ராகுலுக்கு கேரளாவில் இவ்வளவு வரவேற்பா? அசரடித்த கூட்டம்.. முதல் பேரணியே மாஸ்!
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் தேர்தல் பிரச்சார பேரணிக்கு கேரளாவில் மிகப்பெரிய அளவில் கூட்டம் கூடி இருக்கிறது.
Recommended Video

திருவனந்தபுரம்: காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் தேர்தல் பிரச்சார பேரணிக்கு கேரளாவில் மிகப்பெரிய அளவில் கூட்டம் கூடி இருக்கிறது.
இன்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கேரளாவிற்கு வந்தார். கேரளா வயநாடு தொகுதியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி லோக்சபா தேர்தலில் போட்டியிடுகிறார். இவருடன் பிரியங்கா காந்தியும் கேரளாவிற்கு வந்து இருந்தார்.

வயநாட்டில் ராகுல் காந்தி இன்று வேட்புமனுத்தாக்கல் செய்தார். அதன்பின் அவர் கலந்து கொள்ளும் மாபெரும் பிரச்சார பேரணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. வேட்புமனுவை தாக்கல் செய்துவிட்டு நேரடியாக பிரச்சார பேரணியில் கலந்து கொண்டார்.

இதில் ராகுல் காந்தியுடன் பிரியங்கா காந்தியும் கலந்து கொண்டார். இந்த நிலையில் இந்த பிரச்சார பேரணியில் மிகப்பெரிய அளவில் மக்கள் கூட்டம் கூடி இருக்கிறது. அதிக எண்ணிக்கையில் மக்கள் இந்த பேரணியில் கலந்து கொண்டனர்.
இது "காசு கொடுத்து கூட்டிய கூட்டம் அல்ல" !
— vinuchakravarthy 🔥கடலூர்🇮🇳 (@vinu7vinugmail) April 4, 2019
"இது தானா சேர்ந்த கூட்டம்!😍
ராகுலை காண தானா வீதிக்கு வந்த கூட்டம்,
Thousands of people have gathered around #Wayanad, Kerala for @RahulGandhi@priyankagandhi@PChidambaram_IN @KartiPC @INCTamilNadu @KS_Alagiri@khushsundar pic.twitter.com/1EgQGpnXEH
கேரளாவில் உள்ள காங்கிரஸ் கட்சியினர் மட்டுமில்லாமல் அவரது கூட்டணியில் இருக்கும் பிற கட்சியை சேர்ந்தவர்களும் இந்த பேரணியில் கலந்து கொண்டார்கள். ராகுல் செல்லும் வழி முழுக்க கூட்டம் நிரம்பி வழிந்தது.
இந்த பிரச்சார கூட்டத்தின் வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி இருக்கிறது. மக்கள் ராகுலுக்கு பெரிய வரவேற்பு அளிக்கும் இந்த வீடியோ பெரிய ஹிட் அடித்துள்ளது.












Click it and Unblock the Notifications