கேரளாவில் ஆட்டம் போடும் காங்கிரஸ்.. போராட்டத்தில் சிபிஎம் அமைச்சர் மீது தாக்குதல்!
திருவனந்தபுரம்: கேரளாவில் காங்கிரஸ் கட்சியினர் எல்லையை மீறுவதாக புகார்கள் எழுந்துள்ளன. காங்கிரஸுக்கு எதிரி பாஜகதான். ஆனால், கேரளாவில் சிபிஎம்-க்கு எதிராக அவர்கள் போராடிக்கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் நேற்று காங்கிரஸ் மாணவர் அமைப்பினர் நடத்திய போராட்டத்தில் சிபிஎம் அமைச்சர் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது.
போராட்டக்காரர்கள், திடீரென அமைச்சரை நெருங்கி தாக்குதல் நடத்த தொடங்கினர். இதில் கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜின் கழுத்து மற்றும் கைகளில் காயம் ஏற்பட்டிருக்கிறது.

என்ன நடந்தது?
நேற்று கண்ணூர் ரயில் நிலையத்திற்கு அமைச்சர் வீணா ஜார்ஜ் வந்திருந்தார். அவருக்கு எதிராக கருப்புக்கொடி போராட்டத்தில் ஈடுபட்டிருந்த காங்கிரஸ் மாணவர் அமைப்பினர், திடீரென அமைச்சரை நெருங்கி தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் அமைச்சரின் கை, கழுத்தில் காயம் ஏற்பட்டிருக்கிறது. காயம் காரணமாக உடனடியாக அமைச்சர், கண்ணூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். இந்த சம்பவத்திற்கு முதலமைச்சர் கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.
காங்கிரஸ் மறுப்பு
ஆனால், காங்கிரஸ் கட்சி இந்த குற்றச்சாட்டை முற்றிலுமாக மறுத்துள்ளது. சம்பவம் நடந்த இடத்தில் 30-35 போலீசார் இருந்ததாகவும், ஆனால் போராட்டக்காரர்கள் 4-5 பேர்தான் இருந்தார்கள் என்றும், எனவே எப்படி தாக்குதல் நடத்த முடியும்? என்று கேள்வி எழுப்பினார். மட்டுமல்லாது தேர்தல் நெருங்குகிறது என்பதால், அனுதாபத்தை பெற இப்படி நடிப்பதாகவும் அமைச்சர் மீது காங்கிரஸ் கட்சி குற்றச்சாட்டை வைத்திருக்கிறது.
பழிவாங்கிய அமைப்பு
அமைச்சர் மீதான தாக்குதல் காரணமாக, அமைச்சரின் பயணம் ரத்து செய்யப்பட்டிருக்கிறது. தாக்குதல் நடத்தியவர்கள் மீது கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருக்கிறது. போராட்டம், அதைத் தொடர்ந்து நடந்த தாக்குதல் காரணமாக கண்ணூரில் பதற்றம் அதிகரித்திருக்கிறது. காங்கிரஸ் மாணவர் அமைப்பை பழிவாங்க, கண்ணூரில் உள்ள காங்கிரஸின் கொடி கம்பத்தை இடதுசாரி அமைப்பினர் சேதப்படுத்தியிருக்கின்றனர்.
வீணா ஜார்ஜுக்கு என்ன ஆனது?
வீணா ஜார்ஜ் மருத்துவப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு நேற்று இரவு 10 மணியளவில் கொண்டு செல்லப்பட்டார். அவருக்கு கழுத்தில் லேசான காயம் ஏற்பட்டதால், வலது கையில் உணர்வின்மை ஏற்பட்டதாகவும், இடது கையிலும் லேசான பாதிப்பு இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
எம்.ஆர்.ஐ ஸ்கேனில் பெரிய அளவிலான பாதிப்புகள் எதுவும் கண்டறியப்படவில்லை. இன்று காலை 8 மணிக்கு மருத்துவக் குழு கூடி, அமைச்சருக்குத் தேவையான சிகிச்சை குறித்து முடிவெடுத்தது. அதைத் தொடர்ந்து, காலை 10 மணியளவில் மருத்துவ அறிக்கை வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி












Click it and Unblock the Notifications