கொரோனாவால் பொருளாதார பாதிப்பு.. கேரளாவில் பேருந்து கட்டணம் 25 சதவீதம் உயர்வு
திருவனந்தபுரம்: கொரோனாவால் ஏற்பட்டுள்ள பொருளாதார பாதிப்பை ஈடுகட்ட பேருந்து கட்டணத்தில் 25 சதவீதம் அளவிற்கு கேரள அரசு உயர்த்தி உள்ளது.
கடந்த மார்ச் மாதத்தில் இருந்து மின்னல் வேகத்தில் பரவ தொடங்கிய கொரோனா தொற்று காரணமாக லாக்டவுன் அறிவிக்கப்பட்டது. இதனால் நாடு முழுவதும் தொழில்துறை முடங்கியது. பொது போக்குவரத்து சேவைகள் அடியோடு முடங்கியது. இவை இரண்டும் இயல்பு நிலைக்கு திரும்புவதற்கான பாதைகள் இதுவரை தெரியவில்லை.

ஏனெனில் கொரோனா தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே செல்கிறது. இதனால் மத்திய மாநில அரசுகளுக்கு போதிய வருவாய் இல்லாமல் கடுமையான நிதி நெருக்கடியை சந்தித்து வருகின்றன.
இதற்கிடையே கடந்த 20 நாட்களுகளுக்கு மேலாக பெட்ரோல் டீசல் விலை தொடந்து உயர்ந்து வருகிறது. , இதனால் பொருளாதார பாதிப்புகளை மீட்டெடுப்பதற்காக கேரளாவில் அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் கட்டணங்களை 25% உயர்த்தி அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
இது குறித்து கேரள மாநில போக்குவரத்துத்துறை அமைச்சர் ஏ.கே சுசீந்திரன் கூறுகையில். போக்குவரத்துத் துறை எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து ஆராய நியமிக்கப்பட்ட நீதிபதிகள் அடங்கிய குழு , அளித்த பரிந்துரையின் பேரில் தற்போது பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
குறைந்தபட்ச கட்டணம் 8 ரூபாயாக இருக்கும். இனி பேருந்து கட்டணம் 5 கிலோமீட்டருக்கு பதிலாக முதல் 2.5 கிலோமீட்டருக்கு கணக்கிடப்படும்.
கல்வி நிறுவனங்கள் செயல்படாததால் மாணவர்களுக்கான சிறப்பு கட்டணங்களை மாற்ற வேண்டாம் என்று முடிவு செய்திருக்கிறோம். எனவே அந்த கட்டணம் உயர்த்தப்படாது. அத்துடன் குறைந்தபட்ச கட்டணத்தை அதிகரிக்க வேண்டாம் என்று முடிவு செய்தோம். அதனால்தான் குறைந்தபட்ச தூரத்தை குறைத்திருக்கிறோம்" இவ்வாறு கூறினார்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications