சபரிமலையில் போராட்டம் நடத்திய 1400 பேர் அதிரடி கைது!
சபரிமலை கோவிலில் பெண்கள் நுழைவிற்கு எதிராக போராடியவர்களை அம்மாநில அரசு தேடி தேடி கைது செய்து வருகிறது.
திருவனந்தபுரம்: சபரிமலை கோவிலில் பெண்கள் நுழைவிற்கு எதிராக போராடியவர்களை அம்மாநில அரசு தேடி தேடி கைது செய்து வருகிறது.
சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்று சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு வழங்கியது. இதையடுத்து கடந்த 17ம் தேதி சபரிமலை கோவிலில் நடை திறக்கப்பட்டது.
ஆனால் கோவிலுக்குள் பெண்கள் நுழைய கடும் எதிர்ப்பு நிலவியது. இந்துத்துவா அமைப்பினர், பாஜகவினர் பெண்கள் நுழைவிற்கு எதிராக தீவிரமாக போராடினார்கள்.
[நெஞ்சில் கையை வைத்து தள்ளி விட்டார்.. டிஎஸ்பி மீது பெண் எஸ்ஐ பரபர புகார்]

போராட்டம் செய்தனர்
இந்த போராட்டம் காரணமாக சில பெண்கள் தாக்கப்பட்டனர். போலீசார் கூட தாக்கப்பட்டனர். பல வாகனங்கள் மீது மக்கள் தாக்குதல் நடத்தி சேதம் விளைவித்தனர். இது கேரளாவில் 5 நாட்கள் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது.

மீட்டிங் நடத்தினார்
ஆனால் இத்தனை கலவரமும் நடந்த போது கேரளா முதல்வர் பினராயி அதில் பெரிய அளவில் எந்த எதிர்வினையும் ஆற்றவில்லை. இதையடுத்து நேற்று மாலை கேரளா முதல்வர் முக்கியமான ஆலோசனை கூட்டம் ஒன்றை நடத்தினார். போலீசார், ஐஏஎஸ் அதிகாரிகள், வழக்கறிஞர்களுடன் ஆலோசனை செய்தார்.

கைது செய்தார்
இந்த நிலையில் தற்போது சபரிமலை கோவிலில் பெண்கள் நுழைவிற்கு எதிராக போராடியவர்களை அம்மாநில அரசு தேடி தேடி கைது செய்து வருகிறது. கேரளாவில் மொத்தம் 1400 பேர் ஒரே நாளில் கைது செய்யப்பட்டு இருக்கிறது. பத்தினம்திட்டா, திருவனந்தபுரம், கோழிக்கோடு, எர்ணாகுளம் ஆகிய பகுதிகளில் இருந்து நிறைய பேர் கைதாகி உள்ளனர்.

வழக்கு உள்ளது
கைதானதில் 90 சதவிகிதம் பேர் ஆர்எஸ்எஸ் போன்ற இந்துத்துவா அமைப்பை சேர்ந்தவர்கள். அதேபோல் 2000 பேர் மீது 256 பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டு இருக்கிறது. இவர்கள், விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்று கூறப்பட்டுள்ளது. இந்த கைதுகள் அம்மாநிலத்தில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications