சபரிமலைக்கு வருகை தரும் பெண்களுக்கு கேரள அரசு பாதுகாப்பு அளிக்காது: கேரள அமைச்சர் அறிவிப்பு
Recommended Video
திருவனந்தபுரம் : சபரிமலைக்கு வருகை தரும் பெண்களுக்கு கேரள அரசு பாதுகாப்பு அளிக்காது என கேரள சட்ட அமைச்சர் ஏகே பாலன் செய்தியாளர்கள் மத்தியில் தெரிவித்தார்.
அதேநேரம் சபரிமலையில் பெண்கள் மலையேற முயன்றால் எப்படி அதை அரசு கையாளும் என்பதை தெரிவிக்க கேரள அரசு மறுத்துள்ளது.
சபரிமலையில் பெண்களை அனுமதிக்கும் விவகாரம் தொடர்பான தீர்ப்பை மறு ஆய்வு செய்யக்கோரிய மனுவை 7 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு உச்ச நீதிமன்றம் மாற்றி உத்தரவிட்டுள்ளது. எனவே தற்போதைய நிலையில் சபரிமலைக்கு பெண்கள் சென்று வழிபட எந்த தடையும் இல்லை.

ரமேஷ் சென்னிதலா
இந்நிலையில் உச்ச நீதிமன்றம் இந்த தீர்ப்பை நேற்று அறிவித்த உடனேயே, காங்கிரஸ் தலைவர் ரமேஷ் சென்னிதலா, "நாத்திகப் பெண்களை" யாத்ரீகர்களாக சபரிமலைக்கு அனுப்பி பதற்றத்தை ஏற்படுத்த வேண்டாம் என்று கேரள அரசாங்கத்தை வலியுறுத்தினார்.

கும்மனம் ராஜசேகரன்
பாஜக தலைவர் கும்மனம் ராஜசேகரன், சபரிமலைக்கு பெண்களை மலையேற அனுமதிக்க அரசு முன்முயற்சி எடுத்தால் மோசமான விளைவுகள் ஏற்படும் என்று எச்சரித்தார்.

தீர்ப்பு தெளிவில்லை
இதற்கிடையே சபரிமலை தீர்ப்பு தொடர்பாக கேரள முதல்வர் பினராயி விஜயன் நேற்று மாலை திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய முதல்வர் பினராயி விஜயன், "சபரிமலை விவகாரத்தில் உச்ச நீதிமன்ற தீர்ப்பு தெளிவில்லாமல் உள்ளது. இந்த தீர்ப்பு மேலும் குழப்பத்தை உருவாக்கி உள்ளது. அதன் தாக்கத்தை நாங்கள் நன்கு புரிந்து கொள்ள வேண்டும். இதற்காக நாங்கள் சட்ட நிபுணர்களை அணுகி ஒரு நிலைப்பாட்டை வகுப்போம்.தீர்ப்பு எதுவாக இருந்தாலும் அதை செயல்படுத்த அரசு கடமைப்பட்டுள்ளது" என்றார்.

விவாதிப்போம்
அப்போது அவரிடம் செய்தியாளர்கள், சபரிமலை வரும் பெண்களை அனுமதிக்கும் முடிவில் அரசு இருக்கிறதா என்று கேட்டனர் அதற்க பினராயி விஜயன், "அதைப் பற்றி விவாதிக்கவும் முடிவு செய்யவும் போதுமான நேரம் இருக்கிறது" என்றார்.

பெண்களுக்கு பாதுகாப்பு
இதனிடையே கேரள சட்ட அமைச்சர் ஏகே பாலன் செய்தியாளர்களிடம் கூறுகையில், இந்ததீர்ப்பு அரசுக்கு அதிக சிக்கலை உருவாக்கும் சபரிமலைக்கு வருகை தரும் எந்த ஒரு பெண் பக்தர்களுக்கும் கேரள அரசு பாதுகப்பு அளிக்காது என்றார்.

இடதுசாரி அரசு
இதன் மூலம் கடந்த ஆண்டு எடுத்த முடிவுக்கு முற்றிலும் மாறுபட்ட முடிவினை கேரளா அரசு இந்த முறை எடுத்துள்ளது தெரிகிறது. கடந்த ஆண்டு சபரிமலை அய்யப்பன் சுவாமியை பார்வையிட முயன்ற சில பெண்களுக்கு கேரளாவில் ஆளும் இடதுசாரி அரசு பாதுகாப்பு அளித்தது.
-
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க!












Click it and Unblock the Notifications