ஐயா.. என் கிணத்துல இருந்த தண்ணிய காணோம்! வடிவேலுபோல் புகாரளித்த நபர் - மிரண்ட அதிகாரிகள்
திருவனந்தபுரம்: கேரள மாநிலம் திருச்சூர் அருகே கிணற்றில் இருந்த தண்ணீரை காணவில்லை என அதிகாரிகளிடம் ஒரு நபர் புகாரளித்திருப்பது வியப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
Recommended Video
கேரளா மாநிலம் திருச்சூரை அடுத்த வெங்கினிச்சேரி பகுதியை சேர்ந்தவர் சதீஷன்.
இவர் தனது வீட்டு தோட்டத்தின் அருகே கிணறு ஒன்றை தோண்டி அதிலிருந்து கிடைக்கும் தண்ணீரில் தனது குடிநீர் மற்றும் பிற தேவைகளுக்கும் பயன்படுத்தி வந்துள்ளார்

சதீஷனின் கிணறு
கிணற்றில் உள்ள ஊற்றுகள் மூலமாகவும், மழை நீர் மூலமாகவும் கிணத்தில் எப்போதும் தண்ணீர் இருந்து கொண்டே இருக்கும் நிலையில், ஒவ்வொரு நாளும் கிணற்றில் எவ்வளவு தண்ணீர் உள்ளது என்பதை சதீஷன் கிணற்றில் கட்டப்பட்டுள்ள கயிற்றின் உதவியுடன் அளவு கருவி மூலம் அளந்து வருவதை வாடிக்கையாக கொண்டிருந்தார். அந்த வகையில் கடந்த நான்கு நாட்களுக்கு முன்பாக சதீஷன் கிணற்றில் இருந்த தண்ணீர் அளவை பார்த்துள்ளார்.

தண்ணீர் மாயம்
அப்போது கிணற்றில் 18 அடி அளவுக்கு தண்ணீர் இருந்திருக்கிறது. மேலும் ஊற்றில் இருந்தும் தண்ணீர் வந்து கொண்டிருந்தததை அவர் கவனித்து இருக்கிறார். இதனை தொடர்ந்து மறுநாள் காலை அவர் கிணற்றை பார்த்த போது கிணறு வறண்டு கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். கிணற்றில் இருந்த 18 அடி தண்ணீரும் மாயமானதால் அதிர்ச்சி அடைந்த சதீஷன், அதற்கான காரணத்தை அறிய கிணற்றை சுற்றிலும் பார்த்து இருக்கிறார்.

அதிகாரிகளிடம் புகார்
கிணற்றின் அடிப்பகுதியில் உடைப்பு ஏதாவது ஏற்பட்டிருக்குமா? என்றும் அவர் கவனித்து உள்ளார். தண்ணீர் குறைந்ததற்கான தடயமே தெரியவில்லை. தனது கிணற்றில் மாயமான தண்ணீர், அருகில் உள்ள கிணறுகளில் தேங்கி இருக்குமா என்ற சந்தேகத்தில் அண்டை வீடுகளில் இருந்த கிணறுகளையும் அவர் பார்த்துள்ளார். எதற்கும் விடை கிடைக்காததால் விரக்தியடைந்த சதீஷன் இதுபற்றி மண்வளத்துறை மற்றும் புவியியல் பிரிவு அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளார்.

அதிகாரிகள் ஆய்வு
இதனை தொடர்ந்து அதிகாரிகள் சதீஷன் வீட்டுக்கு சென்று கிணற்றை பார்வையிட்டு இருக்கின்றனர். ஒரே நாள் இரவில் 18 அடி தண்ணீரும் மாயமாக வாய்ப்பு இல்லை எனக்கூறிய அதிகாரிகள், இது எப்படி நடந்தது என்பது பற்றி ஆய்வு செய்து வருகிறார்கள். ஆய்வு நடத்திய பிறகே இதற்கான காரணம் தெரியவரும் என அதிகாரிகள் கூறியுள்ளனர். இச்சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications