முகநூலில் முகம் சுளிக்க வைக்கும் புகைப்படம்.. ரஹானா பாத்திமா கைது
Recommended Video
திருவனந்தபுரம் : சபரிமலை செல்ல முயன்று சர்ச்சைக்குள்ளான பெண்ணியவாதி ரஹானா பாத்திமாவை எர்ணாகுளம் போலீசார் கைது செய்தனர்
சபரிமலைக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்ற உச்சநீதிமன்ற உத்தரவை தொடர்ந்து, அக்டோபரில் கோவில் சிறப்பு பூஜைக்காக திறக்கப்பட்ட போது 8-க்கும் மேற்பட்ட பெண்கள் கோவிலுக்கு செல்ல முயற்சி செய்தார்கள்.
பெண்களை கோவிலுக்குள் அனுமதிக்க கூடாது என அய்யப்பன் பக்தர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அதனையும் மீறி, போலீஸ் பாதுகாப்புடன் செல்ல முயன்ற பெண்களை நடுவழியில் தடுத்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, சர்ச்சைக்குரிய பெண்ணியவாதி ரஹானா பாத்திமாவிற்கு எதிராக பல்வேறு விமர்சனங்கள் எழுந்தது.
சபரிமலை கோவிலுக்கு செல்வதற்கு முன்னதாக மாலை அணிந்து, விரதம் இருந்து அய்யபனை தரிசிப்பது வழக்கம். ஆனால், சபரிமலைக்கு கோவிலுக்கு செல்வதற்கு முன்பே வேறு விதமான ஆடையை அணிந்துக்கொண்டு அவர் முகநூலில் வெளியிட்ட புகைப்படம் பலரையும் முகம் சுளிக்கச் செய்தது. இதனையடுத்து அவர் மீது நடவடிக்கை எடுக்கும் படி காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
இந்தநிலையில், மத உணர்வுகளை இழிவுபடுத்தும் வகையில் முகநூலில் புகைப்படம் பதிவிட்ட ரஹானா பாத்திமா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, போலீசார் அவரை கைது செய்துள்ளனர்.