இவ்வளவு கோடியா? ஓணம் பண்டிகையால் கேரளாவில் அதிகரித்த மது விற்பனை! வாய்பிளக்க வைத்த சேட்டன்கள்!
திருவனந்தபுரம்: கேரளாவில் ஓணம் பண்டிகையையொட்டி மதுபான விற்பனை என்பது பல மடங்கு அதிகரித்துள்ளது. மேலும் ஓணம் பண்டிகையையொட்டி கேரளாவுக்கு மதுபானம் விற்பனை மூலம் கிடைத்த வருமானம் குறித்த முக்கிய தகவல் வெளியாகி உள்ளது. இருப்பினும் தமிழ்நாட்டை ஒப்பிடும்போது கேரளா கிட்ட நெருங்க முடியாத நிலையில் உள்ளது.
மதுபானம் குடிப்பது என்பது உடல்நலத்துக்கு தீங்கானது. இருப்பினும் பலரும் மதுபானத்தை குடித்து வருகின்றனர். குறிப்பாக திருவிழா, பண்டிகை காலங்களில் மதுபானம் விற்பனை என்பது தமிழ்நாடு மட்டுமின்றி பிற மாநிலங்களிலும் அதிகரித்து வருகிறது.

தமிழ்நாட்டை பொறுத்தமட்டில் தீபாவளி உள்பட முக்கிய பண்டிகை காலங்களில் மதுபான விற்பனை என்பது பல மடங்கு வரை அதிகரிக்கும். அந்த வகையில் தான் தற்போது கேரளாவில் 10 நாட்கள் கொண்டாடப்படும் ஓணம் பண்டிகையையொட்டி மதுபானம் விற்பனை என்பது உச்சம் தொட்டுள்ளது.
கடந்த மாதம் 20ம் தேதி கேரளாவில் ஓணம் பண்டிகை தொடங்கியது. இன்றுடன் ஓணம் பண்டிகை முடிவடைய உள்ளது. இந்நிலையில் தான் கேரளாவில் மொத்தம் ரூ.759 கோடிக்கு மதுபானம் விற்பனை செய்யப்பட்டுள்ளது. சந்திரயான் 3 திட்டத்தின் மதிப்பு என்பது ரூ.600 கோடி என கூறப்படும் நிலையில் வெறும் 11 நாளில் அதனை விட ரூ.159 கோடி அதிகமாக கேரளாவில் ஓணம் பண்டிகைக்கான மதுவிற்பனை நடந்துள்ளது.
இதுதொடர்பாக கேரளா மாநில மதுபான கார்ப்பரேஷன் (பெவ்கோ) சார்பில் மாநிலத்தில் மதுபான விற்பனை 10 நாட்களில் உச்சம் தொட்டுள்ளது. ஓணத்துக்காக புதன், வியாழக்கிழமைகளில் மதுபான கடைகள் மூடப்பட்டன. இருப்பினும் கடந்த ஆண்டை காட்டிலும் இந்த முறை மதுவிற்பனை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது கடந்த ஆண்டை ஒப்பிடும்போது மதுபான விற்பனை என்பது 8.5 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. ஓணத்தையொட்டி உத்ராடம் தினத்தில் மட்டும் பெவ்கோவுக்கு மதுபான விற்பனை மூலம் ரூ.116 கோடி வருவாய் கிடைத்துள்ளது'' என தெரிவித்துள்ளது. கேரளா மாநிலம் நிதி நெருக்கடியில் சிக்கி தவிக்கும் நிலையில் இந்த மதுபான விற்பனையில் கிடைத்த வரி வருவாய் என்பது அந்த மாநிலத்துக்கு உதவும் வகையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் மதுபான வகைகளை பொறுத்தமட்டில் கேரளா மாநில தயாரிப்பான ஜவான் ரம் வகை அதிகமாக விற்பனையாகி உள்ளது. கடந்த 10 நாளில் மட்டும் 70 ஆயிரம் கேஸ்கள் விற்பனையாகி உள்ளன. மேலும் ஏரியா வாரியாக பார்த்தால் மலப்புரம் திரூரில் உள்ள மதுவிற்பனை நிலையம் முதலிடத்தையும், திருச்சூர் மாவட்டத்தில் உள்ள இரிஞ்சாலக்குடா 2வது இடத்தை பிடித்துள்ளது.
இருப்பினும் கூட தமிழ்நாட்டை ஒப்பிடும்போது கேரளாவில் மதுபான விற்பனை என்பது குறைவு தான் என சிலர் சமூக வலைதளங்களில் தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக தீபாவளி சந்தர்ப்பத்தில் 3 அல்லது 4 நாட்களிலேயே தமிழ்நாட்டில் ரூ.750 கோடிக்கும் அதிகமான விற்பனை நடக்கும் எனவும், கேரளாவில் 10 நாளில் தான் இந்த விற்பனை நடந்துள்ளதாகவும் சிலர் தெரிவித்துள்ளனர்.
-
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி!












Click it and Unblock the Notifications