து கணிப்பு -
இனி மெட்ரோவில் மது அருந்தினால் ஜெயில் இல்லை! 717 சிறு குற்றங்களுக்கு கைது இல்லை! வரும் புதிய மாற்றம் -
வெளிநாட்டு நன்கொடைக்கு கட்டுப்பாடு.. கிறிஸ்துவ அமைப்புகளுக்கு சிக்கலை தரும் FCRA.. சர்ச்சை ஏன்? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
இந்தியா முழுக்க "போர் ஊரடங்கு?" தீயாக பரவும் தகவல்.. பொதுமக்கள் அதிர்ச்சி! மத்திய அரசு சொல்வது என்ன? -
"இந்தியா எங்கள் நண்பர்.." போருக்கு மத்தியிலும் மறக்காமல் ஈரான் சொன்ன வார்த்தை.. இதுதான் முக்கியம்! -
உலகமே வியந்த இந்திய திருநங்கையர் உரிமைப் போராட்டம்.. சட்டத்தால் முடக்கப்படுகிறதா? ஐநா கவலை -
நாடு முழுவதும் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் இன்று தொடக்கம்! தமிழகத்தில் எப்போது? -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக்












Click it and Unblock the Notifications