"கேரளா குண்டுவெடிப்பிற்கு நான்தான் காரணம்.." கொச்சியை சேர்ந்த இளைஞர் போலீஸில் சரண்.. பகீர் தகவல்
கொச்சி: கேரளாவில் இன்று காலை நடந்த குண்டுவெடிப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது தொடர்பாக போலீஸ் நிலையத்தில் ஒருவர் சரணடைந்துள்ளார்.
கேரளாவின் களமச்சேரியில் உள்ள மத வழிபாட்டு அரங்கில் இன்று சிறப்புப் பிரார்த்தனை கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்தக் கூட்டத்தில் சுமார் 2,000 பேர் கலந்து கொண்டனர்.

அப்போது அனைவரும் பிரார்த்தனை செய்து கண்டிருந்த போது திடீரென வெடிச் சத்தம் கேட்டுள்ளது. அடுத்தடுத்து வெடிச் சத்தம் கேட்ட நிலையில், பிரார்த்தனை கூடத்தில் பல இடங்களில் தீ பற்றியுள்ளது. இதனால் பதறியடித்து கொண்டு அங்கிருந்து பலரும் சிதறி ஓடியுள்ளனர்.
இந்தச் சம்பவத்தில் அங்குப் பெண் ஒருவர் உயிரிழந்தார். மேலும், 35க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். அவர்களுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், இந்த குண்டுவெடிப்பிற்கு நான்தான் காரணம் என்று கூறி ஒருவர் தானா போலீஸ் நிலையத்திற்குச் சென்றுள்ளார். கொடைகரை போலீஸ் நிலையத்திற்குச் சென்ற அந்த நபர், குண்டுவெடிப்பைச் செய்தது தான்தான் எனக் கூறியுள்ளார். அது தவிர அவர் பெயர், வயது உட்பட வேறு எந்தவொரு தகவலையும் கேரளா போலீசார் பகிரவில்லை. அவர் மனநிலை பாதிக்கப்பட்டவராக இருக்கலாம் என்றே போலீசார் கருதுகின்றனர்.
அதேபோல திரிஸ்சூரில் குஜராத்தைப் பூர்வீகமாகக் கொண்ட அந்த ஒருவரையும் போலீசார் பிடித்து விசாரணை செய்து வருகின்றனர்.அவரது பேக்கை பரிசோதனை செய்த போலீசார், அதில் சந்தேகத்திற்கிடமான சில ஆவணங்களைக் கைப்பற்றியதாகக் கூறப்படுகிறது.
அவரது பேக்கில் இருந்து சில ஆவணங்கள் மற்றும் படங்களை போலீசார் மீட்டுள்ளனர். குஜராத்தைப் பூர்வீகமாகக் கொண்ட அந்த நபரிடம் குண்டு வெடிப்பு தொடர்பாக முதலில் 15 நிமிடம் போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர். அவரது பதில்கள் சந்தேகம் அதிகரித்ததைத் தொடர்ந்து அவரை காவலில் எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
-
ஆரம்பிக்கும் மூன்றாம் உலக போர்.. வெளியே வந்த டூம்ஸ்டே மீன்.. அலறும் உலக நாடுகள் -
கூட்டுறவு வங்கி தங்க நகை கடன் + மகளிர் உரிமை தொகை! கனிமொழி பிரம்மாஸ்திரம்! ஸ்டாலின் முக்கிய முடிவு -
தேசிய ஜனநாயக கூட்டணியில் விஜய்.. நெருங்கும் பேச்சுவார்த்தை.. ஒரே வார்த்தையில் உடைத்த சரத்குமார் -
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
எங்க கொண்டு போய் விட்டுடுச்சி பாருங்க.. கேஸ் தட்டுப்பாட்டால், ஸ்விக்கி, ஜொமோட்டோ டெலிவரி குறைந்தது! -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்கா இனி பிக்பாஸ் இல்லை.. நீங்க நம்பலைனாலும் அதான் நெசம்.. ஐக்கிய அரபு சகாப்தமும் வீழ்ந்தது! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
3 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய்யை வாங்கி குவித்த இந்திய நிறுவனங்கள்! ரஷ்யாவுக்கு கொட்டும் பண மழை! -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
கடலில் இறக்கப்பட்ட கண்ணி வெடி! எக்குத்தப்பாய் வந்து சிக்கிய அமெரிக்கா! வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வார்னிங் -
ஒருவேளை உண்மையா இருக்குமோ.. என்டிஏ கூட்டணியில் விஜய்! மாஜி அமைச்சர் கடம்பூர் ராஜூ சொன்ன வார்த்தை!












Click it and Unblock the Notifications