நீரில் மூழ்கிய வீடுகள்.. கழுத்து வரை தண்ணீர்.. கேரளாவில் ஏற்பட்ட வெள்ளம்.. அதிர்ச்சி தரும் வீடியோஸ்
திருவனந்தபுரம்: கேரளாவில் பெய்து வரும் கனமழையால் பல்வேறு மாவட்டங்களில் அங்கு வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதன் வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது,
Recommended Video
கேரளாவில் கடந்த மூன்று நாட்களாக தீவிர கனமழை பெய்து வருகிறது. எர்ணாகுளம், இடுக்கி, திருச்சூர், பத்தனம்திட்டா, கோட்டயம் ஆகிய மாவட்டங்களில் மிக கனமழை இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்து உள்ளது. இந்த 5 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
தென்கிழக்கு அரபிக் கடலில் குறைந்த காற்றழுத்தம் உருவாகி உள்ளதால் இந்த மழை பெய்து வருகிறது. 19ம் தேதி வரை கேரளாவில் மழை பெய்யக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அங்கு எர்ணாகுளம், மலப்புரம், கோழிக்கோடு , இடுக்கி, திருச்சூர், பத்தனம்திட்டா, கோட்டயம் என்று பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கி உள்ளன.
|
கேரளா
கேரளாவில் இருக்கும் முண்டகாயம் பகுதி எப்போதும். மழையால் அதிகம் பாதிக்கப்படும் பகுதியாகும். கடந்த 3 வருடங்களில் அங்கு அடுத்தடுத்து ஏற்பட்ட வெள்ளங்களில் எல்லாம் இந்த பகுதிதான் அதிகம் பாதிக்கப்பட்டது. கோட்டயத்தில் இருக்கும் நகரமாகும் இது. கடந்த 2 நாட்களாக அங்கு விடாமல் மழை பெய்து வருகிறது. இதனால் அங்கு மிகப்பெரிய வெள்ளம் ஏற்பட்டுள்ளது.
|
முண்டகாயம்
பல்வேறு வீடுகளுக்குள் அங்கு மழை வெள்ளம் புகுந்துள்ளது. இங்கு இருக்கும் பிரபலமான பாலம் கேரளாவில் வெள்ளம் ஏற்படும் போதெல்லாம் மூழ்குவது வழக்கம் ஆகி உள்ளது. இந்த முறையும் இந்த பாலத்திற்கு மேல் சில அடிகள் வரை வெள்ளம் புரண்டு ஓடிக்கொண்டு இருக்கிறது. கேரளாவில் ஏற்பட்டு இருக்கும் இந்த வெள்ளம் காரணமாக வீடுகள் தண்ணீரில் மூழ்கிய வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
|
கேரளா வெள்ளம்
கேரளாவின் பூஞ்சார் பகுதியில் வெள்ளத்தில் பல பேருந்துகள் மூழ்கின. இது கேரளாவில் இருக்கும் தாழ்வான பகுதிகளில் ஒன்றாகும். இங்கு ஏற்பட்ட வெள்ளம் காரணமாக தண்ணீரில் மூழ்கிய கேஎஸ்ஆர்டிசி பேருந்து ஒன்றை மக்கள் சேர்ந்து இழுத்தது வீடியோவாக வெளியாகி உள்ளது. இங்கு பல இடங்களில் கழுத்து வரை தண்ணீர் ஓடிக்கொண்டு இருக்கிறது.
|
இடுக்கி நிலச்சரிவு
கேரளாவில் ஏற்பட்ட மழை மற்றும் வெள்ளம் காரணமாக இதுவரை 9 பேர் அதிகாரபூர்வமாக பலியாகி உள்ளனர். இடுக்கியில் ஏற்பட்ட நிலச்சரிவில் மட்டும் இதுவரை 7 பேர் அதிகாரபூர்வமாக பலியாகி உள்ளார். கடந்த 2020ல்தான் இடுக்கியில் மாபெரும் நிலச்சரிவு ஏற்பட்டு 60 பேர் வரை பலியானார்கள். அதேபோன்று மீண்டு அங்கு நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. அங்கு தொடர்ந்து மழை பெய்வதால் நிலச்சரிவு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
|
பத்தினம்திட்டா x
பத்தினம்திட்டாவிலும் மோசமான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. வெள்ளம் காரணமாக சாலை முழுக்க தண்ணீர் ஓடிக்கொண்டு இருக்கிறது. அங்கு தாழ்வான பகுதிகளில் பல வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்துள்ளது. தொடர்ந்து மழை பெய்ய வாய்ப்பு உள்ளதால் மேலும் பல பகுதிகள் வெள்ளத்தில் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
-
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு!












Click it and Unblock the Notifications